இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Thursday, April 15, 2010

encounter news from abusalihஎன்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அபூஸாலிஹ்
















என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!





அபூஸாலிஹ்






என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்படும் முஸ்லிம் இளைஞர்கள்!





தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்!






காவல்துறையினரால் நடத்தப்படும் என்கவுண்டர்களில் கிட்டத்தட்ட சரிபாதி என்கவுண்டர்கள் போலி என்கவுண்டர்கள் என்று அழைக்கப்படும் காவல்துறை படுகொலைகள் என தேசிய மனிதஉரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.2008&ம் ஆண்டு டெல்லி ஜாமியா நகரில் பாட்லா ஹவுஸில் நிகழ்ந்த காவல் துறை என்கவுண்டரில் இரண்டு இளைஞர்கள் என்கவுண்டர் என்ற பெயரில் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தின் ஆஸம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் தலைநகர் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்று வந்தனர்.ஆதிஃப், சாஜித் என்ற இளைஞர்களை டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என குற்றம்சாட்டியும் அந்த குற்றவாளி களை(?) கையும், களவுமாக பிடிக்கப் போவதாக கூறிக்கொண்டு, டெல்லி ஜாமியா நகர் பகுதியில் ஜனநெருக்கடி மிகுந்த பகுதியில் என்கவுண்டர் செய்தது டெல்லி காவல்துறை. இந்த என்கவுண்டர் நாடகத்தில் காவல்துறை ஆய்வாளர் சர்மா என்பவரும் பலியானார். என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டான சர்மாவும் பலியானது டெல்லி மக்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. ஆதிஃப், சாஜித் இருவரும் போலி என்கவுண்டரில் தான் படுகொலை செய்யப்பட்டனர் என்றும், காவல்துறை அதிகாரி சர்மா சுட்டுக்கொல்லப்பட்ட விதமும் பலத்த சந்தேகத்தை ஏற்படுத் தியதாக மனித உரிமை ஆர்வலர் கள் அப்போது கடும் எதிர்ப்பு தெரி வித்திருந்தனர்.போலி என்கவுண்டரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் இருவரும் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் என்பதால் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், துணை வேந்தர் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் குதித்தனர். அன்றைய மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், ஜாமியா மில்லியா மாணவர்களின் போராட்டத்திற்கு தனது முழு ஆதரவும் உண்டு என அறிவித்தார்.இருப்பினும் பாட்லா ஹவுஸ் படுகொலையில் நீதி கிடைக்காத நிலையே நீடித்தது.இந்நிலையில் பாட்லா ஹவுஸ் படுகொலை நிகழ்ந்த 2008 செப்டம்பர் 19க்குப் பிறகு ஒரே வாரத்திற்குள் 24-09-2008ல் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி, முக்கிய கேள்விகள் அடங்கிய பட்டியல் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பப்பட்டது.டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் மாணவரும், சமூகநல ஆர்வலரும், 22 வயதேயான அஃப்ரோஸ் ஆலம்சாஹிப், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி வினாக் கள் விடுத்திருந்தார்.அவர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும், அவரால் குறித்த காலத்திற்குள் பதில் பெற முடிய வில்லை. பலதடவை முயன்ற பின்னரே அவர்கேட்ட தகவல்களை, தேசிய மனித உரிமை ஆணையத்திடமிருந்து பெற முடிந்தது.
1993&லிருந்து 2009 வரை நடைபெற்ற என்கவுண்டர்கள் உள்ளிட்ட முக்கிய வினாக்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் பதில் அளித்தது.1) 1993-லிருந்து இதுவரை நடைபெற்ற காவல்துறை என்கவுண்டர்களின் எண்ணிக்கை 2560.2) அதில் போலி என்கவுண்டர்கள் என கண்டறியப்பட்டது 1224. இரண்டு என்கவுண்டர்களில், ஒரு என்கவுண்டர் அப்பட்டமான, மனித உரிமை மீறலான படுகொலை என்பதும் தெரியவந்தது.3) மத கலவரங்கள் மற்றும் சாதிய வன்முறைகளில் 432 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.4)¢காவல்துறையினரின் கட்டுப் பாட்டில் நிகழ்த்தப்பட்ட சாவுகள் 2320.5) பெண்கள் மீதான வன்முறைகள் 4502.6) தலித்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் 17,998.7) அரசு அலுவலர்களால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் 224.8) தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை மேற்கொண்ட மொத்த வழக்குகளின் எண்ணிக்கை 16,784 என்பது குறிப்பிடத்தக்கது.9) 1224 போலி என்கவுண்டர் வழக்குகளில் 16 பேருக்கு மட்டுமே இழப்பீட்டுத்தொகை கொடுக்கப் பட்டுள்ளது.இத்தனை அரிய பட்டியலை வெளியிட முக்கிய காரணமாக இருந்தது பாட்லாஹவுஸ் என்கவுண்டர் சம்பவம்தான் என்பதனை மறந்திருக்க மாட்டார்கள்.டெல்லி மாநகர மக்களால் வன்மையாகக் கண்டிக்கப்பட்ட பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் கூட போலி என்கவுண்டரே என தேசிய மனித உரிமை ஆணையம் பட்டியலிட்டுள்ளது.போலி என்கவுண்டர் பட்டியலில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தைப் பிடித்தது. 1993 முதல் 2009 வரை 16 ஆண்டுகளில் 716 போலி என்கவுண்டர் படுகொலைகளை நிகழ்த்தி உத்தரப்பிரதேச காவல்துறையினர் சாதனை படைத்துள்ளனர். போலி என்கவுண்டர்களில் மூன்று இலக்க எண்ணை எட்டிப்பிடித்த உத்தரப் பிரதேசத்தை இந்தியாவின் எந்த மாநிலத்தாலும் தொடக்கூட முடிய வில்லை.போலி என்கவுண்டர் படுகொலை களில் உத்தரப்பிரதேசத்துக்கு அடுத்து பீகார் இரண்டாம் இடத்தை பெறுகிறது. இங்கு 79 போலி என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 73 போலி என்கவுண்டர் படுகொலையோடு ஆந்திரா மூன்றாவது இடத்திலும், 61 போலி என்கவுண்டர் சாதனைகளை(!) நிகழ்த்தி மகாராஷ்டிரா நான்காவது இடத்தையும் பெற்றுள்ளன. கடந்த 16 ஆண்டுகளில் அந்தமான்&நிக்கோபர் தீவுகளில் ஒரு சம்பவம் மட்டுமே போலி என்கவுண்டர் கொலை என கண்டறியப்பட் டுள்ளது.16 ஆண்டுகளில் தமிழகத்தில் 24 போலி என்கவுண்டர்கள் நிகழ்ந்தன. போலி என்கவுண்டர்களே நடக்காத மாநிலமாக நம் அண்டை மாநிலங்களாக கேரளா, புதுவை விளங்குகின்றன. இது மனிதஉரிமை பேணுபவர்களும், மனிதஉரிமையை மீறுபவர்களும் ஒரு சேர கூர்ந்து கவனிக்க வேண் டிய அம்ச மாகும்.போலி என்கவுண் டர்களில் ஹிந்துக்கள், சீக்கியர்கள், முஸ்லிம்கள் என பல்வேறு பிரிவினரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.போலி என்கவுண் டர்களில் முஸ்லிம் படுகொலைகளில் (வழக்கம்போல) குஜராத் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குஜராத் காவல்துறையினர் நிகழ்த்திய போலி என்கவுண்டர்களில் 60 சதவீதம் முஸ்லிம்களுக்கு எதிரானது. குஜராத்தில் நிகழ்ந்த 20 போலி என்கவுண்டர்களில் 12 முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். குஜராத் காவல்துறையினர். (இஸ்ரத்ஜஹான், ஷொராபுதீன் போலி என்கவுண்டர் படுகொலைகளை மறக்க முடியுமா?) அதிக அளவு முஸ்லிம்களை போலி என்கவுண்டர் செய்த பட்டியலில் உத்தரகண்ட மாநிலம் (31%) இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முஸ்லிம்களை போலி என்கவுண்டர் (26%) செய்த பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தது.உத்தரப்பிரதேசம் நான்காவது இடத்தையும் (18%), பீகார் 5வது இடத்தையும் பெற்றுள்ளது.தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்ட போலி என்கவுண்டர் பட்டியலை மாநில வாரியாக பார்ப்போம்.மேலும் காவல் நிலைய படுகொலைகள் குறித்த திடுக்கிடும் விவரங்களை தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.கடந்த 16 ஆண்டுகளில் 2318 பேர் காவல்துறை அதிகாரி களின் கட்டுப்பாட்டில் இறந்துள்ளனர்.காவல்நிலைய சாவுகளில் மகராஷ்ட்ரா மாநிலம் முதலிடம் பெறுகிறது. 316 பேர் மகாஷ்டிராவில் பலியாகியுள்ளனர்.இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேச மும் (255), மூன்றாம் இடத்தை குஜராத்தும் (190) நான்காம் இடத்தை பீகாரும் ஐந்தாம் இடத்தை மேற்கு வங்காளமும் பெறுகின்றன.கடந்த 16 ஆண்டுகளில் காவல் நிலைய சாவுகளில்1. மேற்கு வங்காளத்தில் 36 முஸ்லிம்களும்,2. அஸ்ஸாமில் 35 முஸ்லிம்களும்3. குஜராத்தில் 29 முஸ்லிம்களும்4. மகராஷ்ராவில் 27 முஸ்லிம்களும்4. உத்திர பிரதேசத்தில் 27 முஸ்லிம்களும்5. பீகாரில் 14 முஸ்லிம்களும்5. டெல்லியில் 11 முஸ்லிம்களும்6. கர்நாடகாவில் 11 முஸ்லிம்களும், காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையம் குறிப்பிடுகிறது.குஜராத்தில் காவல் நிலைய சாவுகளில் பட்டியலிடப்பட்ட 29 முஸ்லிம் உயிரி ழப்பு களில் 19 உயிரிழப்புகள். குஜராத் இனப் படுகொலை நிகழ்ந்த 2002&-ம் ஆண்டுக்குப்பிறகு நிகழ்ந்தவை யாகும்.அதைப் போன்று கர்நாடகாவில் காவல்துறை யினரின் கட்டுப்பாட்டில் 11 முஸ்லிம்கள் பலியான சம்பவங்கள் சமீப ஆண்டுகளில் நிகழ்ந் தவை என்பதும் தெரிய வருகிறது.51 பக்கங்களைக் கொண்ட தேசிய மனிதஉரிமை ஆணையத்தின் பட்டியல் உலுக்கும் பல்வேறு, உண்மைகளை உலகுக்கு உணர்த்தியுள்ளது என்றால் அது மிகையன்று.-

