இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 5, 2008

டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் எழிலுறுமா?


டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜும்ஆ மஸ்ஜித் முகலாய மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும். ஒன்றரை லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றும் வண்ணம். மிகப் பிரம்மாண்டமாகவும் எழிலுறவும் அமைக்கப்பட்டுள்ள டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை மன்னர் ஷாஜகான் தனது அரச மண்டபமான டெல்லி செங் கோட்டையில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைத்தார்.
ஆனால், காலங்கள் செல்ல செல்ல அதிகமாக கடைகள் முளைத்தன. இந்நிலையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த வேண்டும்.

2008 மே 18ஆம் தேதிக்குள் ஆக்கிர மிப்புகளை அகற்றி டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதையும், சுற்றியுள்ள பகுதிகளை யும் அழகுபடுத்த வேண்டும் என்று 2006 அக்டோபர் மாதம் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால், இது தொடர்பான எவ்வித நடவடிக்கை யும் இன்னும் தொடங்கப்படவில்லை.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகு படுத்தும் பணியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள விஜய்சிங் இந்த திட்டத் தினை மீண்டும் திருத்தி வரைவு செய்வதாக அறிவித்திருக்கிறார்.

1979லில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவின்படி ஜும்ஆ மஸ்ஜிதைச் சுற்றியும் பள்ளிவாசல் வளாகங்கள் விரிந்திருந்தன என்ற உண்மை வெளி யானது. இந்நிலையில் டெல்லி மஸ்ஜிதின் பாரம்பரிய அழகைக் கெடுக்கும் வண்ணம் பல்முனை வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பெருமை மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் எழில் மீண்டும் மீட்கப்படுமா என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
வருடந்தோறும் 10 இலட்சம் மக்களைக் கொல்லும் அரக்கன்!

சப்ரன் ஹபீப்



இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமையாகி பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்து வோரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத் திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான ஆ சஹற்ண்ர்ய்ஹப்ப்ஹ் தங்ல்ழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ஸ்ங் ஈஹழ்ங் லி ஈர்ய்ற்ழ்ர்ப் லி நற்ன்க்ஹ் ர்ச் நம்ர்ந்ண்ய்ஞ் ஹய்க் உங்ஹற்ட் ண்ய் ஒய்க்ண்ஹ லிவும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் பட்ங் சங்ஜ் ஊய்ஞ்ப்ஹய்க் ஓர்ன்ழ்ய்ஹப் ர்ச் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங் என்ற பத்திரிக்கையும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.
பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் ஆவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது, அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். ஆனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

Thursday, February 21, 2008

உதயமானது கொசோவா
ஐரோப்பியாவில் மற்றொரு இஸ்லாமிய தேசம்!

அபூசாலிஹ்



கொசோவாவின் வரலாற்றில் இது ஒரு பொன்னாள். கொசோவா சுதந்திர நாடாக பிப்ரவரி 17 அன்று பிரகடனம் செய்யப்பட்டது.

ஐரோப்பாவில் மற்றுமொரு முஸ்லிம் தேசம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறி செர்பியர்களால் கொசோவா மக்கள் கொடூரமாக நசுக்கப்பட்டனர். செர்பியர் களின் இனசுத்திகரிப்பு கொள்கையால் ஏராளமான கொசோவா மக்கள் கருவறுக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வேதனைகளையும் மறக்க மாட்டோம், கொசோவாவில் வாழும் 10 சதவீத சிறுபான்மை செர்பியர்களையும் பழிவாங்க மாட்டோம், செர்பிய சமூகத் தினர் உரிய கண்ணியத்துடன் வாழ அனுமதிப்போம் என கொசோவாவின் பிரதமர் ஹாசிம் தாய்க் தெரிவித்தார்.

