

திருக்குர்ஆன் பிரதிகளை கரையில் இறக்க அனுமதி மறுப்பு!4000 குர்ஆன் பிரதிகள் நடுக்கடலில் பறிமுதல்!
சர்ஜுன்
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தில் திருக்குர்ஆன் பிரதிகள் கொண்டு வரப்பட்ட பெட்டகத்தை தரை இறக்க சுங்கத் துறை அனுமதி மறுத்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
கோரெவல்லி கிராமத்தில் உள்ள டூபன்னி என்ற முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது.
4000 குர்ஆன் பிரதிகள் மற்றும் பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்ட 500 குறுந்தகடுகளும் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் விற்பனைக்காக அனுப்பப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஆன் பிரதிகள் மற்றும் குறுந்தகடுகள் அனைத் தும் டூபன்னி கடற்கரையோர மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவே அனுப் பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான ஆவணங்கள் இல்லாமை யால் சம்பந்தப்பட்ட பொருட்களை கரை யிறக்க அனுமதிக்க முடியாது என முந்த்ரா துறைமுக சுங்கத்துறையின் உதவி ஆணை யர் அசோக் நகாடே தெரிவித்தார்.
குர்ஆன் பொதுமக்களுக்கு விநியோ கிப்பது ஒன்றும் சட்டவிரோதமான காரியமல்ல. எனவே அதனை கரை யிறக்க அனுமதி மறுத்தது தவறு என பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்த னர். விசாரணைகளின் முடிவில் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதே சரியானதாக இருக்க முடியும் என சமூகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த 4000 குர்ஆன் பிரதிகளும் காரவல்லியில் உள்ள அப்துல் கய்யூம் கான் என்பவருக்கு அனுப்பப்பட்டுள் ளது. இவர் காரவல்லியில் ஜாமியா தாருல் மஸீஹா என்ற பெயரில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது பாட்டனார் ஹாஜி தலில்கான் என்ப வரால் 1952ல் தொடங்கப்பட்டதாகும்.
அப்துல் கய்யூமின் தந்தையார் ஹைதர் கான் துபையில் பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த குர்ஆன் பிரதி கள் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி யிருக்கிறார். நான் முறையான ஆவணங்களை சமர்ப்பித்திருக் கிறேன். ஒவ்வொரு குர்ஆன் பிரதியை யும் குறுந்தகடையும் சோதித்த பின்னரும் இன்னும் அனுமதி மறுப்பது உரிமை மீறலாகும் என அப்துல் கய்யூம் தெரிவித்தார்.
அப்துல் கய்யூமின் தாருல் மஸீஹா மதரஸா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜாமியா ஸலஃபியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் வருவதாகும். துபையில் உள்ள குஜராத் வாழ் முஸ்லிம்கள் மன முவந்து தந்த அன்பளிப்புகளால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதி களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?
இஸ்ரேலுடன் இந்திய அரசு வைத்திருக்கும் கூடா நட்பு தன் வேலையைக் காட்டுகிறதா?
சர்ஜுன்
குஜராத் மாநிலத்தில் முந்த்ரா துறைமுகத்தில் திருக்குர்ஆன் பிரதிகள் கொண்டு வரப்பட்ட பெட்டகத்தை தரை இறக்க சுங்கத் துறை அனுமதி மறுத்துள்ள கொடுமை நிகழ்ந்துள்ளது.
கோரெவல்லி கிராமத்தில் உள்ள டூபன்னி என்ற முஸ்லிம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காக இந்த குர்ஆன் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி, கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ளது.
4000 குர்ஆன் பிரதிகள் மற்றும் பல்வேறு ஹதீஸ்கள் பதிவு செய்யப்பட்ட 500 குறுந்தகடுகளும் அங்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அவையனைத்தும் விற்பனைக்காக அனுப்பப்பட்டவையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குர்ஆன் பிரதிகள் மற்றும் குறுந்தகடுகள் அனைத் தும் டூபன்னி கடற்கரையோர மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காகவே அனுப் பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சரியான ஆவணங்கள் இல்லாமை யால் சம்பந்தப்பட்ட பொருட்களை கரை யிறக்க அனுமதிக்க முடியாது என முந்த்ரா துறைமுக சுங்கத்துறையின் உதவி ஆணை யர் அசோக் நகாடே தெரிவித்தார்.
குர்ஆன் பொதுமக்களுக்கு விநியோ கிப்பது ஒன்றும் சட்டவிரோதமான காரியமல்ல. எனவே அதனை கரை யிறக்க அனுமதி மறுத்தது தவறு என பிரபல பத்திரிகையாளர்கள் தெரிவித்த னர். விசாரணைகளின் முடிவில் அதனை உரியவரிடம் ஒப்படைப்பதே சரியானதாக இருக்க முடியும் என சமூகவியலாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த 4000 குர்ஆன் பிரதிகளும் காரவல்லியில் உள்ள அப்துல் கய்யூம் கான் என்பவருக்கு அனுப்பப்பட்டுள் ளது. இவர் காரவல்லியில் ஜாமியா தாருல் மஸீஹா என்ற பெயரில் அஹ்லே ஹதீஸ் பள்ளிவாசல் ஒன்றை நடத்தி வருகிறார். இது அவரது பாட்டனார் ஹாஜி தலில்கான் என்ப வரால் 1952ல் தொடங்கப்பட்டதாகும்.
அப்துல் கய்யூமின் தந்தையார் ஹைதர் கான் துபையில் பணிபுரிந்து வருகிறார். அவர் இந்த குர்ஆன் பிரதி கள் மற்றும் குறுந்தகடுகளை அனுப்பி யிருக்கிறார். நான் முறையான ஆவணங்களை சமர்ப்பித்திருக் கிறேன். ஒவ்வொரு குர்ஆன் பிரதியை யும் குறுந்தகடையும் சோதித்த பின்னரும் இன்னும் அனுமதி மறுப்பது உரிமை மீறலாகும் என அப்துல் கய்யூம் தெரிவித்தார்.
அப்துல் கய்யூமின் தாருல் மஸீஹா மதரஸா உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ஜாமியா ஸலஃபியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் கீழ் வருவதாகும். துபையில் உள்ள குஜராத் வாழ் முஸ்லிம்கள் மன முவந்து தந்த அன்பளிப்புகளால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதி களை தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு என்ன நிர்பந்தம் வந்தது?
இஸ்ரேலுடன் இந்திய அரசு வைத்திருக்கும் கூடா நட்பு தன் வேலையைக் காட்டுகிறதா?
No comments:
Post a Comment