Tuesday, March 23, 2010

zahid azmi murder news article from abusalih


ஒடுக்கப்பட்டோருக்காக போராடிய ஷஹீத் ஆஷ்மி கொலை:
பலனடைந்த காவல்துறையும்&உளவுத்துறையும்!

தெஹல்கா பொறுப்பாசிரியர் அஜீத்சாகி குமுறல்!


சமீபத்தில் மும்பையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் ஷஹீத் ஆஸ்மி குறித்து தனது நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் தெகல்கா புலனாய்வு இதழின் அஜீத்சாகி.

ஷஹித் ஆஸ்மி ரஷ்யா விலோ சீனாவிலே சுட்டுவீழ்த் தப்பட்டிருந்தால் ஷஹித் ஆஸ்மி யின் படுகொலைச்செய்தி மறுநாள் காலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளி வந்திருக்கக்கூடும். எதிரியின் எதிரி நண்பன் என்ற கொள்கை அடிப்படையில் மேற்குலக மீடியாக்கள் இந்த கொலையை கண்டு கொள்ளவே இல்லை. வழக்கறிஞர் ஆஸ்மி இந்நாட்டில் வாழ்ந்து இந்நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய ஜனநாயக நாட்டில் காவல்துறையின் அரச பயங்கர வாதத்தை எதிர்ப்பது பயங் கரவாதத்திற்கு எதிரான போரை எதிர்ப்பதாக மாறியது.

ஏனெனில் இந்தியநாடு மேற் குலக சக்திகளின் கையுறை மாட்டிய கைகளில் இருக் கிறது. இந்தியாவின் பெரும் பான்மையான மத்திய தரவர்க்கம் மேற்குலக நட்பின் பக்கமே சாய்ந்திருக்கிறது. மேற்குலக மற்றும் இந்திய மீடியாக்கள் ஆஸ்மியை பாராட்ட விரும்பவில்லை. ஆஸ்மி மும்பையில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு குறிப்பாக முஸ்லிம் களுக்காக நீதி வென்றிட போராடிய அந்த வீரத்தியாகி பயங்கரவாத ஆதரவாளர் என பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்டார்.

