13 வருடம் தலைமறைவாக இருந்த போஸ்னிய இனப்படுகொலையாளன் பிடிபட்டான்
1992ல் இருந்து 1995 வரை போஸ்னி யாவில் 8,500 முஸ்லிம்கள் துள்ளத்து டிக்க கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.
கருணையின்றி கொடூரமாக கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானவர்கள் எத்தனை பேர்? உயிருக்கு அஞ்சி, ஓடி அடர்ந்த காடுகளில் ஒளிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் திரும்பினார்களா? என தெரியாத நிலையில் போஸ்னியா-ஹெர்ச கோவினா, பிணங்களின் கூடார மாக விளங்கின.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப்பெரும் இனப் படுகொலையாக போஸ்னியா படுகொலைகள் வரலாற்றில் குறிக் கப்படுகின்றன.
போஸ்னியாவில் பலியானவர் களின் விவரங்களை செயற்கைக் கோள் படங்களின் வழியாக உலகம் உண்மையைத் தெரிந்து கொண்டது.
அதன்பிறகும் போஸ்னியா மக்களின் சோகம் சொல்லி மாளாது. கண்டெடுக்கப் பட்ட உடல்கள் தங்களுடைய உறவினர் களுடையதா? என அறிந்துகொள்ள மரபணு சோதனைகள் செய்யப்பட்டன. தோண்டப்பட்ட உடல்கள் மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்தப் படுகொலை களுக்கு காரணமான வன்கொலையாளி கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சர்வதேச காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. முன்னாள் செர்பிய அதிபர் சுலோபதன் மெலோசெவிக் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிறையில் தண்டனை நாட்களைக் கழித்து வந்த சுலோபதன் மிலோ செவிக் சிறையிலே மாண்டு போனான்.
பால்கன் யுத்தத்தின் முடிவுக் குப் பிறகு போஸ்னியாவை புரட்டிப் போட்ட மனித மிருகங் கள் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்டவர்களில் போஸ்னியா-ஹெர்சகோவினா பகுதியில் எல்லைப்புறத்தை ஒட்டிய நாட் டின் அதிபராக 1992ல் இருந்து 1995 வரை ரதவான் கார்ட்சிக் போஸ் னிய மக்களைக் கொன்று குவித்ததை வரலாறு மறக்காது. போஸ்னிய தலைநகர் சரஜிவோவை 43 மாதங்கள் முற்றுகை யிட்டு தனது கூலிப்படையினால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற இந்த மாபாதகன் 13 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.
சர்வதேச சமூகத்தால் தேடப்பட்டு வந்த இனப்படுகொலையாளன், 50 மில்லியன் டாலர்கள் தலைக்கு அமெரிக்காவில் விலை அறிவிக்கப்பட்ட ரதவான் கர்ட்சிக் பெல்கிரேடு நகரத்தில் நீண்ட தாடியுடன் போலியான பெயருடன் நடமாடிய முன்னாள் அதிபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான். உலகமகா கொலைகாரனைத்தான் தாங்கள் பிடித் தோம் என்பது அப்போது பெல்கிரேடு நகர காவலர்களுக்கு தெரிந்திருக்காது.
பிளாட்பாரத்தில் வாழ்ந்து கொண்டு நாடோடிக் கும்பலுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் போல் திரிந்த இனப்படுகொலையாளன் பிடிபட்டபோது அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இவன் கவிஞன், டாக்டர் என பல்வேறு வேடம் தரித்தும் வாழ்ந்து வந்திருக்கிறான்.
மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் டெனாவிக்கின் வீட்டின் அருகில்தான் ரதவான் கரட்சிக் இதுவரை தலைமறை வாக வாழ்ந்து வந்திருக்கிறான்.
செரப்னிக்கா படுகொலையில் மாண்ட மக்களின் உடல்களைக் கண்டுபிடித்து மீண்டும் புதைத்தவர் ஆவார். இவரது வீட்டின் அருகில் பிடிபட்டதைக் கூறும்போது ''இந்த மொடாக்குடியன் தானா?'' இந்த பெரும் இனப்படுகொலை யாளன் என வியந்து போனார் யாஸ்மின்.
ரதவான் கார்ட்சிக் என்ற இனப் படுகொலையாளன் பிடிப்பட்டிருக் கிறான். மற்றும் பல இனப்படுகொலை யாளர்கள் வெள்ளை மாளிகையிலும், ஏன் இந்தியாவில் குஜராத்திலும் இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் பிடிப்பட்டு தண்டிக் கப்படுவது எப்போது?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment