இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, October 31, 2007

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை

9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்தேன்...லி பாபு பஜ்ரங்கிதெஹல்கா: பாட்டியா சம்பவத்தில் மோடி உங்களுக்கு ஆதரவாக இருந் தாரா?
பஜ்ரங்கி: ஆமாம். எங்களுக்கு ஆதரவாக பக்கபலமாக இருந்தார். எல்லாமே மோடி கண்ட்ரோலியே இருந்தது. எங்களுக்கு உரிமைகள் தந்தார்.காவல்துறையினரிடம் வித்தியாசமாக கட்டளையை பிறப்பித்திருக்க வேண்டும். அதனால் அவர்களின் (சங்பரிவாரின்) முழுக் கட்டுப்பாட்டில் குஜராத் வந்தது.
தெஹல்கா: அவர்களே கட்டுப் பாட்டை வைத்துக் கொண்டார்களா?
பஜ்ரங்கி: அவர்களே நகரம் முழுவதையும், குஜராத் முழுவதையும் இரண்டு நாள் கட்டுப்பாட்டில் வைத்திருந் தார்கள். இரண்டு நாள் தான் கட்டுப் பாட்டில் வைத்திருக்க முடிந்தது. அதற்கிடையில் டெல்லியிலிருந்து அழுத்தங்கள் வர ஆரம்பித்தன. சோனியாலிவோனியா விடமிருந்து புகார்கள் வர ஆரம்பித்து விட்டன.
இந்த வெறியன் தான் கவுசர் பானு என்ற 9 மாத கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்துவிட்டு தாயையும், சேயையும் கொளுத்திய கொடுமையை பெருமையாகக் கூறிய அவன் முஸ்லிம்களைக் கொன்றதனால் நான் ராணா பிரதாப் சிங்கைப் போல உணர்ந்தேன் என்றான்.
காவல்துறையினர் எங்களுக்கு தோட்டாக்கள் உள்பட எல்லாம் வழங்கினார்கள் என்று கூறிய பாபு பஜ்ரங்கி போன்ற பயங்கரவாதிகள் மற்றும் காக்கி உடையில் நடமாடிய காவி பயங்கரவாதிகளின் கோரச் செயல்களைக் கண்டு உலகம் வேதனையில் ஆழ்ந்தது. இந்த மாமிச வெறியர்களின் ரத்த வேட்டையைக் குறித்தும், முகமூடி கிழித்தெறியப்பட்ட கயவர்களின் கயமைத் தனம் குறித்தும் முழுவதும் விவரிக்கப் புகுந்தால் இந்த நாடும், இந்த ஏடும் தாங்காது.
தெஹல்கா அம்பலப்படுத்திய இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படு கொலையில் கயவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை தமுமுக இணைய தளத்தில் வீடியோவாக காண்க

No comments:

Web Counter Code