கொசோவா மக்களில் 99 சதவீதம் அல்பேனிய முஸ்லிம்கள். கொசோவா வின் மக்கள் தொகை 20 லட்சமாகும். செர்பியாவை ஆண்ட இனவெறி அதிபர் சுலோபோதன் மிலோசெவிச் வீழ்ந்த பிறகு 1999 முதல் செர்பிய பிராந்திய பகுதிகளில் நேட்டோ படைகள் முகா மிட்டு வந்தன. கொசோவா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து செர்பியாவில் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் நிம்மதி இழந்தன. செர்பியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறும் ஆறாவது தேசமாக கொசோவா விளங்குகிறது. சுலோவேனியா, குரோ ஷியா, மாசிடோனியா, மான்டிநீக்ரோ மற்றும் போஸ்னியா என அனைத்தும் செர்பிய ஆதிக்கத்திலிருந்து முன்னரே விடுதலைப் பெற்றுவிட்டன.
இவை முன்னர் செர்பியாவின் மாகாணங்களாக இணைக்கப்பட்டிருந்தன. செர்பியர்களின் கொடுங்கோன்மையால் போஸ்னிய முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங் களுக்கு ஆளாகினர். போஸ்னிய முஸ்லிம்களின் நிலைகண்டு உலகமே கண்ணீர் வடித்தது. 1995ல் போஸ்னியா, தன்னுரிமைப் பெற்றது. தற்போது கொசோவாவும் விடுதலைப் பெற்று விட்டது. மக்கள் வானவேடிக்கை களையும் பட்டாசுகளையும் வெடித்த தோடு தங்கள் வாகனங்களின் ஒலிப்பான் களை இடைவிடாது இயக்கக் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொசோவாவின் விடுதலையை எதிர்த்து செர்பியாவும், ரஷ்யாவும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. கொசோவா விடுதலைக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பையே தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கொசோவா வின் உதயம் ரஷ்யாவினால் அடக்கப் பட்டு வரும் செசன்யா விலும் விடுதலை வேட் கையைத் தூண்டிவிடும் என்பதே ரஷ்யாவின் அச்சம். அதனால் ரஷ்யா, கொசோவா விடுதலையை எதிர்க்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொசோவா விடுதலையை வரவேற்றிருக்கின்றன.

நேற்று போஸ்னியா, இன்று கொசோவா. நாளை செச்சன்யா! (இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாமிய உலகத்தின் ஆதரவு அவசியம்!

இஸ்லாமிய உலகத்தின் முழுமை யான ஆதரவு எங்களது புத்தம் புதிய சுதந்திர நாடான கொசோவாவுக்குத் தேவை என்றும், முஸ்லிம் உலகம் எங்கள் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கொசோவாவின் தலைமை இமாம் சப்ரி பஜ்கோரா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சின்னஞ்சிறிய நாடான கொசோவா வின் தொழில் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் நாடுகள் தங்கள் முதலீடு களின் மூலம் உதவிகள் புரிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வேலை தேடி தவிக்கும் நிலை ஏற்படு கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். கொசோவாவின் சாலைகள், ரயில் பாதைகள் 1998லி99ல் நிகழ்ந்த இன சுத்திகரிப்பு போரில் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கொசோவா பெண்கள் செர்பிய ராணுவ வெறிநாய்களால் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தை கள் தங்கள் பெற்றோரை இழந்து வாழ் கின்றனர்.

புதிய சுதந்திர நாடு கொசோவா இஸ்லாமிய உலகின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆக்கிரமிப்பினால் வீழ்த்தப்பட்ட முஸ்லிம் தேசங்களான ஈராக், ஆப்கா னிஸ்தான் என பார்த்து வேதனையுற்ற முஸ்லிம் சமூகத்திற்கு கொசோவாவின் உதயம் ஒரு புன்னகையை அரும்ப வைத்திருக்கிறது

Friday, January 18, 2008

கே.ஆர்.நாராயணனுக்கு பாரத ரத்னா விருது

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை மறைந்த குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு வழங்குவதாக அறிவிப்பதே பொருத்த மான தெரிவாக இருக்கும்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கடின உழைப்பாலும், தேர்ந்த கல்வியறி வாலும் எளிமைப் பண்புகளாலும் இந்தியாவின் முதல் குடிமகனாக உயர்ந்த கே.ஆர். நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அறிவிக்க வேண்டும் என்று கோரு கிறோம்.
இந்தியத் திருநாட்டில் வாழும் கோடான கோடி தலித் மக்கள், மற்றும் தலித் மக்களின் நலன் நாடும் சமூக உரிமை இயக்கங்களின் விருப்பமும் வேண்டுகோளும் இதுவே ஆகும்.
நாட்டு மக்களை சமய ரீதியாக பிளவு படுத்தும் பின்னணி கொண்டவர் அல்ல மறைந்த நம் கே.ஆர்.நாராயணன் 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படு கொலையைக் கண்டு மனம் பொறுக்காத கே.ஆர். நாராயணன் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக ராணுவத்தை ஏன் அனுப்ப வில்லை என நியாயம் கேட்டவர் என்பதை இந்த நாடு மறக்கவில்லை. தன் பதவிக்கு பெருமை சேர்த்த பெருமக னான கே.ஆர்.நாராயணனுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும்.