ரஷ்யப் பிரதமர் விளாடிமீர் புடினுக்கு எதிராக தீரத் துடன் போராடி மூன்றாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட வீரப்பெண்மணி ரஷ்யப் பத்திரிகையாளர், மனித உரிமைப் போராளி அன்னாபொலிட் கோவ்ஸ்கியாவுக்கு இணையாக போற்றத்தக்கவர் வழக்கறிஞர் ஷஹித் ஆஸ்மி.

ரஷ்யாவிலோ, சீனாவிலோ, ஈரானிலோ அரசுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்ட வர்களாக இருந்தால் மேற்குலகம் அவர்களை விழுந்து விழுந்து ஆதரிக்கிறது.

ஆஸ்மியின் நீதிக்கான யுத்தம் அசாத்திய துணிச்சல்மிக்கது. அவர் அமெரிக்காவை எதிர்க்கும் குழுக்கள் என கூறப்படும் அல்காயிதா, தாலிபன் அமைப் பைச் சேர்ந்தவர்கள் என தவறாக குற்றம் சாட்டப்பட்ட வர்களுக்காகவும் ஆஸ்மி சட்டயுத்தத்தில் இறங்கினார். நான் நேரடியாக கேட்க விரும்புவதெல்லாம். ஷஹீதின் படுகொலையில் பயனடையந்தது இந்திய புலனாய்வுத்துறையில் இருப்பவர்கள் யார்? யார்? என்ற கேள்விக்கான பதில் தான் இதற்கான பதிலும், இந்திய உள்துறை அமைச்சகம், ரா, இன்டலிஜென்ட்ஸ் பீரோ போன்றவைகளால் கற்பிக்கப் பட்ட பயங்கரவாதம் என்ற கற்பிதத்தை உடைத்து ஒவ்வொரு வழக்கையும் ஜெயித்துக்காட்டினார்.

குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட ஏராளமான பேருக் காக வாதாடி அவற்றில் பெரும் பாலான வழக்குகளில் வெற்றி கண்டு மகாராஷ்ட்ரா காவல் துறையின் இழிசெயலை அம்பலப்படுத்தினார்.

2008ம் ஆண்டுவரை கைது செய் யப்பட்ட இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் ஏறக் குறைய ஒரு டஜன் பேருக்காக வாதாடி னார். குஜராத்தில் பல்வேறு பயங்கர வாதக் குற்றச்சாட் டுக்கள் சுமத்தப்பட்ட பலருக்கு சட்டப்பூர்வமான ஆதரவு கொடுத் தார் ஆஸ்மி.

கடந்த ஜுலை மாதத்தில் மும்பை மத்திய சிறைச்சாலையிலிருந்து ஆஸ்மிக்கு எதிரிகள் உருவானார்கள்.

சிறைச்சாலையில் பயங்கரவாத குற்றச்சாட்டுக்களுக்காக அடைக் கப்பட்டவர்களை சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கினார்கள். கொடூரமான தாக்குதல் தொடுத்த சிறை காவலர்களுக்கு எதிரான வழக்கில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற் றியை ஈட்டினார் ஆஸ்மி.

இந்த நிகழ்வு சிறைத்துறை மற்றும் காவல்துறை அதிகாரி களின் வெறுப்புக்கு தீனி போடு வதாக அமைந்தது.

கடந்த டிசம்பர் 11&ம் தேதி இந் நிகழ்வைக் குறித்து அவரது அலுவலகத்தில் என்னிடம் ஆஸ்மி கூறினார். சிறைக்காவலர்கள் கொடூரமாக தாக்கிய வழக்கில் தனக்கு வெற்றி கிடைத்த அன்று எங்கள் சேரியில் இருந்து ஏராளமான அப்பாவிகளை பயங்கரவாதிகள் எனக்கூறி இழுத்துச் சென்று உதைத்தனர் என்ற அதிர்ச்சி தகவலை கூறினார் ஆஸ்மி.

நான் அவரை ஜுலை 2008&ல் முதன்முறையாக சந்தித்தபோது, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் குறித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அப்பாவி முஸ்லிம்கள் மீது காவல் துறையினரால் புனையப்பட்ட சங்கதிகளை எனக்கு வழங்கினார். ஷஹித் ஆஸ்மி வழங்கிய தகவல்கள் வைத்து ஒரே மாதத்தில் சிமி அமைப்பினர் மீதான வழக்குகள் குறித்த புலனாய்வு தகவல்களை குறித்த முழுமையான செய்தி தெஹல்காவில் வெளியிடப்பட்டது. சிமி அமைப் பினர் எவ்வாறு பொய் யான குற்றச்சாட்டில் சிக்கவைக்கப் பட்டனர் என்ற ஆதாரபூர்வ செய்திகள் தெஹல்காவில் வெளியானது.

இந்ததேசம் மறுக்கவே முடியாத, சவால் விடவும் துணியாத நிகழ்வாக இது அமைந்தது.

மகாராஷ்ட்ரா கண்ட்ரோல் ஆஃப் ஆர்கணைஸ்ட் கிரைம்ஆக்ட் ((MCOCA) என்ற மகாராஷ்ட்ரா மாநில தீவிரவாத தடுப்புச்சட்டம் குறித்து உண்மைகளை எங்கள் தெஹல்கா இதழைச் சேர்ந்த ரானா அய்யூப் கடந்த மாதம் வெளிவந்த இதழில் அம்பலப்படுத்தினார்.

(MCOCA) சட்டப்பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து முழுமையான செய்தி வந்தது ஷஹித் ஆஸ்மியின் வற்புறுத்தலால் தான் என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியாது.

கடந்த மாதம் ஆஸ்மியை நான் சந்தித்தேன். மூன்று முக்கிய வழக்குகளில்தான் தீவிரமாக இறங்கி சட்டயுத்தம் செய்வதாகக் குறிப்பிட்டார்.

2006-ம் ஆண்டு நிகழ்ந்த முக்கிய வழக்குகள் குறிப்பாக மும்பையில் 187 மக்கள் உயரிழக்கக் காரணமாக இருந்த ரயில்குண்டு வெடிப்பு வழக்கு 37 அப்பாவிகளை பலி கொண்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு உள்ளிட்டவைகளில் தான் ஆஜராவதாகக் குறிப்பிட்டார்.

குற்றம்சாட்டப்பட்டவர்களில் பலர் தவறாகவும், கட்டாயப்படுத்தப் பட்டு குற்றங்களை ஒப்புக்கொள்ள வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களின் மீதான குற்றச் சாட்டுக்கு ஒரு சிறு ஆதாரமும் இல்லை. (ஜீரோ எவிடென்ஸ்).

