மகனே... சரணடைந்து குற்றமற்றவன் என நிரூபித்துவிடு...
ஒரு வீரத் தாயின் ஆவேசம்
டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக தேடப்படும் தவுகீர் என்னும் அப்துல் சுபுஹானின் தாயார் தனது மகனுக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத் திருக்கிறார்.
அப்துல் சுபுஹான் டெல்லி குண்டு வெடிப்பு தொடர்பாக தேடப்படும் ஒரு நபராக இருப்பதாக டெல்லி காவல்துறை தெரிவித்ததைத் தொடர்ந்து நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அஹ்மதாபாத் மற்றும் டெல்லி குண்டுவெடிப்புகளுக்கு தவுகீர் முக்கிய மூளையாக செயல்பட்டதாகவும் புலனாய் வுத் துறையினர் கூறி வருகின்றனர். ஒரு மனிதன் பிடிபட்டாலே மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை கட்ட விழ்த்து விடும் சில ஊடக பயங்கர வாதிகளுக்கு குண்டுவெடிப்பு தொடர் பாக ஒருவர் தலைமறைவாக இருக்கிறார் என செய்தி கிடைத்தால் எப்படி இருக் கும்? கும்மாளம் போடாத குறையாக சந்தோஷத்தில் மூழ்கி சதிக் கதைகளை சந்திக்கு ஒன்றாக அவிழ்த்து விடுவார் கள். அதே கதை இங்கும் அரங்கே றியது. லஷ்கரே தொய்பா என்ற தீவிர வாத இயக்கத்தைச் சேர்ந்தவர் அப்துல் சுபுஹான் என்றும், இந்தியாவின் பின் லேடன் என்றும் நம்மூரு தினத்தந்தி கூட செய்தி வெளியிடுகிறது.
நிலைமை இவ்வாறிருக்க, அப்துல் சுபுஹான் என்ற தவுகீர் உயிரோடு இருக்கிறாரோ இல்லையோ என்ற பதைபதைப்பு அவரது குடும்பத்தின ருக்கு ஏற்பட்டது. அப்துல் சுபுஹானின் தாயார் சுபைதா குறைஷி தனது மவுனத்தைக் கலைத்தார். செய்தியாளர் களின் முன் அவரது வழக்கறிஞர் சொலேகருடன் தோன்றினார். உயிர் களை பலிகொண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இதுபோன்ற நிகழ்வு களில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் சிக்கியிருந்தாலும் அவர்களுக்கும் அதே கதிதான் ஏற்பட்டிருக்கும்.
குண்டுவெடிப்பில் என் மகனுக்கு தொடர்பு இருந்தால் எண் கண் முன்பாக அவன் தண்டிக்கப்படட்டும். எங்கள் குடும்பத்தின் முன்பாகவே அவனை தூக்கில் போடுங்கள். அவனை தூக்கில் போடுவதைத் தடுத்து நிறுத்த மாட்டோம் என ஆக்ரோஷத்துடன் அறிவித்த அந்த வீரத்தாய், தனது மகன் உடனடியாக சரணடைந்து நிரபராதி என தன்னை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வீரத்தாய் சுபேதா குறைஷியின் அறிவிப்பு பல்வேறு பத்திரிகையிலும் பரபரப்பு செய்தியாக வெளியிடப்பட்டது.
தவுகீர் அப்பாவி
தாயார் கூறுகிறார் என `டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகை முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறது. தவுகீரின் தாய் அவரை சரணடையுமாறு வேண்டுகிறார் என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை முதல் பக்கத்தில் சிறிய செய்தியாக ஆரம்பித்து ஏழாம் பக்கத்தில் செய்தியை தொடர்கிறது.
தினமணி தவுகீரின் தாயார் கூறியதை சிலாகித்து நெகிழ்ந்து தலையங் கமாகவே தீட்டியுள்ளது. இப்படி இந்தி யாவை நேசிக்கும் சகோதரர்கள் இஸ் லாமிய சகோதரர்கள்தான் பெரும்பான்மையினர் என்பதை ஏனைய
மதங்களைச் சேர்ந்த இந்தியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினமணி தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள் ளது. கிட்டத்தட்ட அனைத்து ஊடகங் களும் வீரத்தாய் சுபேதா குறைஷியின் கருத்தை நல்ல நோக்கத்துடன் வெளி யிட்டுள்ளன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களின், உழைக்கும் மக்களின், உழைப்பிலும் உதிரத்திலும் உருவாக்கப் பட்ட தினத்தந்தி இதுபோன்ற சம்பவத் தில் செய்தி வெளியிட்ட விதம் அந்தப் பத்திரிகையை போற்றி வளர்த்த நியாய உணர்வு கொண்ட அனைவரின் முகத்திலும் கரி பூசுவதைப் போன்று அது வெளியிட்ட செய்தி அமைந்தது. குண்டுவெடிப்பு சதிகாரன், இந்தியாவின் பின்லேடன் தவுகீரின் தாய் ஆவேசம் என சற்றும் தனது தகுதிக்கு பொருந்தாத தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது.
எல்லா நடுத்தர குடும்பத்தினரைப் போன்றே கனவுகளோடு வளர்த்தேன். குண்டுவெடிப்புகளுக்கு என் மகன் அப்துல் சுபுஹான் குறைஷியே காரணம் என கூறப்படுகிறது. ஆனால் என் பிள்ளைக்கு நான் நல்ல குணங்களை யும், நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக் கொடுத்துள்ளேன். எனவே என் மகன் அப்துல் சுபுஹான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவான் என எங்க ளால் நம்ப முடியவில்லை என்றும் அந்த வீரத்தாய் சுபைதா குறைஷி தெரிவித் தார். அப்துல் சுபுஹான் என்ற தவுகீரின் விவகாரத்தில் உண்மைகள் வெளி வருமா
Friday, September 26, 2008
சிமிக்கு எதிரான 194 வழக்குகளில் 192ல் ஆதாரமில்லை!