Wednesday, January 16, 2008

ஹஜ் கடமையை நிறைவேற்றிய முன்னாள் பாதிரியார்கள்
அபூசாலிஹ்

முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் என்னும் புனிதக் கடமையினை நிறைவேற்றி ஹஜ் பயணிகள் தாயகம் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
புனிதக்கடமையை நிறைவேற்றிய மகிழ்வுடன் திரும்பும் ஹாஜிகளிடையே புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முதன் முதலாக தங்களது இறைக்கடமையினை நிறைவேற்றியவர்கள் சிறப்பிடம் வகிக்கின்றனர். அத்தகைய சிறப்பிடம் பெற்ற ஹாஜிகளிடையே இரண்டு புனிதப் பள்ளிகளின் பராமரிப்பாளரும், சவூதி அரேபிய மன்னருமான அப்துல்லாஹ்வின் விருந்தினர்களாக புனித ஹஜ் கடமையினை நிறை வேற்றினர்.

பலர் தங்களது சொந்த உழைப்பின் ஊதியத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றினர். சில ஹாஜிகளின் பயணச் செலவுகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அறக்கட்டளை நிறுவனங்களும் ஏற்றன.

அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார்.

இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இந்த ஆண்டு அமெரிக்காவிலிருந்து 17 ஆயிரம் பேர் ஹஜ்ஜுக்காக சென்றனர்.

செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஒதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார்.

தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார்.

சிறைச்சாலைகளின் உள்ளே தனது பாதிரியார் பணியைத் தொடர்ந்தார். தனது பணியில் மிகுந்த தேர்ச்சி பெற்ற பின்னர் அனைத்து சமயங்களின் வேத நூல்களையும் படித்தார். அவர் ஆழ்ந்து படித்தவற்றில் திருக்குர்ஆனும் அடக்கம். நான் குர்ஆனை வாசித்த தருணங்களே என்வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது என தெரிவித்தார்.

நான் திருக்குர்ஆன் முதல் அத்தியாயமான அல் பகறாவை வாசித்தபோது சந்தேகமே இல்லை. இது நிச்சயம் வழிகாட்டக் கூடிய நூல் தான் என்பதை உணர்ந்தேன். என் இதயம் அதை விட்டு வேறங்கும் நகர மறுத்தது.

குர்ஆன் மீதான தனது மரியாதை அதிகரித்துக் கொண்டதாகக் கூறும் அவர் தனக்கு நேர் வழி காட்டுமாறு வல்ல இறைவனிடம் வேண்டியதாகவும் தெரிவிக்கிறார்.

ஒரு நாள் நான் எனது மடத்தை விட்டு வெளியேறினேன். அப்போது ஒரு மனிதன் தொழுகைக்காக பள்ளிவாசல் சென்று கொண்டிருந்தார். அவர் பெயர் சலீம் பாகில் அவரிடம் நான் உங்களோடு பள்ளிவாசல் வர விரும்புகிறேன் என்று கூறினேன். என்னை அன்போடு அழைத்துச் சென்றார். அவர் தொழுகை குறித்து தெளிவாக விளக்கினார். நான் நாள்தோறும் பள்ளிவாசல் செல்லத் தொடங்கினேன்.

ஒரு நாள் நான் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒரு சகோதரர் வந்து ஒளு செய்யும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார். உள்ளமும் உடலும் ஒரு சேர பரிசுத்த மானது போன்று உணர்ந்தேன்.