மகாராஷ்ட்ரா பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை எதிர்த்து ஆஸ்மி உச்சநீதிமன்றம் சென்றார். இந்த சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கும், மக்களுக்கும் விரோதமானது என்றார். பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டத்தை நாடாளுமன்றம் மட்டுமே இயற்றமுடியும் என் றார். இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது.

ஆஸ்மியின் வாழ்வு வீர வாழ்வு, வீரமரணமடைந்த ஆஸ்மிக்கு 32 வயது தான். ஐந்து சகோதரர்களில் மூன்றாவதாகப் பிறந்த ஆஸ்மியின் வாழ்வு 1992&ல் மாறியது.

பாப்ரி மஸ்ஜிதை இடித்த மதவெறிக்கூட்டத்தைச் சேர்ந்த வர்கள் பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவன் ஆஸ்மியை பட்டாக்கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களோடு கொல்ல முயன்றனர்.

ஹிந்து நண்பரான அண்டை வீட்டுக்காரர் ஷஹித்தை காப்பாற்றினார்.

ஆஸ்மிக்கு 16 வயதாக இருக்கும் போது தோளில் துப்பாக்கி தூக்கி காஷ்மீருக்கு சென்றார்.எல்லை தாண்டி செல்லவும் முயன்றிருக்கிறார். என்னவோ தெரியவில்லை. உடனடியாக திரும்பிவிட்டார் என்று அவரது அண்ணன் ஆரிஃப் என்னிடம் கூறினார்.




1994&ம் ஆஸ்மி கைது செய் யப்பட்டார். இந்தியாவின் முன்னணி அரசியல்வாதியை கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்யப்பட்டார். இதற்கு ஒரே ஆதாரமாக குறிப் பிடப்பட்டது அவர் ஒருபோதும் கொடுக்காத ஒப்புக்கொள்ளாத ஒப்புதல் வாக்குமூலம் ஆஸ்மிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை கிடைத்தது.

டெல்லி திஹார் ஜெயிலில் ஆஸ்மி சும்மா இருக்கவில்லை. பட்டப்படிப்பு பயின்றார். சிறையில் அடைக்கப்பட் டவர்களின் சட்ட ஆவணங்களை கவனமாக ஆய்வு செய்தார்.

2001&ம் ஆண்டு ஷஹீத் ஆஸ்மி விடுதலை செய்யப்பட்டு வீட்டுக்கு வந்த உடன் இதழியல் துறையிலும் அதனைத் தொடர்ந்து சட்டக்கல்வியிலும் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு தான் துணை ஆசிரியராக பணி யாற்றிய பத்திரிகையிலிருந்து விலகி வழக்கறிஞர் மஜீத்திடம் ஜுனியராக மாதம் 2000 ரூபாய் ஊதியத்தில் பணியில் சேர்ந்தார். நான் ஏழைகளுக்காகவே பாடு படவே விரும்புகிறேன் என்றார்.

ஆஸ்மி பிரபலமானபின்னரும் கூட பெரும்பாலான கட்சிக்காரர்களிடம் கட்டணம் வாங்கியதை நான் பார்த்ததே இல்லை என்றார் அவரது அண்ணன் ஆரிஃப்.

மும்பையில், அந்த திங்கட் கிழமை (பிப்&11) நீதிபதி, நீதிமன்ற வளாகத்தில் அழுது கொண் டிருந்தார். சுற்றியிருந்த மக்கள் ஏதும் புரியாமல் அமைதியாய் இருந்தனர்.

அதே நாளில் நான் அவசர வேலையாக சென்னை வந்து இருந்தபோது, நான் கேட்ட செய்தி இடியாய் என்னைத் தாக்கியது. ஷஹீத்பாய் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தியே அது.

நான் தங்கியிருந்த தனியறை யில் உடைந்து அழுதேன். எனது மனம் பின்னோக்கி சென்றது. 1991&ம் ஆண்டு தொழிற்சங்க ஜாம்பவானும் சத்திஸ்கர் பழங்குடிமக்களுக்காக பாடு பட்ட சங்கர் குகாநியோகி சுட்டுக் கொல்லப்பட்டது என் நினைவுக்கு வந்தது.

அவர் சுட்டுக் கொல்லப்பட்ட சில நாட்களுக்கு முன்பு அவரை சந்தித்திருந்தேன். அது என் மனதில் நிழலாடியது. 18 மாதங்களுக்கு முன்பு ஷஹீத்தை சந்தித்ததிலிருந்து என்வாழ்வில் வருடக்கணக்காக எனது இலக்கற்ற பத்திரிகை வாழ்வை புதுப்பித்ததைப் போன்று இருந்தது.

நீதிக்கான போராட்டத்திலும் அதிகாரவர்க்கத்தை எதிர்த்த எனது போரிலும் ஷஹீத் எனது வாழ்வை அர்த்தமுள்ளதாக் கினார். எனது கண்ணீர் பெருக் கெடுத்து ஓடி வற்றியும் விட்டது. கண்ணீருடன் சென்னை தெருக் களில் சுற்றிக்கொண்டிருந்தேன்.

மும்பையிலிருந்து அதாவுர் ரஹ்மான் என்ற முதியவர் ஒரு வர் எனக்கு போன் செய்தார். (மும்பையில் 2006&ல் நிகழ்ந்த ரயில் குண்டு வெடிப்பில் தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட இருவரின் தந்தை தான் அதாவுர் ரஹ்மான்.

இந்த வழக்கிலும் ஷஹீத் தான் வாதாடினார்.) அவர், அஜீத் சாஹிப் என்று பேச ஆரம் பிக்கும்போதே, குரல் உடைந்தது. நாங்கள் இனி என்ன செய்வோம்? என்றார்.

