இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Saturday, September 5, 2009

உலகின் அவமானச் சின்னம் -அபூசாலிஹ்

உலகின் அவமானச் சின்னம்

-அபூசாலிஹ்
அமெரிக்க அதிகார வர்க்கத்தினரால் இந்தியப் பிரபலங்கள் அவமதிக்கப் படுவது வாடிக்கையாகி வருகிறது.

தங்கள் நாட்டில் நுழைவதற்கு முன்பாக வெளியுறவுத்துறை அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என அமெரிக்க அதிகார வர்க்கம் மனிதர் களின் தகுதி அறியாது தன்மானத்திற்கு இழுக்கு நேரும் வகையில் நடந்துகொள் வது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்தியாவின் பிரபலங்கள் அவமதிக் கப்பட்டுவரும் தொடர் நிகழ்வில் இப்போது இந்தியத் திரையுலகின் உச்ச நட்சத்திர மான ஷாருக்கான அவமானப்பட்டிருக் கிறார்.

நியூ ஜெர்சியில் உள்ள நியார்க் விமான நிலையத்தில் (நியூயார்க் அல்ல) அமெரிக் கக் குடியுரிமை அதிகாரிகளால் இரண்டு மணி நேரம் சிறை பிடிக்கப் பட்டிருக் கிறார்.

இந்த நிகழ்வு இந்திய அரசியல் தலைவர்களாலும், மும்பை பட உலகத் தினராலும் கடுமையான கண்டனத்திற்கு இலக்கானது. இந்திய அரசு, தலைநகர் டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத் திடம் விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கை தரவேண்டும் என்று கேட்டுக் கொண்ட தோடு தனது சீறலையும் வெளிப்படுத் தியுள்ளது.

ஷாருக்கானுக்கு நேர்ந்த அவமானம் குறித்து தான் மிகவும் வருந்தி மன்னிப்பு கேட்பதாக டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதர் திமோதி ரிவோமர் தெரிவித்தார். ஷாருக்கான உலகப் புகழ்பெற்ற கலைஞர், அவரை வரவேற்க அமெரிக்கா எப்போதும் தயாராக இருக்கிறது என்றார். முன்னதாக, தான் சிறை வைக்கப்பட்ட நிகழ்வுக்குப் பிறகு மனம் வெதும்பிய ஷாருக்கான், தான் இனி அமெரிக்காவில் கால்வைக்கப் போவதில்லை என தெரிவித்ததற்கு தாஜா செய்யும் விதமாக அமெரிக்கத் தூதர் இவ்வாறு வருத்தம் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 63வது விடுதலை நாள் தொடர்பான விழாவுக்காக குறிப்பிட்ட நடிகர் அமெரிக்காவுக்குச் சென்றார். அவரது சுதந்திரத்திற்கு இடையூறு செய்யும் விதமாகவும், உரிமைக்கு ஊறு செய்யும் விதமாகவும் அவர் மீது அவமானச் சேறு வாரி இறைக்கப்பட்டிருக்கிறது. அவமானத் தில் சுருண்டுவிட்ட அந்த திரையுலகப் பிரபலத்தை அவமானத்திலிருந்து மீட்டு இரண்டு மணி நேர கேள்விக்கணை டார்ச்சரிலிருந்து மீட்டவர் ராஜீவ் சுக்லா என்ற காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பி னர். அவர்தான் அமெரிக்க அதிகாரி களிடமும், இந்திய தூதரகத்திடமும் பேசி, கிட்டத்தட்ட விடுதலையை(!) வாங்கிக் கொடுத்தவர் என முதல்கட்ட தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நடிகர் பெயரின் பின்பகுதியான 'கான்' என்பதுதான் அமெரிக்க குடியுரிமைத் துறை கம்ப்யூட்டரின் அலறலுக்கு காரண மாக அமைந்துள்ளது. 'கான்' என்ற வாசகம் சந்தேகத்துக்குரிய ஒரு சொல்லாகக் குறிப்பிட்டு அபாய எச்சரிக்கை ஒலியை எழுப்பியிருக்கிறது.