மண்டை காயும் மகாராஷ்டிரா அரசு!!
ரையான்
மத்திய அரசு சிமி இயக்கத்தின் தடைக்கு மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரும்பாடுபட்டு வருகிறது. சில மாநில அரசுகளும் சிமி தடை விஷயத்தில் முனைப்பு காட்டின.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவதில் எப்போதுமே ஆர்வம் காட்டிவரும் மகாராஷ்டிர அரசும் சளைக்காது தனது தீவிரத்தைக் காட்டியது.
அப்பாவி இளைஞர்களை வளைத்துப் பிடிப்பதில் எப்போதும் வேகம் காட்டிவரும் மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் 194 வழக்குகளை சிமி என்ற இயக்கத் திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. இதில் மகாராஷ்டிர அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் எதுவும் பெரும்பாலான வழக்குகளில் நிரூபணமாகவில்லை. 192 வழக்குகளில் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு தனக்குத் தானே கரி பூசிக் கொண்டது. இரண்டு வழக்குகளில் மட்டுமே (கொஞ்சூண்டு) ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தீவிரவாத தடுப்புப் படையும், புலனாய்வு அமைப்புகளும், காவல்துறை யினரும் நாட்டில் நிகழ்ந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் சிமியே காரணம் என பிரச்சாரத்தை மேற்கொண் டும் இன்றைய தேதி வரை தங்களது குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங் களைக் கூட சமர்ப்பிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
மகாராஷ்டிர அரசின் அரசு வழக்கறிஞ ரும் உச்சநீதிமன்றத்தில் சிமி மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் வினோதமாகும்.
மகாராஷ்டிர அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் சிமியைத் தடை செய்ய வேண்டும், நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என தங்களது அறிக்கைகளை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.
மகாராஷ்டிர அரசு சிமிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகள் குறித்து பார்ப் போம். மகாராஷ்டிர அரசு 1,057 பேர் மீது குற்றம்சாட்டி 194 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
ஆனால் மகாராஷ்டிர அரசின் காவல் துறை தொற்ற வழக்குகளில் வெறும் இரண்டு வழக்குகளில் மட்டுமே பூர்வாங்க ஆதாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 56 வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 246 பேர் எவ்வித ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப் பட்டனர்.
ஆறு வழக்குகளில் சிக்க வைக்கப் பட்ட 79 சிமி அமைப்பினர் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுவித்தது. இவர் களைத்தான் பயங்கரவாத இயக்கங் களுக்குத் தொடர்பு உடையவர்களாக மகாராஷ்டிர அரசு குற்றம்சாட்டி துன்புறுத் தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. (தூ... வெட்கமாயில்லை?)
693 சிமி இயக்கத்தினர் தொடர்பு டைய 111 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவும் மகாராஷ்டிர அரசுக்கு படு தோல்வியை பரிசளிக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனி டையே இதுதொடர்பாக மாநில காவல் துறைத் தலைவர் அனாமி நாராயண் ராஜ் என்பவரை சந்திக்க செய்தியாளர்கள் முயன்றும் அவர் மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை முன்னணி செய்தி ஏடான இன்குலாப் ஏடு தெரிவித்துள்ளது
மண்டை காயும் மகாராஷ்டிரா அரசு!!
ரையான்
மத்திய அரசு சிமி இயக்கத்தின் தடைக்கு மேலும் மேலும் கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என அரும்பாடுபட்டு வருகிறது. சில மாநில அரசுகளும் சிமி தடை விஷயத்தில் முனைப்பு காட்டின.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்களை துன்புறுத்துவதில் எப்போதுமே ஆர்வம் காட்டிவரும் மகாராஷ்டிர அரசும் சளைக்காது தனது தீவிரத்தைக் காட்டியது.
அப்பாவி இளைஞர்களை வளைத்துப் பிடிப்பதில் எப்போதும் வேகம் காட்டிவரும் மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் 194 வழக்குகளை சிமி என்ற இயக்கத் திற்கு எதிராக தாக்கல் செய்துள்ளது. இதில் மகாராஷ்டிர அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் எதுவும் பெரும்பாலான வழக்குகளில் நிரூபணமாகவில்லை. 192 வழக்குகளில் ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு தனக்குத் தானே கரி பூசிக் கொண்டது. இரண்டு வழக்குகளில் மட்டுமே (கொஞ்சூண்டு) ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
தீவிரவாத தடுப்புப் படையும், புலனாய்வு அமைப்புகளும், காவல்துறை யினரும் நாட்டில் நிகழ்ந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களுக்கும் சிமியே காரணம் என பிரச்சாரத்தை மேற்கொண் டும் இன்றைய தேதி வரை தங்களது குற்றச்சாட்டுகளுக்கு சில ஆதாரங் களைக் கூட சமர்ப்பிக்க முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
மகாராஷ்டிர அரசின் அரசு வழக்கறிஞ ரும் உச்சநீதிமன்றத்தில் சிமி மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என தனது அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது தான் வினோதமாகும்.
மகாராஷ்டிர அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் சிமியைத் தடை செய்ய வேண்டும், நாட்டில் நடைபெறும் பயங்கரவாத செயல்களில் சிமி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என தங்களது அறிக்கைகளை உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்துள்ளன.
மகாராஷ்டிர அரசு சிமிக்கு எதிராகத் தொடர்ந்த வழக்குகள் குறித்து பார்ப் போம். மகாராஷ்டிர அரசு 1,057 பேர் மீது குற்றம்சாட்டி 194 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.
ஆனால் மகாராஷ்டிர அரசின் காவல் துறை தொற்ற வழக்குகளில் வெறும் இரண்டு வழக்குகளில் மட்டுமே பூர்வாங்க ஆதாரம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 56 வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த 246 பேர் எவ்வித ஆதாரமும் இல்லாததால் விடுவிக்கப் பட்டனர்.
ஆறு வழக்குகளில் சிக்க வைக்கப் பட்ட 79 சிமி அமைப்பினர் நிரபராதிகள் என நீதிமன்றம் விடுவித்தது. இவர் களைத்தான் பயங்கரவாத இயக்கங் களுக்குத் தொடர்பு உடையவர்களாக மகாராஷ்டிர அரசு குற்றம்சாட்டி துன்புறுத் தியிருந்தது என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. (தூ... வெட்கமாயில்லை?)
693 சிமி இயக்கத்தினர் தொடர்பு டைய 111 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் முடிவும் மகாராஷ்டிர அரசுக்கு படு தோல்வியை பரிசளிக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனி டையே இதுதொடர்பாக மாநில காவல் துறைத் தலைவர் அனாமி நாராயண் ராஜ் என்பவரை சந்திக்க செய்தியாளர்கள் முயன்றும் அவர் மறுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்செய்தியை முன்னணி செய்தி ஏடான இன்குலாப் ஏடு தெரிவித்துள்ளது
Thursday, September 18, 2008
மாதம் ஒரு குண்டுவெடிப்பு! செயலிழந்த மத்திய உள்துறை!!
சத்தியவேந்தன்
டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் பலியா னார்கள். அதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்விடங்களுக்கு அருகில் இருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் அவர்களுக்கு தொடர்புண்டா என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். குண்டுவெடிப்பில் தொடர்பில்லை எனில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப் பிற்கு அடுத்த நாள் பெங்களூருவில் பாஜக செயற்குழு கூட்டம் கூடியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மாநில அரசுகள் இயற்றியிருக்கும் சட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
மோடி டெல்லியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் என்பது முன் கூட்டியே தெரியும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் தான் எச்சரித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். (அகமதா பாத் குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு முன்பே மோடியிடம் எச்சரித்தது என உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்ததற்கு பழிக்குப் பழியாக மோடி தெரிவித்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்).
மக்கள் கூடும் முக்கியமான இடங் களில் குண்டுவெடித்து அப்பாவிகள் பலியாகும் கொடும் செயலை நிகழ்த்திய இரக்கமற்ற அரக்கர்களை மன்னிக்க முடியாது. சிரித்துக் கொண்டே வந்த மனித மலர்களைப் பிய்ந்த தசைத் துண்டுகளாக, ரத்தக் கூளங்களாகப் பார்க்கும் எவருக்கும் அதனை நிகழ்த் திய மிருகங்களின் மீது ஏற்படும் ஆத்திரத்தை விளக்குவதற்கு வார்த்தை களே இல்லை.
என்ன ஆனது என் இந்திய தேசத்திற்கு? குண்டுவெடிப்புகள் ஒருபுறம், கலவரங்களை ஏற்படுத்தி அப்பாவிகளைப் பிடித்து சித்திரவதை செய்தல் மறுபுறம் என நாடு முழுவதும் வேதனைச் செய்திகளே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆறு மாதத்திற்கொரு முறை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது போக தற்போது மாதத்திற்கொரு தடவை குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. மாதம் மும்மாரி பொழிந்ததா என அந்தக் காலத்தில் மன்னர்கள் கேட்டது போக இப்போது மாதம் மும்மாரி குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா என ஆள்வோர் கேட்கின்ற நிலையிலேயே தற்போதைய சூழல் அமைந்துள்ளது.
குண்டுவெடிப்புகள் எப்போது நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த அவலம் தொடங்கியது? இந்த குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்? குண்டுவெடிப்புக்குப் பிறகு தவறாக குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் யார்? இந்த குண்டுவெடிப்புகளுக்கு யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்பதை யெல்லாம் தீவிரமாக ஆய்வு செய்தால் நிஜங்கள் நிதர்சனமாகத் தெரியவரும்.
முதல் காட்சி குண்டுகள் வெடிக்கும். இரண்டாம் காட்சியாக அத்வானி, மோடி, (தமிழ்நாட்டில் ராமகோபாலன்) போன் றோர் வெண்திரையில் வெளிச்சத்துக்கு வருவார்கள். ஒரு குற்றச்செயல் நடந் தால் குற்றவாளிகளைக் கண்டுபிடி, கைது செய் என கோரிக்கை விடுப்பதை விட்டுவிட்டு பொடா சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கூறுகெட் டத்தனமாக கூச்சலிடுவதைக் கண்டு நாட்டு மக்கள் நகைக்கிறார்கள்.
குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் அனைத்தும் ஒரு சம்பிரதாய சடங்கு களாகவே மாறிவிட்டன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு கள் வெடிக்கின்றன. அப்பாவி இந்திய மக்கள் பலியாகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் வினோதமான முறையில் பிரச்சாரம் செய்கின்றன. உளவுத்துறை ஊகங்களை மட்டுமே புலனாய்வு அறிக்கையாக வெளியிடுகின்றன.
பெங்குளூரு, மாலேகான், ஹைதரா பாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், அஜ்மீர் என பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமான வர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பாவிகளை வளைத்து படம் காட்டு வதோடு அரசுகளின் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றன. விளைவு தீவிரவாதம் தொடருகிறதே யொழிய நிற்பதாகத் தெரியவில்லை.
அரசுகளின் மெத்தனமும் இருட்டில் குருட்டுத்தனமாக சதிகாரர்களைத் தேடும் போக்கும் மக்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. சதிச்செயலைக் கண்டு பிடித்து சதிகாரர்களை கையும் களவு மாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வழியைக் காணோம்.
இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை குறித்து வெள்ளை அறிக்கை தர மத்திய, மாநில அரசுகள் தயாரா?
அப்பாவிகளை வளைத்துப் பிடிப்பது. சதி குறித்து ஈமெயில் வந்தது, கொசு மெயில் வந்தது என கோக்கு மாக்குத் தனமாக அறிவித்து விட்டு அசட்டுத் தனமாக நடவடிக்கைகளை மேற்கொள் வது. மனித உயிர்களை தீர்வை நோக்கி நடைபோடாமல் வதந்திகளிலும் வக்கிர சிந்தனைகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கிலிருந்து மீளும் வழியைக் காணோம்.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவா ளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் ஆணை யம் சுட்டிக் காட்டிய (பெரும் புள்ளிகளும் காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை)
குஜராத் இனப்படுகொலை சதிகாரர்கள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து கொடூரன் மோடிக்கு வழங்க வேண்டிய விசாவைக் கூட ரத்து செய்தன. ஆனால் இந்திய மண்ணில் அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன? மீண்டும் பொடாவை கொண்டு வரவேண்டும் என அவர்தான் இங்கு சுத்த யோக்கியர்போல் கூச்சலிடுகிறார்.
2006 ஏப்ரல் 6 ஆம் தேதி மகராஷ்ட்ர மாநிலம் நான்டெட்டில் லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறை பொறியாளரின் வீட்டில் குண்டு வெடித்தது.
வெடித்த குண்டுகள் பொறியாளரின் மகன் நரேஷ் (வயது 29) மற்றும் அவனது நண்பன் பன்சே (வயது 31) என்ற இருவரின் உயிரையும் குடித்தது. ஓய்வு பெற்ற பொறியாளர் பிணங்களை போட்டு விட்டு வீட்டை விட்டே ஓட்டம் பிடித்தார். காவல்துறையினரின் சோத னையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு, வெடிக்காத தோட்டாக்கள், ஒட்டுத் தாடிகள், வெள்ளை தொப்பிகள், அவ்ரங் காபாத் பள்ளிவாசல்களின் படங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
அதே மகராஷ்ட்ரா மாநிலத்தின் பார்பானி முஹம்மதியா பள்ளிவாசலில் ஏப்ரல் 9 ஆம் தேதி 2006. வெடித்த குண்டு வெடிப்பு தொடர்பாக சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கெசவ் என்பவன் போஸ்லா ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்றவன். இவர்கள் அனைவரும் சங்பரிவார் சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத் தில் நவி மும்பை மற்றும் தானேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பிடிபட்ட சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இவைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் நாட்டில் தொடர்ச் சியாக நடைபெறும் குண்டு வெடிப்பு களின் விசாரணைகள் இருட்டு மூலை யில் கறுப்பு பூனையைத் தேடும் முயற்சி யாகவே இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
குண்டு வெடிப்புகளை குறித்த பிரச்சனைகளில் பாஜகவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு உண்மை நிலையை அறிய ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய உள்துறை செயலிழந்து விட்ட தையே இது காட்டுகிறது
சத்தியவேந்தன்
டெல்லியில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் 30 பேர் பலியா னார்கள். அதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பு நிகழ்விடங்களுக்கு அருகில் இருந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் அவர்களுக்கு தொடர்புண்டா என்பதை உறுதி செய்ய தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் மாநகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித் தனர். குண்டுவெடிப்பில் தொடர்பில்லை எனில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் காவல் துறை அறிவித்துள்ளது.
செப்டம்பர் 13ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப் பிற்கு அடுத்த நாள் பெங்களூருவில் பாஜக செயற்குழு கூட்டம் கூடியது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொடா சட்டம் மீண்டும் கொண்டு வரப்படும். மாநில அரசுகள் இயற்றியிருக்கும் சட்டங் களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும் பாஜக தலைவர் அத்வானி குறிப்பிட்டிருக்கிறார்.
மோடி டெல்லியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் என்பது முன் கூட்டியே தெரியும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் தான் எச்சரித்ததாகவும் மோடி குறிப்பிட்டிருக்கிறார். (அகமதா பாத் குண்டுவெடிப்பு குறித்து மத்திய அரசு முன்பே மோடியிடம் எச்சரித்தது என உள்துறை இணையமைச்சர் ஷகீல் அகமது தெரிவித்ததற்கு பழிக்குப் பழியாக மோடி தெரிவித்ததாகவே அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்).
மக்கள் கூடும் முக்கியமான இடங் களில் குண்டுவெடித்து அப்பாவிகள் பலியாகும் கொடும் செயலை நிகழ்த்திய இரக்கமற்ற அரக்கர்களை மன்னிக்க முடியாது. சிரித்துக் கொண்டே வந்த மனித மலர்களைப் பிய்ந்த தசைத் துண்டுகளாக, ரத்தக் கூளங்களாகப் பார்க்கும் எவருக்கும் அதனை நிகழ்த் திய மிருகங்களின் மீது ஏற்படும் ஆத்திரத்தை விளக்குவதற்கு வார்த்தை களே இல்லை.
என்ன ஆனது என் இந்திய தேசத்திற்கு? குண்டுவெடிப்புகள் ஒருபுறம், கலவரங்களை ஏற்படுத்தி அப்பாவிகளைப் பிடித்து சித்திரவதை செய்தல் மறுபுறம் என நாடு முழுவதும் வேதனைச் செய்திகளே வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. கடந்த ஆண்டு ஆறு மாதத்திற்கொரு முறை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது போக தற்போது மாதத்திற்கொரு தடவை குண்டுவெடிப்புகள் நிகழ்கின்றன. மாதம் மும்மாரி பொழிந்ததா என அந்தக் காலத்தில் மன்னர்கள் கேட்டது போக இப்போது மாதம் மும்மாரி குண்டுவெடிப்பு நிகழ்ந்ததா என ஆள்வோர் கேட்கின்ற நிலையிலேயே தற்போதைய சூழல் அமைந்துள்ளது.
குண்டுவெடிப்புகள் எப்போது நிகழ்ந்தது? எப்போதிலிருந்து இந்த அவலம் தொடங்கியது? இந்த குண்டு வெடிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள் யார்? குண்டுவெடிப்புக்குப் பிறகு தவறாக குற்றம்சாட்டப்பட்டு மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் யார்? இந்த குண்டுவெடிப்புகளுக்கு யார் அரசியல் இலாபம் அடைகிறார்கள் என்பதை யெல்லாம் தீவிரமாக ஆய்வு செய்தால் நிஜங்கள் நிதர்சனமாகத் தெரியவரும்.
முதல் காட்சி குண்டுகள் வெடிக்கும். இரண்டாம் காட்சியாக அத்வானி, மோடி, (தமிழ்நாட்டில் ராமகோபாலன்) போன் றோர் வெண்திரையில் வெளிச்சத்துக்கு வருவார்கள். ஒரு குற்றச்செயல் நடந் தால் குற்றவாளிகளைக் கண்டுபிடி, கைது செய் என கோரிக்கை விடுப்பதை விட்டுவிட்டு பொடா சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என கூறுகெட் டத்தனமாக கூச்சலிடுவதைக் கண்டு நாட்டு மக்கள் நகைக்கிறார்கள்.
குண்டு வெடிப்புகளும் அதனைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களும் அனைத்தும் ஒரு சம்பிரதாய சடங்கு களாகவே மாறிவிட்டன. இந்தியாவின் முக்கிய நகரங்களில் தொடர்ந்து குண்டு கள் வெடிக்கின்றன. அப்பாவி இந்திய மக்கள் பலியாகின்றனர். பெரும்பாலான ஊடகங்கள் வினோதமான முறையில் பிரச்சாரம் செய்கின்றன. உளவுத்துறை ஊகங்களை மட்டுமே புலனாய்வு அறிக்கையாக வெளியிடுகின்றன.
பெங்குளூரு, மாலேகான், ஹைதரா பாத், அஹ்மதாபாத், ஜெய்ப்பூர், அஜ்மீர் என பல்வேறு நகரங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளுக்கு காரணமான வர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்பாவிகளை வளைத்து படம் காட்டு வதோடு அரசுகளின் கடமை முடிந்து விட்டதாக எண்ணிக் கொள்கின்றன. விளைவு தீவிரவாதம் தொடருகிறதே யொழிய நிற்பதாகத் தெரியவில்லை.
அரசுகளின் மெத்தனமும் இருட்டில் குருட்டுத்தனமாக சதிகாரர்களைத் தேடும் போக்கும் மக்களை துன்பத்தில் ஆழ்த்துகிறது. சதிச்செயலைக் கண்டு பிடித்து சதிகாரர்களை கையும் களவு மாகப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தும் வழியைக் காணோம்.
இதுவரை நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை குறித்து வெள்ளை அறிக்கை தர மத்திய, மாநில அரசுகள் தயாரா?
அப்பாவிகளை வளைத்துப் பிடிப்பது. சதி குறித்து ஈமெயில் வந்தது, கொசு மெயில் வந்தது என கோக்கு மாக்குத் தனமாக அறிவித்து விட்டு அசட்டுத் தனமாக நடவடிக்கைகளை மேற்கொள் வது. மனித உயிர்களை தீர்வை நோக்கி நடைபோடாமல் வதந்திகளிலும் வக்கிர சிந்தனைகளிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போக்கிலிருந்து மீளும் வழியைக் காணோம்.
பாப்ரி மஸ்ஜித் இடிப்பு குற்றவா ளிகள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.
ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் ஆணை யம் சுட்டிக் காட்டிய (பெரும் புள்ளிகளும் காவல்துறை அதிகாரிகளும் கைது செய்யப்படவில்லை)
குஜராத் இனப்படுகொலை சதிகாரர்கள் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து கொடூரன் மோடிக்கு வழங்க வேண்டிய விசாவைக் கூட ரத்து செய்தன. ஆனால் இந்திய மண்ணில் அவர்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன? மீண்டும் பொடாவை கொண்டு வரவேண்டும் என அவர்தான் இங்கு சுத்த யோக்கியர்போல் கூச்சலிடுகிறார்.
2006 ஏப்ரல் 6 ஆம் தேதி மகராஷ்ட்ர மாநிலம் நான்டெட்டில் லக்ஷ்மன் ராஜ்கோந்த்வார் என்ற ஓய்வு பெற்ற நீர்பாசனத்துறை பொறியாளரின் வீட்டில் குண்டு வெடித்தது.
வெடித்த குண்டுகள் பொறியாளரின் மகன் நரேஷ் (வயது 29) மற்றும் அவனது நண்பன் பன்சே (வயது 31) என்ற இருவரின் உயிரையும் குடித்தது. ஓய்வு பெற்ற பொறியாளர் பிணங்களை போட்டு விட்டு வீட்டை விட்டே ஓட்டம் பிடித்தார். காவல்துறையினரின் சோத னையில் ஒரு சக்தி வாய்ந்த குண்டு, வெடிக்காத தோட்டாக்கள், ஒட்டுத் தாடிகள், வெள்ளை தொப்பிகள், அவ்ரங் காபாத் பள்ளிவாசல்களின் படங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டன.