நான் அவரிடம் மட்டும் அல்ல ஒவ்வொரிடம் சொல்கிறேன். ஷஹித்சாகவில்லை. அவரது சீரிய சாதனைகள் மூலம் அவர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்

Wednesday, February 10, 2010

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு! அபூஸாலிஹ்

பள்ளிசெல்லும் முஸ்லிம் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
தேசிய சராசரியை விஞ்சியது முஸ்லிம் பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம்!
பெண்களின் முன்னேற்றமே, நாட் டின் நிலையான முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைப்பதாகும். நாட்டின் இரண்டாவது மிகப்பெரும் சமூகமான முஸ்லிம் சமூகம் கல்வி, பொருளாதாரம் மற்றும் சமூக சூழ்நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக சச்சார் அறிக்கை அபாய எச்சரிக்கை செய்தது நினைவிருக்கலாம். இந்நிலையில் National University of Education Planing and Administration (NUEPA) அமைப்பின் வருடாந்திர அறிக்கை பல முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 633 மாவட்டங்களிலும் உள்ள 12 லட்சத்து 29 ஆயிரம் அரசு அங் கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 2008லி2009 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி ஆரம்ப கல்வி நிலையில் ஒரு கோடியே 48லட்சத்து 30 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகள் படித்து வருவதாக அறிக்கை குறிப்பிடுகிறது. ஆரம்பகல்வியில் முஸ்லிம் குழந்தை களின் சேர்க்கை கணக்கு மொத்த எண்ணிக்கையில் 11.03 சதவீதம் ஆகும்.
நடுநிலை வகுப்புகளில் 40 லட்சத்து 87 ஆயிரம் முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கை விகிதமாக உள்ளது. இது மொத்தத்தில் 9.13 சதவீதமாகும்.
2006லிலிருந்து 2007லிம் ஆண்டு வரை ஆரம்பக்கல்வியில் சேர்ந்த முஸ்லிம் மாணவமணிகளின் எண்ணிக்கை 9.39 சதவீதமாக இருந்தது. அதுவே 2007லி2008 ஆம் ஆண்டு 10.49 ஆக உயர்ந்தது. 2008லி2009 ஆண்டில் 11.03 ஆக உயர்ந்திருக்கிறது.
நடுநிலைப்பள்ளி சேர்க்கை விகிதத்தில் 2006லி2007ல் 7.52 சதவீதமாக இருந்த முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை 2007லி2008ல் ஆம் ஆண்டில் 8.54 சதவீதமாகவும், 2008லி2009ஆம் ஆண்டு 9.13 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
ஆரம்ப கல்வி வகுப்புகளில் மொத்த முஸ்லிம் குழந்தைகளின் சேர்க்கையில் குறிப்பாக முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கையில் 48.93 சதவீதமாக உயர்ந்துள்ளது.(கடந்த ஆண்டு 48.67) இது தேசிய விகிதாச்சார விகிதமான 48.38 விகிதத்தை விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு முஸ்லிம் பெண் குழந்தைகளின் சேர்க்கை 49.49. சதவீதமாகும், இது தேசிய விகிதச்சாரமான 47.58விட அதிகமாகும்.
கடந்த ஆண்டு ஆரம்ப நிலைக் கல்வியில் 87 ஆயிரத்து 690 பள்ளிகளில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை 25 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி விகிதத்தை எட்டியது.
ஜம்முலிகாஷ்மீரில் 12 மாவட்டங்களில் 90 சதவீதம் முஸ்லிம் மாணவமணி களின் வருகை உள்ளது. ஜம்முலி காஷ்மீரில் 15 மாவட்டங்களிலும் பீகார், மேற்கு வங்காளம், ஆந்திரா, லட்சத்தீவுகள் மற்றும் கேரளா மாநிலங் களில் தலா ஒரு மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான அளவு முஸ்லிம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. அஸ்ஸாம் மாநிலத்தில் 5 மாவட்டங் களில் முஸ்லிம் மாணவர்களின் வருகை 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது, இது ஒரு வியப்புக்குரிய விஷயம் எனினும் அதே அஸ்ஸாம் மாநிலத்திலும், கேரளா, உத்தர்கண்ட் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஆரம்பநிலை மற்றும் நடுநிலை வகுப்புகளில் பள்ளிச்சேர்க்கை திருப்திகரமான அளவில் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அருணாச்சலப்பிரதேசம், பீகார், சத்தீஸ் கர், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், மேகாலயா, மிஜேராம், நாகலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் முஸ்லிம்களின் மக்கள் தொகை விகி தாச்சாரத்திற்கேற்ப ஆரம்பநிலை மற்றும் நடுநிலைக் கல்விக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அமையவில்லை என அதிர்ச்சி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது

பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்கள் Wednesday, 10 February 2010 00:28 அபூஸாலிஹ்

இந்த ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதுகளில் சிறப்பிடம் பெறும் பத்ம விருதுகள் பெற்ற முஸ்லிம்களில் விபரம் பத்மவிபூஷன் பெற்றவர்கள்.
* இப்ராஹிம் அல்காஜி டெல்லியைச் சேர்ந்தவர் கலைத்துறை சேவைக்காக விருது பெற்றார்.

* ஜெôஹ்ரா செகல் டெல்லி.

* அமிர்கான் மகாராஷ்ட்ரா.

* ஏ.ஆர்.ரஹ்மான் என்ற அல்லாரக்கா ரஹ்மான் தமிழ்நாடு.

* உஸ்தாத் சுல்தான்கான் மகாராஷ்ட்ரா.

* மூஸா ரஸா லி டெல்லி.

* ஃபரீத் ஜகரிய்யா (இதழியல் துறைக்காக) யு.எஸ்.ஏ.

* பேராசிரியர் முஹம்மது அமீன் இலக்கியம் மற்றும் கல்வி டெல்லி.

* குலாம் முஹம்மது மீர் பொதுநலச் சேவை ஜம்முகாஷ்மீர்.

* உஸ்தாத் வசீஃபுத்தீன் தாகர் டெல்லி.

* ரசூல் பூக்குட்டி கேரளா.

* சைஃப் அலிகான் மகாராஷ்ட்ரா.

பத்மஸ்ரீ விருது:

* ஹமீத் காஷ்மீரி - இலக்கியப்பணி ஜம்முகாஷ்மீர்.

* சாதிக்குர் ரஹ்மான் கித்வாய்

* இர்ஷாத் மிர்ஸா வணிகம் மற்றும் தொழில் உத்தரப்பிரதேசம்.

Tuesday, February 9, 2010

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்! அபூசா­லிஹ்

தனி தெலுங்கானா: மறைக்கப்பட்ட உண்மைகள்!

E-mail Print PDF

இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.


இந்திய அரசியலை பரபரப்புக்கு உள்ளாக்கி இருக்கும் தனிமாநில கோரிக் கைகள் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. தெலுங்கானா வில் தொடங்கிய தீப்பொறி ஒவ்வொரு மாநிலத்திலும் தனிமாநில கோரிக்கைக்கு தூபம் போடுவதாக அமைந்துள்ளது.

ஆனால் தனிமாநில கோரிக்கைகளில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கை அனைத்திலும் வேறுபட்டதாகும்.

60 ஆண்டுகால போராட்ட பெருமை வாய்ந்த தெலுங்கானா பிரச்சினை பல்வேறு வாக்குறுதிகளையும் துரோகங்களையும் சந்தித்த ஒன்றாகும்.