ஏதோ ஒரு நடிகரைச் சுற்றி நிகழ்ந்த ஒரு செய்தியில் நாமும் ஈடுபாடு காட்ட வேண்டிய அவசியம் உடனடியாக வந்தது.

கடும் பதட்ட சூழ்நிலைக்குப் பின் கசப்பான உணர்வுகளுக்குப் பின் விடுவிக்கப் பட்ட ஷாருக்கான், ''எனது அமெரிக்க வருகைப் பற்றி கடுமையான கேள்வி களால் துளைத்தெடுக்கப்பட்டேன்'' என்றார்.

''என்னுடைய லக்கேஜ்கள் அணுஅணு வாக சோதனையிடப்பட்டன. நான் சமீபத்தில் கூட அமெரிக்காவுக்கு வந்திருக் கிறேன். என்னுடைய பெயர் கான். தெற்காசிய சமூகம் என்ற அமைப்பு இந்திய விடுதலை நாள் தொடர்பாக எனக்கு அழைப்பு விடுத்திருந்ததால் இங்கு வந்திருக்கிறேன். இங்கு எனக்கு பல நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்திருக்கும் நண்பர் களைத் தொடர்பு கொள்ள அனுமதி தாருங்கள் என்று கேட்டதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது'' என்று கூறி கான், அடுத் துக் கூறிய வார்த்தைகள் அணுகுண்டு ரகத்தைச் சார்ந்தவை.

''நான் குறிவைக்கப்பட்டேன். காரணம் நான் ஒரு முஸ்லிம் என்பதும், எனது துணைப் பெயர் 'கான்' என்பதும்தான்'' என கோபக் குமுறலுடன் செய்தியாளர்களிடம் பேசி முடித்திருக்கிறார். அதோடு விட்டாரா? ''எனது பாதுகாப்பாளருக்கும் அனுமதி மறுக்கப்பட்டது. காரணம் அவரது பெயரின் கடைசியிலும் 'கான்' உள்ளது'' என்றார்.

இவ்வாறு கூறிய ஷாருக்கான், ''எனது பாதுகாப்பாளரை என்னோடு வர அனுமதி யுங்கள். நான் எங்கள் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக செல்கிறேன்'' என கேட்டுக் கொண்டதாகக் கூறினார்.

இதுகுறித்து மும்பைப் படவுலகின் முன்னணி தயாரிப்பாளரும் இயக்குநரு மான கரன்ஜோஹர் கூறும்போது, ''எனது உயிர் நண்பர் கானுக்கு நேர்ந்தது அதிர்ச் சியையும் அயர்ச்சியையும் ஏற்படுத் தியுள்ளது. ஷாருக்கானை நடத்திய விதம் கொடூரமானது. ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஷாருக் ஒரு முஸ்லிம் என்பதால் தான்'' என்று தனது உள்ளக் குமுறலைக் கொட்டியுள்ளது.

இதுபோன்ற செயல்கள் நிறவெறி நெருப்புக்கு பெட்ரோல் ஊற்றியதைப் போலாகும் என பாலிவுட் கலைஞர்கள் எச்சரித்துள்ளனர். செப்டம்பர் 11க்குப் பிறகு அமெரிக்கா போன்ற நாடுகளை இஸ்லாம் ஃபோபியா என்ற நோய் பிடித்தாட்டு கிறது. முஸ்லிம்களை வேறுபடுத்திப் பார்க்கும் இந்த செயலை நாம் அனுமதிக் கக் கூடாது என பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான மகேஷ்பட் கூறுகிறார்.

ஷாருக் அவமானப்படுத்தப்பட்டது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாதது, சகித்துக்கொள்ள முடியாதது என இந்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச் சர் அம்பிகா சோனி குறிப்பிட்டிருக்கிறார்.

திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவர், கவுரி என்ற பிற சமய சகோதரியை திருமணம் செய்துகொண்டவர், முஸ்லிம் களின் பிரச்சினைகளைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளாதவர் என பல்வேறு சிறப்புகளுக்கு(!) உரிய ஷாருக் கானுக்கு அவர் முஸ்லிம் என்பதாலேயே அவமானம் நேர்ந்துள்ளது விநோத மாகவே உள்ளது. இவர்கள் என்னதான் 'எம்மதமும் சம்மதம்' என நீட்டி முழக்கி னாலும், மேற்கத்திய கலாச்சாரத்துக்கு தாசானுதாசர்களாக காட்டிக் கொண்டாலும் இவர்கள் சார்ந்த சமயம், இவர்களது இயற் பெயர் ஆதிக்க சக்திகளுக்கு அச்சுறுத்தும் ஒன்றாகவே உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பு மலையாள திரைப்பட உலகின் சூப்பர் ஸ்டார் முஹம்மது குட்டி என்ற மம்மூட்டி, அமெரிக்க மண்ணில் அவமானப்படுத்தப் பட்டார். அவர் அவமானப்பட்டதற்கு முக்கியக் காரணம் அவரது பெயரில் உள்ள இஸ்மாயில் முஹம்மது குட்டி என்பதுதான் முக்கியக் காரணம் என்பது அப்போதே சமூகநல ஆர்வலர்களால் சுட்டிக் காட்டப்பட்டது.

சமீபத்தில் இந்திய எழுச்சிக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக விளங்கிய வரும் இந்திய ஏவுகணை இயலின் வித்தகரும் இந்திய அணு விஞ்ஞானத் தின் தந்தையாக போற்றப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் இந்திய மண்ணிலேயே அமெரிக்க அதிகாரிகளால் அவமானப் படுத்தப்பட்டார். அவரது காலணி)று) களையும், காலுறைகளையும் கழற்றி சோதனை செய்யப்பட்டது. அப்போதும் கண்டனங் கள் எழுந்தன. ஆனால் அவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம் என்ற அவரது பெயர்தான் அவரை சோதனை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளி விட்டது என்பதை யாரும் அப்போது சுட்டிக் காட்டவில்லை.

ஆச்சரியப்படும் விதமாக ஷாருக் விஷயத்தில் விம்மிப்புடைத்து எரிமலை யாக இஸ்லாம்ஃபோபியாவில் நடுநடுங்கும் அமெரிக்கத்தனம் பற்றிய குமுறல் வெளிப்பட்டிருக்கிறது.

ஒபாமாக்கள் என்னதான் இஸ்லாமிய உலகில் சென்று 'அஸ்ஸலாமு அலைக் கும்' என்று கூறி தன் நாட்டின் தவறு களுக்காக தன்னிலை விளக்கம் அளித் தாலும், ஒவ்வொரு மில்லி மீட்டரி லும் பரவி இருக்கும் இனவெறி, மதவெறி, நிறவெறி துவேஷங்களை அடியோடு அழிக்க சூளுரைக்க வேண்டும்.

இது ஜார்ஜ் புஷ்ஷின் அமெரிக்கா அல்ல என்பதை நிலைநாட்ட ஒபாமா மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டிருக் கிறார். இருப்பினும் அடிமட் டத்தில் உள்ள சில்லறைகள், பிற்போக்குத் தனத்தின் மொத்த உருவமாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. தனது கடந்தகால தவறு களிலிருந்து பாடம் கற்காத அமெரிக்கா, உலகின் அவமானச் சின்னம் என அழைக்கப்படும் நேரம் விரைவில் வரக்கூடும்.

கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்! -ஹபீபா பாலன்








கிழிந்தது சீனாவின் முகமூடி தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்!


-ஹபீபா பாலன்

சீனா சமதர்மத்தின் தாயகம் என்றும், கம்யூனிசத்தின் தொட்டில் என்றும், மதச்சார்பற்ற தத்துவத்தின் மகோன்னத பூமி என்றும் சிலாகித்துக் கொண்டு திரிந்தவர்கள் அனைவரும் முகத்தை மூடிக்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலை அவர்களுக்கு வந்திருக்கிறது.