அன்றிலிருந்து அலி கவுதமாலா முஸ்லிம் ஆனார். அவருக்கு வீட்டிலிருந்தும், வெளியிலிருந்தும் பல பிரச்சினைகள் தோன்ற ஆரம்பித்தன யூத மதத்தில் தீவிரப்பற்று வைத்திருந்த அலியின் சகோதரி முஸ்லிம்கள் உன்னை கொல்லத்தான் போகிறார்கள் என மிரட்டியும் இருக்கிறார். எதைப் பற்றியும் கவலைப்படாத அவர் தனது ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்தேன். ஆகா அப்புனித பயண நாட்கள் என் வாழ்வின் அற்புதமானவை மறக்க முடியாதவை என்ற அலி எனக்கு ஹஜ் பயணம் சிறப்பான சந்தோஷத்தையும் படிப்பினைகளையும் தந்தது. அண்ணல் பெருமானார் (ஸல்) காலடித்தடங்கள் பதிந்த அந்தப்பகுதிகளில் நடந்து சென்றபோதும் கஃபத்துல்லாஹ்வை கண்ணால் கண்ட போதும் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றும் செவர்டூ ரோயிஸ் ஆக இருந்து அலியாக மாறிய முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சேர்ந்த முன்னாள் கிறிஸ்தவ பாதிரியார்கள் மூன்று பேரும் இந்த ஹஜ் புனிதக் கடமையினை நிறைவேற்றியுள்ளனர்.

இவர்கள் மூவரும் மார்க்க அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைத்திருந்த மதம் குறித்த விவாதத்தில் பங்கேற்று இஸ்லாத்தின் பரிபூரணத்துவம் மீது நம்பிக்கை கொண்டு முஸ்லிம்களாக மாறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மூன்று முன்னாள் மத குருக்களுக்கும் முறையே அப்துல்காதர், அப்துல் ரஹ்மான், அப்துல் ரஹீம் எனப் பெயரிடப்பட்டது.

அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைப்பு விடுத்த 'மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது. இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன.

Tuesday, January 1, 2008

Wednesday, December 26, 2007

மோடியை வெற்றிபெறச் செய்த காங்கிரஸ்

அபூசாலிஹ்

குஜராத்தில் மீண்டும் பாசிசம் படர்ந்து விட்டது. மனு அதர்ம ஆட்சி குஜராத்தில் குடிகொண்டு விட்டது. இதற்கு முக்கிய மாக மோடி நன்றி கூற வேண்டியது காங்கிரஸ்காரர்களுக்குத்தான்.

மோடி தன் மீதான குற்றச்சாட்டு களுக்கு பதிலளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த அதேவேளையில்தான் நேற்று மோடியோடு கூடிக் குலாவியர் களை அழைத்துக் கொண்டு பிரச்சாரத் தில் ஈடுபட்டது காங்கிரஸ்.

மோடிக் கூட்டத்தையும் மோடி இல்லாத காங்கிரஸ் கூட்டத்தையும் தனித்தனியே பார்த்தவர்களுக்கு பெரிதாக வேறுபாடு ஒன்றும் தோன்றவில்லை.

மோடியின் கட்சி ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஏ.பிரிவு அணி என்றால் குஜராத் மாநில காங்கிரஸ், ஆர்.எஸ்.எஸ்.ஸின் பி பிரிவு அணியாகவே கருதப்பட்டது. சங்கர்சிங் வகேலா உள்ளிட்ட நேற்றைய காக்கி டவுசர் பார்ட்டிகளுக்கு கதர் டவுசர் மாட்டி காங்கிரஸுக்கு அழைத்து வந்த போதே காங்கிரஸின் கொள்கை உறுதி(!) புலப்பட்டது.

காங்கிரஸ் தன் கொள்கை என்பது மதச்சார்பின்மை என்பதாக சொல்லிக் கொண்டது அவ்வாறே பாஜகவின் கொள்கை ஹிந்துத்துவா என்று சொல்லிக் கொண்டது.

காங்கிரஸின் கொள்கைக்கு பிதா மகன் 'காந்தி' என்பதைப் போல சங்கும்பல் கொள்கையின் பிதாமகன் கோட்சே என கருதப்படுகிறது.

57 வயதான நரேந்திர மோடி 1966ல் ஆர்.எஸ்.எஸ்.சில் சேர்கிறார். 1987ல் பாரதீய ஜனதாவில் முக்கிய செயலாற்றும் ஊழியராக உருவெடுக்கிறார்.
2001 அக்டோபரில் பாஜக சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு, பாஜக தேசிய தலைமையினால் குஜராத் முதலமைச்சர் பதவிக்கு நியமிக்கப்படு கிறார். அதுவரை பாஜகவின் முதல்வராக இருந்த சங்கர்சிங் வகேலாவும் கேசுவாய் கேசுபாய் பட்டேலும் ஓரங்கட்டப்பட்ட னர். அவ்வாறே 2002ல் நிகழ்ந்த குஜராத் இனப்படுகொலையில் தொடர்பு டையவர்களுக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. இந்த செயல் எரிகிற நெருப்பில் பெட்ரோல் ஊற்றியதாக அமைந்தது.