அதே மகராஷ்ட்ரா மாநிலத்தின் பார்பானி முஹம்மதியா பள்ளிவாசலில் ஏப்ரல் 9 ஆம் தேதி 2006. வெடித்த குண்டு வெடிப்பு தொடர்பாக சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் சஞ்சய் சவுத்ரி, மரோடி கெசவ், வினய் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர். இதில் கெசவ் என்பவன் போஸ்லா ராணுவ பள்ளியில் பயிற்சி பெற்றவன். இவர்கள் அனைவரும் சங்பரிவார் சதிகாரக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமீபத் தில் நவி மும்பை மற்றும் தானேயில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் பிடிபட்ட சங்பரிவார் சதிகாரக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் இவைகளின் பின்னணியில் உள்ள சதி குறித்து எந்த ஆய்வும் செய்யாமல் நாட்டில் தொடர்ச் சியாக நடைபெறும் குண்டு வெடிப்பு களின் விசாரணைகள் இருட்டு மூலை யில் கறுப்பு பூனையைத் தேடும் முயற்சி யாகவே இருப்பதை நினைத்து நாட்டு மக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.
குண்டு வெடிப்புகளை குறித்த பிரச்சனைகளில் பாஜகவுக்கு உள் நோக்கம் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் அரசு உண்மை நிலையை அறிய ஏன் ஆர்வம் காட்டுவதில்லை. மத்திய உள்துறை செயலிழந்து விட்ட தையே இது காட்டுகிறது
Friday, September 12, 2008
இறைத்தூதரை கேலிச்சித்திரமாக்கிய தினமலர்!
தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு!!
ஹபீபாபாலன்
உலகத்தின் வழிகாட்டி, உத்தமர் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நெறி வசந்தமாய் பூமிப் பந்தெங்கும் பரவி வருகிறது. காற்றை விட வேகமாக, கடலை விட ஆழமாக, ஆகாயத்தை விட விசாலமாக அந்த தூயவரின் வழிகாட்டுதல்கள் எட்டுத் திக்கும் பற்றிப் பரவி வருகிறது. நபிகள் பெருமானை அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி யாகப் பெற்றதை தங்களின் பெறற்கரிய பாக்கியமாக எண்ணி உலகின் 140 கோடி முஸ்லிம்கள் பூரித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். உயிரை விட மேலாகக் கருதும் அந்த உத்தமரின் புகழுக்கு துளி அளவு மாசு நேர்ந்தாலும் புழுவென துடித்துப் போவார்கள், புயலென கொதித்து எழுவார்கள், சூரியக் கதர்களாய் சுட்டெரிக்கப் புறப்படுவார்கள்.
அண்ணலாரின் மீது இந்த அவனி யில் வாழும் 140 கோடி முஸ்லிம்கள் காட்டும் அன்பு அத்தகையது.
பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்பினைக் குலைக்கும் முயற்சியை எவர் செய்தாலும் அப்போது `யுகப் பிரளயமே’ உருவானதோ என இந்த உலகமே கலங்கும் அளவுக்கு மக்களின் தார்மீக கோபம் இந்த பூமிப் பந்தை உஷ்ணமாக்கியிருக்கிறது.
சரித்திரங்கள் சாட்சியம் பகர்கின்றன. இவையெல்லாம் ஒரு சராசரி பொது அறிவு கொண்ட மனிதனுக்குக் கூட தெரியும். ஆனால் தினமலர் என்ற நாளேட்டிற்கு எப்படித் தெரியாமல் போனது? சீண்டிப் பார்க்கும் சின்னப் புத்தி இந்த இதழின் பரம்பரை குணம் என்றாலும் கூட விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு விஷய ஞானம் கொண்டவர்கள்(!)தான் தினமலரை நடத்தி வருகிறார்கள் என்பதை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை.
தமிழகம் திராவிட இயக்க பூமி, பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பது பிரச்சார வியூக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. பொட்டில் அடித்தாற்போல், செவுளில் அறைந்தாற் போல் மற்றொரு உண்மையை விழுங்கிக் கொள்ள, உண்மையை விளங்கிக் கொள்ள தமிழகம் மெல்ல மெல்ல தயாராகி வருகிறது.
இந்திய பூபாகத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வருகின்ற ஹிந்துத்துவ பாசிசவாதத்திற்கான மூலப்பொருள், கருப்பொருள், அந்த பாசிசவாதத்தை வேகமாக கொண்டு செல்ல உதவும் எரிபொருள் தமிழகத்திலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவருக்கும் தலைமைப் பீடமான நாக்பூர் என்றும், அதன் தலைவர் சுதர்சன் என்றும் இந்த நாடு தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவரின் (அஞ்)ஞான குருவாக தமிழகத்தைச் சேர்ந்த குருமூர்த்திதான் விளங்கி வருகிறார் என்பதை கள்ளம் கபடமில்லா தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி விட்டார்கள்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப் படுகொலையின் சூத்ரதாரி என வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் வரித்தெடுக்கப்பட்டவர் நரவேட்டை நரேந்திர மோடி. அவரது மூச்சுக்காற்று பட்டால் கூட முழு நாசம் என எண்ணிய இந்த நாடு அவரை சற்று தள்ளியே வைத்தது. பாதகம் இழைக்க அஞ்சாத பாஜக கூட கொடூர மோடியை குஜராத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என தலையில் குட்டி வைத்தது. அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்து மோடியை ஒரு சர்வதேச `போர்க் குற்றவாளி’ எனும் அளவுக்கு கீழிறக்கி காட்டியது.