சீனா பல பத்தாண்டுகளுக்கு முன்பு தலைநகர் பெய்ஜிங்கில் உரிமைகளுக்காக முழக்கமிட்ட ஏராளமான மாணவர்களை அரச வன்முறையின் மூலம் கொடூரமாக நசுக்கியது. ஏராளமான மாணவர்களின் கதி என்னவாயிற்று என்பதே இன்னும் தெரியாத நிலையில், மாணவர்களின் உற்றோரும் பெற்றோரும் கதறும் நிலை இன்றுவரை நீடிக்கிறது.

திபெத் மக்களின் உரிமைகளை நசுக்கி சீனா தன்னை ஒரு வெகுஜன விரோத சக்தி என்பதைத் தொடர்ந்து நிலை நாட்டி வந்தது.

இவற்றுக்கும் மேலாக, 60 ஆண்டு காலத்திற்கு முன்பு சுதந்திர நாடாகத் திகழ்ந்து முழுவதும் முஸ்லிம்களையே பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு துர்க்மினிஸ்தானைக் கைப்பற்றி அடிமைப் படுத்தி வந்தது. முஸ்லிம்களின் பாரம் பரியப் பெருமை மிகுந்த அப்பகுதிக்கு 'ஜின்ஜியாங்' என்று பெயரிட்டு முஸ்லிம்களின் தனித்துவ அடையாளத்தையும் அழித்தது.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு விவசாயத்தில் மட்டுமே முன்னிலைப் பெற்றிருந்த சீனா, கனிம வளங்களிலும், அணு சக்தியிலும், இயற்கை வளங்களி லும் சிறப்புடன் விளங்குகிறது. பெட்ரோலியம் லி இயற்கை எரிவாயு வளங்களிலும் சீனா முன்னிலையில் இருப்பதற்கும், செல்வ வளம் கொழிப்பதற்கும் ஜின்ஜியாங் மாகாணம் என அழைக்கப்படும் கிழக்கு துர்க்மினிஸ்தான் பகுதியே முக்கியக் காரணம் என்பதும் வரலாறாகிவிட்டது.

வெறும் பூச்சி பல்லிகளை உணவாகக் கொண்டு வாழ்ந்த பரிதாபத்துக்குரிய ஜீவன்களாக வாழ்ந்த சீனர்களின் நிலை உலகம் மறக்க முடியாத உண்மையாக கடந்த அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை மாறி, கிழக்கு துர்க்மினிஸ் தான் இணைந்த பிறகு வளம் கொழிக்க ஆரம்பித்ததன் நன்றியை மறந்த சீன அரசின் கொடுஞ்செயல் சமீபகால சரித்திரமாகும்.

ஹான் இன மக்களை அதிக அளவில் குடியமர்த்தி, ஜின்ஜியாங் என்ற கிழக்கு துர்க்மினிஸ்தான் மக்களின் உரிமைகளை நசுக்கிய சீனாவின் இழிசெயல் மேலும் தொடர்வதோடு, தேவையற்ற செயல்களி லும் சீனா தனது மூக்கினை நுழைத்து வருகிறது.

அத்துடன், நெருப்போடு விளை யாடும் விபரீத விளையாட்டினை சீனா தொடங்கியுள்ளது. இந்தியாவின் இறை யாண்மைக்கும், ஒற்றுமைக்கும் சவால் விடுக்கும் ஓர் அடாத செயலை சீனா செய்துள்ளது. அது, ஒட்டுமொத்த இந்தியர் களின் மீது தொடுக்கப்படும் போராகவே நாம் கருதலாம்.

சீன அரசின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் தனது விஷம வேலையைத் தொடங்கியுள்ளது. இந்தியாவுடனான உறவு எவ்வாறு சீரழிந்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் அந்த சீன அரசு வலைதளம் விஷமத்தனமாகக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா லி பல்வேறு மாநிலங்களாக சிதறடிக் கப்பட வேண்டும், 20 நாடுகளாக துண் டாடப்பட வேண்டும், துண்டாடப்பட்ட பகுதிகள் தனி நாடுகளாக்கப்பட வேண் டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாம், நாகலாந்து, தமிழ்நாடு, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் தனி நாடுகளாக சிதறடிக்கப்பட வேண்டும் என்று தனது வக்கிர ஆசையை வலை தளம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறது சீனா. அதற்கு இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகள் மறைமுகமாக உதவ வேண்டும் என்று படுபயங்கரமான, முட்டாள்தன மான, கீழ்த்தரமான தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறது சீனா.

அண்டை நாடு, உடைந்து சிதற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத் தியதன் மூலம் சீனா உலக அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இந்தியாவைக் குறித்து தனது இழிகருத் தைத் தெரிவித்த சீனா அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் இந்தியப் பெருங்கடல் பகுதியில் அரசியல் முக்கியத் துவம் மிகுந்த இலங்கையில் குழப்பத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது.

இலங்கை, இனவெறிப் போரால் பெரிதும் பாதிக்கப்பட்டது. பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் திறந்தவெளி அகதிகள் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு அவதியுறு கின்றனர். அப்பாவி மக்களின் அவல நிலை தீர்க்க நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உலகெங்கும் எதிரொலித்து நிற்கும் நிலையில், சீனாவின் செயல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல் உள்ளது.

சீனா, மதவெறியை ஊட்டும் பௌத்த மடாலயங்களுக்கு நிதி உதவியை வாரி வழங்கி வருகிறது. 691 பௌத்த மத பள்ளிக் கூடங்களுக்கு 10 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்கியுள்ளது. இலங்கையின் முக்கிய பௌத்த மடாலங்களும் ராஜ பக்ஷே போன்ற வர்களை வார்த் தெடுத்த கேந்திரங் களாக விளங்கும் மல்வெத்தை, அஸ்கிரியா, அமர புரா மற்றும் ரமயனா என்ற நான்கு கேந்தி ரங்களிலும் ஏராள மான பௌத்த மத குருமார்களை சீனா தொடர்ந்து அனுப்பி வருகிறது. இலங்கைக்கு ஆயுத உதவிகளையும் ஏராள மாக வழங்கிவரும் சீனா, மதரீதியாகவும் உதவி வரும் விஷ யம் வெளியானதால் உலக அளவில் சீனா விற்கு வக்காலத்து வாங்கி உலாவந்த காம்ரேடுகள் கடுப்பில் ஆழ்ந்துள்ள னர். செஞ்சீனம், ஆரஞ்சு சீனம் என அடை மொழியிட்ட அவர்கள், மக்கள் சீனம், மண்ணாங்கட்டி சீனம் என நீட்டி முழக்கிய இவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இது போதாதென்று, இலங்கையில் ஹம்பன்டோட்டாவில் ஒரு மெகா துறை முகம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சி யில் சீன அரசு இறங்கியுள்ளது. தலைநகர் கொழும்பிற்கு அருகே சீன முதலீட்டாளர் களுக்கு என்றே சிறப்பு பொருளாதார மண்டலம் ஒன்று விரைவில் திறக்கப்பட இருக் கிறதாம். சீனாவின் இனவெறி ஜின்ஜியாங் விவகாரத்தில் அம்பலமா கியது. அந்நாட்டின் மதவெறி இலங்கை விவகாரத்தில் அம்பலமாகியுள்ளது. சீனா வின் விஷமத் தனம் வலைதளத்தில் இந்தியாவை சீண்டும் விதமாக தொடங்கியிருக்கிறது. மொத்தத்தில் சீன தேசத்தின் முகமூடி சீன பெருஞ்சுவர் நீளத்திற்கு கிழிந்து தொங்குகிறது.

Tuesday, August 4, 2009

Saturday, July 18, 2009

Thursday, July 16, 2009

Web Counter Code