ஒரு புறம் தனித்தெலுங்கானா போராட் டங்கள் மறுபுறம் ஒன்றுபட்ட ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்ற போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.

இருப்பினும், தெலுங்கானா போராட் டத்திற்கான வரலாற்றுப் பழமை, வீரியம், அதற்கான தேவை என பல்வேறு முக்கிய காரணிகள் தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றிவிட்டதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தெலுங்கானா குறித்து சற்று அதிக மாகவே அனைத்து தரப்பிலும் அலசிவிட்டதால் தெலுங்கானா குறித்து பொதுவான தெரியாத தகவல்கள் மறைக் கப்பட்ட உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமையாகிறது.

ஹைதராபாத் சமஸ்தானத்தை ஆண்டு வந்த நிஜாம் மன்னர்களுக்கு குடைச் சல் கொடுத்தே தீரவேண்டும் என்ற வெறியால் 50லிகளில் தெலுங்கானா போராட் டத்திற்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதற்கு தெளிவாக ஆதாரமாக இரண்டு நிகழ்வுகளைக் குறிப்பிடுகி றார்கள். தெலுங்கானா போராட்டங்களில் தொடக்க காலங்களில் முக்கிய பங்கு வகித்த சென்னா ரெட்டி, நரசிம்மராவ் உள்ளிட்டவர்களுக்கு ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல் அமைச்சர் பதவிகளை வழங்கியது காங்கிரஸ்.

பதவி மட்டுமே தங்களது லட்சியம் என்பதை நிரூபிப்பதை போல முதலமைச்சர் பதவிகளைப் பெற்ற பின்பு கண்மூடி அந்தர் தியானமானார்கள்.

தெலுங்கானா என்ற மாநிலம் உருவாக வேண்டும் என்ற உந்துதல் எவருக்கும் அவ்வளவு உணர்வு பூர்வமாக எழ வில்லை என்பது முழுக்க முழுக்க உண்மை.
ஆனால் போராட்டத் தளபதிகள் போலி­ பேர்வழிகளாக இருக்கலாம். ஆனால் பொது மக்கள் அன்றி­ருந்து இன்று வரை உணர்வு பூர்வமாக போராட் டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெலுங்கானா போராட்டத்திற்கு அப் பகுதி மக்களுக்கு கிடைத்திருக்கும் பேராதரவை சந்திரசேகரராவ் அறுவடை செய்ய காத்திருக்கிறார். சந்திரசேகரராவ் இடத்தில் யார் இருந்தாலும் தற்போது அவருக்கு கிடைத்து வரும் பிரபலம் கிடைத்தே தீரும்.

இந்நிலையில் தனித் தெலுங் கானா கோரிக்கைக்கு பல்வேறு அரசியல் மட்டத்திலி­ருந்தும் ஆதரவு அலை எழுந்த வண்ணம் உள்ளது.

தெலுங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து நாடாளு மன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தெலுங்கானா முஸ்லி­ம் ஃபோராடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒன்றுபட்ட ஆந்திராவில் வக்ஃபு நிலங்கள் அரசினாலும் தனியார் பணமுதலைகளாலும் அபகரிக் கப்பட்டன. 1748லி­லிருந்து 1948 வரை ஆட்சி மொழியாக இருந்த உருது மொழி ஒன்றுபட்ட ஆந்திர உருவெடுத்த பிறகு ஆட்சி மொழித்தகுதியை பறி கொடுத்தது.

1948 செப்டம்பர் 17 ஆம் தேதி நிகழ்த் தப்பட்ட காவல் துறை நடவடிக்கைகளில் முஸ்­லிம்கள் தங்கள் தனித்துவ அடையாளத்தையும் மொழி அந்தஸ்தையும் இழந்தனர்.

1969லில் சார்மினாரி­ருந்து ராஜ்பவன் வரை தெலுங்கானா ஆதரவு நடந்த போது அதில் பெரும்பான்மையோர் முஸ்­லிம்களாக இருந்தனர்.

தனித் தெலுங்கானாவுக்கு ராயல் சீமா மற்றும் கடலோர ஆந்திர சிறுபான்மை மக்களும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்கு தனித் தெலுங்கானா மட்டுமே தீர்வு என சமூக நல அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன.

ஆந்திரா மற்றும் ஓரிசா மாநில ஜமாயத்தே இஸ்லாமி ஹிந்த் தின் தலைமை அமைப்புகள் தனித் தெலுங்கானாவை வர வேற்று தீர்மானம் நிறை வேற்றியுள்ளனர்.

தெலுங்கானா உருவாக்கத்திற்கு ஆந்திரா சட்டமன்றத்தின் பங்கு ஒன்றும் பெரிதாக இல்லை. தனித் தெலுங்கா னாவை வரவேற்று தீர்மானம் போடலாம் அவ்வளவு தான்.

ஆனால் இந்திய அரசியல் சாசன சட்டம் பிரிவு 3லின் படி நாடாளுமன்றத் தில் சட்டதிருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சட்ட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஹைதராபாத் நகரின் செல்வாக்கு மிகுந்த கட்சியாக மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்லிமீன் எதிர்ப்பு தெரிவிக்கிறது. 1960லிகளில் தனித் தெலுங்கானா போராட்டம் தீவிர மடைந்தபோது இதே கட்சி நடுநிலைமை வகித்தது.

தனித் தெலுங்கானாவை எதிர்க்கும் இந்தக் கட்சி ஒரு வேளை மாநிலம் பிரிக்கப்பட்டால் ஹைதராபாத் செகந்தராபாத் பகுதிகள் யூனியன் பிரதேசமாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

ஒருவேளை ஹைதராபாத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டால் ஹைதராபாத் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் அங்குள்ள ஏழு சட்டமன்ற உறுப்பினர்களையும் பெற்றிருக்கும் அசதுத்தீன் உவைஸியின் மஜ்லீஸில் இத்திஹாதுல் முஸ்­மீன் கட்சியே முதல்வரிசை கட்சியாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஆனால் தெலுங்கானாவுக்கு ஹைத ராபாத்தின் மற்றொரு முக்கிய கட்சியான அகில இந்திய மஜ்லீஸை தமீரே மில்லத் ஆதரவு தெரிவித்துள்ளது. ஆந்திராவை விட தெலுங்கானாவில் முஸ்­லிம்களின் மக்கள் தொகை அதிகம் என புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.