இந்தியாவே காறி உமிழ்ந்தால் என்ன? அமெரிக்காவும் பிரிட்டனும் விசா வழங்க மறுத்தால்தான் என்ன? பாஜகவே பக்கத்தில் வராதே என வெருண்டோடினால்தான் என்ன? மூன்றாயிரம் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு முழுக் கிரீடம் சூட்ட நாங்கள் தயார் என தமிழகத்திலிருந்து முதல் குரல் எழுந் தது. ஒன்று இரண்டானது, இரண்டு மூன்றானது.
திராவிடத் தாய் என தனது கட்சிக்காரர்களாலேயே புகழப்பட்ட ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனி விமானத்தில் பறந்து சென்றார். பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ஹிந்துத்துவ பாசிசத்தின் அகில இந்திய பிரச்சார பீரங்கி, சிரிப்பு நடிகர் `சோ’ ராமசாமி தனது பத்திரிக் கையின் விழாவுக்கு அழைத்தார். மோடியின் ஆட்சியை பொற்கால ஆட்சி என விமர்சித்து சிறப்பு இதழ் வெளி யிட்டது கல்கி வார ஏடு. (மூன்றாயிரம் முஸ்லிம்களை கதறக் கதற குதறிய அந்த செயலைத்தான் (!) கல்கி ஏடு பொற்கால ஆட்சி என்றதோ?) மேற்கூறிய அத்தனை புண்ணிய(!) வான்களுக்கும் ஒருபடி மேலாக செயல்படும் ஒரு தீவிர பாசிச சக்தியாக தினமலர் நாளேடு செயல்பட்டது. முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்துவதில் முன்னிலை வகித்தது தினமலர். நாளொரு அவதூறும், பொழுதொரு புளுகுமாய் வெளியிட்டு வெறித்தனத்தை பறைசாற்றியது.
முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்நாட் டில் வாழும், உழைத்து பிழைக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அழுத்தப் பட்ட மக்களை அவமானப்படுத்துவதில் அது முன்னிலை வகித்தது.
கோபால்ஜி என்றழைக்கப்படும் தினமலர் (வி.எச்.பி.) கோபால்
சமூக நீதி தத்துவத்தின் பிதாமகனாக தமிழக மக்களால் போற்றப்படும் பெரியாரை அனைத்துத் தரப்பு மக்களும் பெரியார் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பெரியாரை ஈ.வே.ரா. என தனது பத்திரிக்கையில் எழுதி ஈனத்தனமாக நடந்து கொண்டது.
ஒரு தாயின் வயிற்றில் நாம் அனை வரும் பிறந்தால் அந்தத் தாயின் மணி வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்தோ மடா தம்பிகளா? என தமிழக இளைஞர் களை சகோதர வாஞ்சையுடன் அழைத்து மகிழ்ந்தவர் அறிஞர் அண்ணா. அத னால்தான் அவரை அண்ணா, அண்ணா என தமிழகம் அழைத்து மகிழ்ந்தது. அரசியல் எதிர்முகாமில் உள்ளவாகள் கூட அண்ணா என அழைத்த போதும், தினமலர் மட்டும் அண்ணாதுரை என அதிமேதாவி(!)த்தனமாக அழைத்து தன்னை அடையாளம் காட்டியது.
தமிழ்நாட்டில் பாமரர்களையும் பத்தி ரிகை படிக்க வைத்தவர் தினத்தந்தி ஆதித்தனார். பத்திரிகையுலக ஜாம்ப வான் என அவரை அழைப்பதுண்டு. அவரை தமிழர் தந்தை என அவர் மீது அன்பு கொண்டோர் அழைத்தனர். அதில் தினமலருக்கு ஏற்பட்ட வயிற்றெ ரிச்சலில் கொச்சைப்படுத்தும் வரிகளை வெளியிட்டது.
தமிழின உணர்வாளர்களை, தலித் பெருமக்களை,பிற்படுத்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி இன்பம் கண்டது.
கற்பு குறித்து விநோதமான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு முஸ்லிம் பெண்களின் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது என பைத்தியக்காரன் கூட கற்பனை செய்ய முடியாத ஒரு கருத்தை தினமலர் அச்சில் ஏற்றியது.
மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாடே வேதனை யில் ஆழ்ந்த அந்த சம்பவத்தில் கூட தினமலர் தனது ஈனச் செயலின் மூலம் சாதனையைப் படைத்தது.
`மாலேகான் பள்ளிவாசலில் இருந்த குண்டு வெடித்தது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
இவ்வாறு ஈனத்தனத்திலும் இழிசெய லிலும் சாதனை(!) படைத்த தினமலர், பெட்ரோல் கிணற்றில் பீடி பற்ற வைத்த தைப் போன்ற ஒரு முட்டாள்தனமாக செயலைச் செய்து நாட்டையே அவமா னத்தில் ஆழ்த்தி விபரீதத்தை விதைத்தது.
நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக டென்மார்க்கிலிருந்து வெளி வந்த ஜிலாண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. ஒன்றல்ல, 12 கார்ட்டூன் சித்திரங்களை வெளியிட்டது.
