இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, November 14, 2007

ராஜஸ்தான்
மார்க்க அறிஞர்கள் கைது லி சித்திரவதை! பாஜக அரசு அட்டூழியம்!

ஹபீபா பாலன்

அஜ்மீர் தர்ஹாவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பள்ளிவாசல் இமாம்களை துன்புறுத்தி கைது செய்யும் போக்கு ராஜஸ்தான் மாநில முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமலான் மாதம் கடைசி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நிகழ்ந்த அந்த அசம்பாவிதத் தில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அந்த சம்பவத்திற்கு தொடர்புடையவர்களாக பள்ளிவாசல் இமாம்களை கைது செய்தது அராஜகத்தின் உச்சக்கட்டமாகும் என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அஜ்மீர் தர்ஹா குண்டு வெடிப்புக்காக துப்பறிய அமைக்கப்பட்ட சிறப்புக் காவல் படை, இதுவரை 12 இமாம்களை சிறையில் அடைத்துள்ளது. பள்ளிவாசல் பேஷ் இமாம், மவ்லவிகள் மற்றும் மதரஸா ஆசிரியர்கள் இந்தப் பட்டியலில் அடங்கு வர். அந்த அப்பாவி மவ்லவிகளை நீதிமன்றத்திலும் ஆஜர்படுத்தாமல் காவல் துறை லாக்அப்லிகளிலேயே அடைத்து தாக்கி துன்புறுத்துவதாகவும் முஸ்லிம் அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

சட்டவிரோதமாக வளைத்துச் செல்லப் பட்ட அவர்களிடம் துன்புறுத்தி தீவிரவாத ஆதரவு ஒப்புதல் வாக்குமூலங்களை வாங்கியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குஷிபுர் ரஹ்மான் என்ற மதரஸா ஆசிரியர் ஜார்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். ஷிகார் மாவட்டத்தில் உள்ள கண்டேலா கிராமத்தின் பள்ளிவாசல் பேஷ்இமாமான அப்துல் ஹபீஸ் ஷமீம் சட்டவிரோதமாக வளைக்கப்பட்டார்.

ச்ரூ மாவட்டத்தின் சர்தாசாஹர் பகுதியில் உள்ள மதரஸா ஜாமியா லத்தீஃபிய்யாவின் ஆசிரியரான ரஹ்மான், மற்றும் மகராஷ்ட்ரா மாநிலத் தின் உஸ்மானாபாத் பகுதியைச் சேர்ந்த மவ்லவி இம்ரான் அலி உட்பட 12க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தான் காவல்துறை யினரால் சட்டவிரோத காவலில் வைக்கப் பட்டு துன்புறுத்தப்பட்டனர்.

குண்டு வெடிப்பினால் இழப்பினை சந்தித்த முஸ்லிம்களை ஆறுதல்படுத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க திராணியற்ற ராஜஸ்தான் பாஜக அரசு, முஸ்லிம் மார்க்க அறிஞர்களை துன்புறுத்தும் செயல் உள்நோக்கம் கொண்ட ஈனத்தனமான செயல்.

முஸ்லிம்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கடும் கொந்தளிப் பினை ஏற்படுத்தியது.

உண்மைக் குற்றவாளிகளை கண்டு பிடிக்க எத்தகைய முயற்சியும் மேற் கொள்ளாமல் முஸ்லிம்களை மட்டுமே வஞ்சம் தீர்க்கும் செயல் மூலம். குண்டு வைத்த சதிகாரர்களுக்கும் தங்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்பதை நிரூபிப்பதாகவே இச்செயல் உள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் ஆத்திரம் கொப்பளிக்க கருத்து தெரிவித்தனர்.

மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட மவ்லவி இம்ரான் அலி உள்பட மற்றவர் கள் விடுவிக்கப்படவில்லை. இது மனித உரிமையையும் அரசியல் சாசனத்தையும் மீறிய செயல் என ராஜஸ்தான் முஸ்லிம் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் காரி மொயினுத்தீன் தெரிவித்துள்ளார்.

அப்பாவி முஸ்லிம்கள் 3000 பேர்களை போலி என்கவுண்டர் மூலமும் நெருப்பிலிட்டும் கொன்றும் கொன்ற குஜராத் அரசைப் போன்று ராஜஸ்தான் பாரதீய ஜனதா அரசும் மனித உரிமை களை காலில் போட்டு மிதிக்கிறது. இந்நிலையில் கர்நாடகாவில் உடுப்பியை யும் மங்களூரையும் கலவரக் காடாக்கி யவர்கள் முதல்வர் பதவியை பிடித்துள்ள னர். இது சமூகநல ஆர்வலர்களையும் தேசப்பற்றாளர்களையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

மனித உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் இத்தகைய சக்திகள் தண்டிக்கப் படுவது எப்போது?

No comments:

Web Counter Code