மொழிவாரி மாநிலமாக ஆந்திரா அமைக்கப்படுவதற்கு முன்பு மிக அதிக அளவு முஸ்லி­ம்கள் தெலுங்கானாவில் இருந்தனர். ஆனால் மிக அதிக அளவில் பிற சமூக குடியேற்றங்கள் அமைக்கப்பட்டதால் முஸ்­லிம்களின் மக் கள் தொகை குறைந்தது.

இருப்பினும் தற்போது ஒன்றுபட்ட ஆந்திராவை விட தெலுங்கானா பகுதிகளில் முஸ்­லிம்கள் கணிசமாக வாழ் கின்றனர். ஆந்திராவில் 9.10 சதவீதமாக இருக்கும் முஸ்­லிம்கள் தெலுங்கானாவில் 13 சதவீதமாக உள்ளனர். புள்ளிவிவரம் 13 சதவீதமாக இருப்பினும் உண்மையில் அதைவிட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

தெலுங்கானாவின் 10 மாவட்டகளில் மஹபூப் நகர் மாவட்டத்தில் 8 சதவீத முஸ்லிம்களும், ரங்கா ரெட்டி மாவட் டத்தில் 11.43 சதவீதமும், ஹைதராபாத்தில் 42 சதவீதமும், மேடக் மாவட்டத்தில் 11 சதவீதமும், நிஜாமாபாத் மாவட்டத்தில் 15 சதவீத முஸ்லி­ம்களும், அடிலாபாத் மாவட்டத்தில் 10 சதவீத முஸ்­லிம்களும், கரீம் நகர் மாவட்டத்தில் 6 சதவீதமும், வாரங்கல் மாவட்டத்தில் 5.45 சதவீதமும், கம்மம் மாவட்டத்தில் 5.29 சதவீதமும், நலகொண்டா மாவட்டத்தில் 5.25 சதவீதமும் முஸ்லிம்கள் உள்ளனர்.

சிறிய மாநில தெலுங்கானாவில் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று கருதப்படுகிறது.

குப்பையில் வீசப்பட்ட கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை அபூசா­லிஹ்


பயங்கரவாதத்தின் கோரமுகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய மகாராஷ்ட்ரா மாநில பயங்கரவாத தடுப்புப்படைத் தலைவர் மறைந்த ஹேமந்த் கர்கரேயின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் விதமாக மற்றொரு அவமானம் நிகழ்ந்துள்ளது. கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை குப்பைக் கிடங்கில் வீசப்பட்டதாக அதிர்ச்சிகர தகவல்கள் கிடைத்துள்ளன.

கர்கரே பயங்கரவாதத்திற்கு பலி­யான மறுநாள் 2008 நவம்பர் 27 ஆம் நாள் அவரது உடனி­­ருந்த குண்டுதுளைக்காத சட்டையை குப்பை போடும் பையில் வைத்து குப்பைக்கிடங்கில் வீசிவிட்டதாக கர்கரேயின் உடலை போஸ்ட்மார்டம் செய்த மும்பை ஜே.ஜே. மருத்துவமனையின் துப்புரவு பணியாளர் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்.

காந்தியைக் கொன்ற பயங்கரவாதிகள். பாப்ரி மஸ்ஜிதைத் தகர்த்த பாதகர்கள் நாட்டில் எந்த பயங்கரவாதச் செயல்கள் நடந்தாலும் சிறுபான்மை சமூக இளைஞர்களின் மீது பழிபோட்டு களங்கம் சுமத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்த நிலையில் சங்பயங்கரவாதத்தின் கோர முகத்தை தோலுரித்தார் மாவீரன் கர்கரே.

மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் சங்பரிவாரைச் சேர்ந்தவர்கள் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தினார் கர்கரே.

அதனைத் தொடர்ந்து கடமை வீரர் கர்கரேக்கு மிரட்டல் அதிகரித்தது. மோடி உள்பட சங்முக்கிய பிரமுகர்கள் மிரட்டியதாக தகவல்கள் வெளிவந்தன.

2008 நவம்பர் 20 ஆம் நாள் மும்பை நகரம் பயங்கரவாத முற்றுகைக்கு இலக்கான போது கர்கரே மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

கர்கரேயின் மர்ம படுகொலை குறித்து உரிய நீதி விசாரணை தேவை என பல்வேறு உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்த போதிலும் மராட்டிய சிங்கம் அப்துற் ரஹ்மான் அந்துலேயின் நாடாளுமன்ற கர்ஜனையும் கர்கரேயின் மனைவியார் கவிதா கர்கரேயின் போர்க் கோலம் எதிரிகளை திகைக்க வைத்தது. ஹேமந்த் கர்கரே குண்டு துளைக்காத உடை அணிந்திருந்தும் அவரது உடலை குண்டுகள் துளைத்தது எப்படி? அந்த உடை இப்போது எங்கே இருக்கிறது? எனக் கேட்டு கர்கரேயின் மனைவி நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தார். தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படியும் வினா எழுப்பப்பட்டது.

குண்டுதுளைக்காத கவச ஆடை குறித்த விஷயத்தில் மகராஷ்ட்ர அரசின் அலட்சியம் குறித்து கொதிப்படைந்த நீதிமன்றம் மகராஷ்ட்ரா முதல்வர் அசோக் சவானின் பிரத்யேக பாதுகாப்பை உடனடியாக நீக்குங்கள். அவருக்கு கர்கரேக்கு அணிவிக்கப்பட்ட குண்டுதுளைக்காத ஆடையை அணிவியுங்கள் என கோபமாக குறிப்பிட்டார்.

கர்கரேயின் குண்டுதுளைக்காத சட்டை தொடர்பான கேள்விகள் இறுகத் தொடங்கியதைத் தொடர்ந்து. மும்பை ஜேஜே மருத்துவமனையின் துப்புரவுப் பணியாளர் குண்டு துளைக்காத ஆடையை மறுநாளே மருத்துவமனை குப்பைக்கிடங்கில் போட்டு விட்டதாக அவரது பதிவு செய்யப்பட்ட நீதி மன்ற வாக்கு மூலம் குறிப்பிடுகிறது.

கர்கரேயின் குண்டுதுளைக்காத உடை காணாமல் போயிற்று என மும்பை போ­லீஸ் முதன் முத­ல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இது ஒரு கண்துடைப்பான பதில் இவ்வளவு காலம் இல்லாத துப்புரவு பணியாளர் மற்றும் அவரது வாக்கு மூலம் திடீரென தோன்றியது. எப்படி என கேள்வி எழுப்புகிறார் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரியான ஒய்.டி.சிங் இவர் கர்கரேயின் குண்டுதுளைக்காத ஆடை என்னவாயிற்று? என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி கோரிக்கை எழுப்பியவர்.

