இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Friday, January 16, 2009

மாலேகான் வழக்கின் கதி?
தீவிரவாதத் தடுப்பு படையினர் அச்சம்!

மாலேகான் குண்டு வெடிப்பில் சங் பரிவாரின் கோர முகத்தை தோலுரித் துக் காட்டியவர் மாவீரன் ஹேமந்த் கர்கரே. ஹிந்துத்துவ பாசிச சக்திகள் விஷயத்தில் நாட்டு மக்கள் எச்சரிக்கை காட்ட வேண்டிய முக்கியமான தருணத்தில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.


கர்கரேயின் திடீர்மறைவு மகாரஷ்ட்ர மாநில தீவிரவாதத்தடுப்பு படையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள் ளது. மாலேகன் குண்டு வெடிப்பு வழக்கு முன்பு போல் துரித கதியில் இயங்குமா? மாநில அரசிடம் இருந்து முன்பு போலவே ஒத்துழைப்பு கிடைக் குமா என்ற அச்சத்தில் தீவிரவாதத் தடுப்புப் படையினர் ஆழ்ந்துள்ளனர்.


அஞ்சா நெஞ்சன் கர்கரே இன்று இல்லை. கர்கரேவுக்கு பல்வேறு வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய தீவிரவாதத் தடுப்பு படைக்காக பிரத்யேகமாக விமானத்தையே வழங் கிய சரத்பவாரின் தேசியவாதக் கட்சியைக் சேர்ந்த துணை முதல்வர் ஆர்.ஆர் பாட்டீல் இன்று பதவியில் இல்லை. இத்தகைய நிலையில் இந்த வழக்கு குறித்த கவலை காவல்துறை வட்டாரத்தில் பரவலாக நிலவுகிறது.


இருப்பினும் கர்கரேயின் தியாகம், அவர் பாடுபட்டதற்கான உரிய பலனை அடையாமல் விடக்கூடாது என்ற உறுதியில் தீவிர தடுப்புப் படையினர் உள்ளனர்.


மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணையின் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம் என்கிறார் தீவிர வாதத் தடுப்புப் படையின் கூடுதல் ஆணையர் சுக் விந்தர் சிங்

No comments:

Web Counter Code