காங்கிரஸ் கட்சிக்கென ஒரு ஓட்டு வங்கி உண்டு. சிறுபான்மையினர், தலித்துகள், ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள்தான் காங்கிரஸின் ஓட்டு வங்கியாக கருதப்பட்டது.

விடுதலைப் பெற்ற காலத்திலிருந்து காங்கிரஸ் இந்த அடிப்படையிலேயே வாக்குகளைப் பெற்று வெற்றிகளைக் குவித்தது.

காங்கிரஸ் ஓட்டுவங்கியில் ஓட்டையைப் போட்டு மதவாதம் பேசி பாரதீய ஜனதா அரசியலில் வளரத் தொடங்கியது. எதிர்வினை ஆற்ற வேண்டிய காங்கிரஸ் அரசியல் போக்கைத் தீர்மானிக்கும் பாத்திரத்தை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டு பாஜகவின் பின்னால் செல்லும் அவல நிலையை அடைந்தது.

குஜராத்தில் தொழிற்சங்சங்கள் காவிமயமாயின. ஆதிவாசி மக்களை ஆதிக்க சாதியினர் தங்களின் விருப்பத் திற்கேற்ப ஆடும் பொம்மைகளாக மாற்றினர். ஏறக்குறைய பல்வேறு பிரிவு மக்களிடையேயும் விஷத்தை விதைத்து ஆதரவை அறுவடை செய்த பாஜகவுக்கு மத்தியில் டெல்லிக்கும் அகமதாபாத்துக் கும் சீசன் டிக்கெட் எடுத்து பயணம் செல்வதையே முழுநேரக் கடமையாக குஜராத் காங்கிரஸார் கொண்டனர்.

பாஜகவினரால் வளைக்க முடியாதவர் கள் முஸ்லிம்கள் மட்டுமே என்பது தெள்ளிய நீரோடையாக தெரிய வரவும் முஸ்லிம்களை கருவறுக்கும் விதமாகவே திட்டமிடலைத் தொடங்கினர் ஹிந்துவ சக்திகள்.

மதவெறி பரப்பப்பட்டு மனித நேயம் மாய்க்கப்படும் போது அதற்காக கிளர்ந்து எழவேண்டிய காங்கிரஸ் அமைதி காத்தது.

மோடி ராஜ்ஜியம் எழுச்சிபெற காங்கிரஸ் மவுன சாட்சியானது.

2002ல் நிகழ்ந்த இனப்படுகொலை குறித்தும் காங்கிரஸ் தனது எதிர்ப்பை மூர்க்கமாக தெரிவிக்கவில்லை. பரபரப் பான அரசியல் சூழலில் காங்கிரஸ் இருக்கும் இடமே தெரியவில்லை.

தீஸ்தா செதல்வாட்களும், அருந்ததி ராய்களும், எழுப்பிய போர்க்குரல் போல் காங்கிரஸ் குரல் எழுப்பவேயில்லை. முஸ்லிம்களின் குரல்வளைகள் நெறிக்கப்பட நெறிக்கப்பட, அதனை எதிர்த்து காங்கிரஸ் குரலெழுப்பவே இல்லை.

கோத்ரா சம்பவத்தைக்கூட லாலுவின் தீவிர முயற்சியால் நடுநிலையான நீதி விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட தால் கோத்ரா ரயில் எரிந்த சம்பவம் சதிச் செயல் அல்ல லி விபத்து என்ற விபரம் உலகிற்கு உணர்த்தப்பட்டது.

இம்மாதிரி ஒவ்வொரு நிகழ்வு களுக்கும் ஆர்த்தெழுந்து போர்க்களம் காணவேண்டிய காங்கிரஸ் பின்தங்கியது. காங்கிரசுக்கு மாற்றாக பிற சமூகநீதி இயக்கமோ அல்லது முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டு பிற சமுதாய மக்களோடு ஒற்றுமை பேணும் தமுமுக போன்ற சேவை அமைப்புகளோ குஜராத்தில் இல்லாமல் போனதால் குஜராத்தின் அப்பாவி முஸ்லிம்களுக்கு அடிமேல் அடிவாங்கும் நிலைக்கு கொண்டு சென்றது.