சங்பரிவார் சதிகளை அமல்படுத்திய ஒரு கடமை தவறான காவல் அதிகாரிக்கு மேலும் மேலும் அவமானம் தொடர்வது தான் இந்நாட்டின் நீதியா?

கவிதா கர்கரேயின் கண்ணீருக்கும், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான நீதி நாடுவோரின் ஆதங்கத்திற்கும் பதில் கிடைப்பது எப்போது?

abusalih news in tamil

முஸ்லிமை பிரதமராக்க வேண்டும்

E-mail Print PDF
பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதற்கு பிராய சித்தமாக ஒருமுஸ்லி­மை இந்திய நாட்டின் பிரதமராக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சியின் முன் னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் கூறியிருக்கிறார். மகராஷ்ட்ரா மாநிலம் பீவாண்டி சட்டப்பேரவைக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதில் மகராஷ்ட்ரா மாநில சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் தாக்கரே வகையறாக்களின் வயிற்றெரிச்சலை ஊட்டி வளர்த்து வருபவருமான அபூ ஆஸ்மியின் இளைய சகோதரர் ஃபர்ஹான் போட்டியிடுகிறார்.
சமாஜ்வாடி கட்சியி­ருந்து நீக்கப்பட்ட போதும் ஆஸ்மி தனது நண்பர் என்பதால் அமர்சிங் பீவாண்டியில் பரப்புரை நிகழ்த்தினார், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு ஒரு வரலாற்றுத் தவறு என்றும் அந்த தவறு நிகழக்காரணமாக இருந்த காங்கிரஸ் தனது அமைச்சர்கள் யாரையும் அப் போது பதவி விலகச் சொல்லவில்லை என்றும் குறற்ம் சாட்டியதோடு மஸ்ஜித் இடிப்பு என்ற கொடும் தவறுக்கு கைமா றாக முஸ்­லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நாட்டின் பிரதமர் பதவியில் அமர்த்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார், 1984லில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்திற்கு கைமாறாக மன்மோகன் சிங்கை பிரதமர் ஆக்கியதைப் போல பாபர் மஸ்ஜித் தகர்ப்பு தவறுக்காக முஸ்­லிம் ஒருவரை பிரதமர் ஆக்க வேண்டும் என்றும் அமர்சிங் கூறியிருக்கிறார். அமர்சிங் வடஇந்தியாவின் மிகப்பெரிய அரசியல் வியாபார வித்தகர் என பொதுவாக கூறப்படுகிறது.
இவரது அதிரடி முடிவுகள் முலாயமசிங்கின் சமாஜ்வாடிக்கட்சியை பின்னடைவை நோக்கி இழுத்துச் சென்றதாக நடுநிலையாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

முஸ்­லிம்கள் பெருவாரியாக வாழும் ராம்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் சினிமா நடிகை ஜெயப்பிரதாவை போட்டியிட வைத்து வெற்றி பெற வைக்க வேண்டும் என சளைக்காமல் போராடிய சமூக(?) நீதிப் போராளியவர். பாப்ரி மஸ்ஜித் இடிப்பிற்கு முக்கிய காரண கர்த்தாக்களில் ஒருவரான தேசத்துரோகி கல்யாணசிங்கை சமாஜ்வாடி கட்சியோடு கூட்டணி சேரவைத்து ஜெயித்துக் கொண்டு இருந்த சமாஜ்வாடிக்கட்சியை தோல்வி பள்ளத்தாக்கில் துவைத்த புண்ணியவான். சமாஜ்வாதிக்கட்சியின் மற்றொரு முக்கிய தலைவரான ஆஜம்கானை தொடர்ந்து அவமானப்படுத்தினார். தற்போது அரசிய­ல் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முஸ்­ம் பிரதமர் என்ற முழக்கத்தினை முன்னெடுக்கிறார்.

இதற்கு முன்னர் ராகுல்காந்தியும் முஸ்­லிம் பிரதமர் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தினார்.

இங்கு முஸ்லி­ம்களின் நிறைவேற்றப் படாத கோரிக்கைகள் ஏராளமாக குவிந்து கிடக்கின்றன. குளிர வைக்கும்
வாக்குறுதிகளால் குவிந்திருக்கும் கோரிக்கை மலையின் சிறுபகுதியைக் கூட நகர்த்த முடியவில்லை. முஸ்லிம் பிரதமர், முஸ்­லிம் குடியரசுத்தலைவர், முஸ்­லிம் அமைச்சர், முஸ்லி­ம் கவுன்சிலர், முஸ்லி­ம் டிரைவர், முஸ்லி­ம் கிளீனர் என்ற ஆசை வார்த்தைகளைக் கண்டு முஸ்­லிம்கள் மயங்கிய காலம் மலையேறி விட்டது.
சுதந்திர இந்தியாவில் காலகாலமாக ஒடுக்கப்பட்டிருக்கும் முஸ்லி­ம்களின் அவலநிலையை மாற்றும் எண்ணம் கொண்ட எவரையும் ஏற்றிவிடத் தயங்காத சமூகம்தான் முஸ்­லிம் சமூகம்.
இந்தியத் திருநாட்டின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை தேர்ந்தெடுத்த ஜான்கிபூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகப்பெரும்பான்மையினர் முஸ்­ம்களே(60 சதவீதம்). இதை போன்று எண்ணற்ற அரசியல் பிரபலங்களின் அரசியல் வாழவின் ஏணிகளாக முஸ்லி­ம் பெரும்பான்மையாக வாழும் தொகுதிகளே அமைந்துள்ளன. எந்த சமூகத்தை சேர்ந்தவரும் எந்த அச்சமும் இன்றி போட்டியிட்டு வெல்ல முடியும். எனவே முஸ்லி­ம்களின் மனதை இடம்பிடிக்க இத்தகைய முழக்கங்கள் தேவையில்லை. அவர்கள் தங்கள் கட்சிகளில், அமைப்புகளில் எத்தனை மாவட்ட, மற்றும் மாநில பொறுப்புகளை வழங்கினார்கள் என இதயத்தை தொட்டுப்பார்த்து பதில் சொல்லட்டும். அதிகாரப்பங்கீட்டுக்கு ஆவனசெய்யுங்கள். ஆசை வார்த்தைகளுக்கு அணைபோடுங்கள். முஸ்லி­ம் பிரதமர் என்ற கோஷம் ஒன்றும் வெல்ல முடியாத இலக்கு அல்ல. ஆனால்
அதை ம­லிவு அரசியலுக்கான களமாக்க வேண்டாம்.

Web Counter Code