மோடி மீது குற்றம்சாட்டி காவல்துறை டி.ஜி.பி ஸ்ரீகுமார் 'நானாவதி கமிஷன்' முன் தொடர்ந்து வழங்கிய சாட்சியங்கள், ஜஹிரா ஷேக் பல்கிஸ் பானு, இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாகியா ஜாஃப்ரி யின் கோரிக்கைகள் போன்ற கருணை காட்டப்பட வேண்டிய பரிதாப ஜீவன்கள் விஷயத்தில் காங்கிரஸ் பாராமுகமாய் இருந்தது.

மோடியை வாக்குச்சீட்டின் மூலம் தண்டிக்கத் துடித்த முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தவித்துக் கொண்டிருந்தனர். தேர்தல் விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டதைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு யாரை நம்பி இவர்கள் தேர்தல் களத்தில் சென்றார் கள்?

சிங்கம் என்றால் கர்ஜனை புரிய வேண்டும். நரி என்றால் ஊளையிட வேண்டும். ஆனால் காங்கிரஸ் சிங்கம் கர்ஜனையை மறந்து காவி நரிகளைப் போல ஊளையிட முயன்றதுதான் பிரச்சினை.

தனக்கென உள்ள ஓட்டு வங்கியை பராமரிக்காமல் மோடிக் கூட்டத்தின் வாக்கு வங்கியைப் பார்த்து ஏங்கிக் கொண்டிருந்த நிலை கண்டு நடுநிலை யாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உள்ளூர் தளபதிகளாக முன்னாள் காவி கனவான்களை நிறுத்தி விட்டு ஓட்டு வேட்டையாட சோனியாவும், ராகுலும் வந்தனர். இருவரும் மோடியைக் குறித்து பிளந்து கட்டும் போது பாஜக வினர் மட்டுமல்ல, காங்கிரஸ் மேடையில் நின்று கொண்டிருந்த முன்னாள் பாஜகவினரும் நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தனர்.

உள்ளூரில் உருப்படியான தலைவர் களை வளர்தெடுக்காமல் விட்டதின் விபரீதத்தை காங்கிரஸ் இப்போதாவது புரிந்து கொண்டால் நலமாக இருக்கும்.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக ஆந்திராவில் அரசோச்சிக் கொண்டி ருந்த சந்திரபாபு நாயுடுவை எதிர் கொள்ள முடியாமல் காங்கிரஸ் திணறியது. ஆனாலும் ஆந்திர அரசிய லில் காங்கிரஸ் சார்பாக ராஜசேகர ரெட்டி முன்நிறுத்தப்பட்டார். அசைக்க முடியாத மலையென கருதப்பட்ட நாயுடு வீழ்த்தப் பட்டார்.

இவ்வாறே மத்தியப் பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் பாஜகவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டும் வண்ணம் வளர்ந்தனர் திக்விஜய் சிங்கும், அசோக் கெலாட்டும். இவ்வாறு மக்கள் தலைவர் களை குஜராத்தில் வளர்க்காததின் பலனை காங்கிரஸ் இப்போது அனுபவிக் கிறது.

காங்கிரசுக்கான வாக்குகள் அந்த மாநிலத்தில் கொட்டிக் கிடக்கிறது களத்து மேட்டு நெல்லைப் போல. அதனை களஞ்சியத்தில் கச்சிதமாகக் கொண்டு சேர்க்கும் சரியான உழைப்பாளி தற்போது இல்லை என்பதுதான் நிதரிசனம்.

குஜராத்தில் மோடி வென்றதால் ஹிந்துத்துவா அங்கே வாகை சூடியதாக பொருள் கொள்ள முடியாது.

குஜராத் காங்கிரஸ் தங்க தாம்பாளத் தில் வைத்து மோடிக்கு வெற்றியை வழங்கியிருக்கிறது. மோடியும் அவர் சகாக்களும் மனதிற்குள் காங்கிரஸுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்.

எதிர்காலத்தில் சங்பரிவாரின் வெற்றி களுக்கு தொடர்புள்ளி வைப்பதோ அல்லது முற்றுப்புள்ளி வைப்பதோ காங்கிரஸின் 'கை'களில் தான் இருக்கிற

Web Counter Code