டென்மார்க்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது கோபத்தை ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வெளியிட்டனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. எகிப்தின் புகழ்பெற்ற அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் ஷேக் அஹ்மத் தந்தாவி யூசுப் அல்கர் ளாவி போன்றோர் அந்தப் பத்திரிக்கை மன்னிப்புக் கேட்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர். டென்மார்க் அரசும், ஜிலாண்ட்ஸ் போஸ்டன் பத்திரிக் கையும் மார்க்க அறிஞர்களின் கோரிக் கைக்கு தலைசாய்க்க மறுத்துவிடவே `டென்மார்க் கார்ட்டூன்’ விவகாரம் சர்வதேச அளவில் கொதி நிலையை எட்டியது. உலகெங்கும் உள்ள முஸ்லிம் கள் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
மொராக்கோவிலிருந்து இந்தியா வரை, மவுரிடானியாவிலிருந்து இந்தோ னேஷியா வரை முஸ்லிம்களின் `பெருமானார் பேரபிமானம்’ வெளிப்பட் டது. டென்மார்க் பொருட்களை புறக்கணிக்குமாறு உலக அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பால் பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னிலை வகித்த டென்மார்க், உலக முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் இழப்பினை சந்தித்தது. பால் பொருட்கள் பாழாயின. போராட்டங்கள் ஓயாத சூழ்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முஸ்ஸன் மன்னிப்புக் கேட்டார். போப் 16ஆம் பெனடிக்ட், பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ’பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் தேவையற்ற விஷயம்’ என கண்டித்தார்.
உலக அளவில் பெரும் புயலையும் பதட்டத்தையும் எழுப்பிய அதே டென் மார்க் கார்ட்டூன்களில் ஒன்றைத்தான் அசட்டு துணிச்சலுடன் உள்நோக்கத் துடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.
கடந்த திங்கள்கிழமை (1.9.08) அன்று வேலூர் பதிப்பு தினமலரில் இலவச இணைப்பான கம்ப்யூட்டர் மலரில் 12வது பக்கத்தில் “லுடிர கூரநெ இணையதளம் மூலமாக படங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு `முஹமது நபி கார்ட்டூன்’ என்று விஷமத்தனமான கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டிருக்கிறது தினமலர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொலைபேசி தகவல் பரிமாற்றங்களும், குறுந்தகவல்களும் மின்னல் வேகத்தில் பறந்தன. இறைத்தூதரை அவமதித்த அடாத செயலை அனுமதிக்கவே மாட்டோம் என நாடெங்கும் குமுறல்கள் எழுந்தன. அந்த இழிசெயலை நிகழ்த்தய வேலூர் தினமலர் அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வேலூர் மட்டுமின்றி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி உள்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் மக்களின் கோபம் ஆத்திர அலையாக வெடித்தது.
வேலூரில் ஏற்பட்ட எழுச்சி ஆதிக்க சக்திகளின் அடிவயிற்றை கலக்கியது. (வேலூர் போராட்டம் தனிச்செய்தியில் காண்க). தமிழகமெங்கும் கொந்தளித்த தாலும் இதன் வீச்சில் உலகமே பதற்றம் அடைந்ததாலும் உலக மக்களின் உச்சக் கட்ட வெறுப்பை சுமந்த கேவல தினமலர் முதல் பக்கத்தில் வருத்தத்தினை தெரிவித்தது. தமிழகம் முழுவதும் நிகழ்ந்த எதிர்ப்பலையில் மக்களைத் திரட்டும் விஷயத்தில் தமுமுக பெரும் பங்கு வகித்தது. 1995ஆம் ஆண்டு முதலே தமிழக முஸ்லிம்களின் போர்க் குணத்தை வகுத்தெடுப்பதில் முழு இடம்பெற்ற அந்த மக்கள் இயக்கம் இதுவரை முஸ்லிம்களின் கல்வி, சமூகம் அரசியல் தொடர்பான போராட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்திக் காட்டியது.
இறைத்தூதரை அவமதித்த தினமலர் விவகாரத்தில் தமுமுக தமிழகமெங்கும் போர்க்கோலம் பூண்டது. இளைஞர் சக்தியின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தலைவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.
சரியாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் அவமதிப்புக் கார்ட் டூனை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தினர். இதைப் பயன்படுத்தி நாடெங்கும் சங்பரிவார சக்திகள் பெரும் கலவரங்களை நடத்த திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ரத்தம் குடிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. புனித ரமலான் மாதத்தில் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனி டம் பாதுகாப்பு கேட்கும் முஸ்லிம்களை வேதனைப்படுத்த வெறியோடு காத்தி ருந்த கூட்டத்தின் முக்கிய சதிகாரனாக தினமலரின் முதலாளிகளில் ஒருவரான கோபால் என்பவர் அறியப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய அஜெண்டாக்களை செயல்படுத்து வதையே லட்சியமாகக் கொண்டு அவரும் அவரது பத்திரிகையும் விளங்கி வருகிறது என்பதை இந்த நாடும் மக்களும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
மக்களின் பெருங்கோபத்தைக் கண்ட தினமலர் மன்னிப்பு கேட்டது.
மன்னித்தல் என்பது மிகப் பெரிய வர்களின் இயல்பு. மன்னிப்பு என்பது தவறிழைத்தவர்கள் அதை மீண்டும் செய்யலாம் என்பதற்கான லைசென்ஸ் அல்ல. தவறினை ஒப்புக்கொண்டு அதை மீண்டும் செய்ய மாட்டோம் என உறுதிமொழி ஏற்பதுதான் மன்னிப்பு.
தமுமுக தலைமையிடம் தினமலர் நிர்வாகம் நேரடியாக அணுகி தனது வருத்தத்தினை தெரிவித்தது.
மேலும் சில சாதுவான முஸ்லிம் இயக்கங்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது வருத்தத்தினை தினமலர் நிர்வாகம் தெரிவித்ததாக தனது முதல் பக்க மன்னிப்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
தினமலர் பத்திரிகைக்கு இந்த சமுதாயம் வழங்கியிருக்கும் மன்னிப்பு தினமலர் தனது தீய இயல்புகளை திருத்திக் கொள்வதற்கான அவகாசம் மட்டுமே. கார்ட்டூன் விவகாரத்தால் உலக முஸ்லிம்களின் உச்சக்கட்ட வெறுப்பிற்கு ஆளாகியிருக்கும் தினமலர் தன்னை திருத்திக் கொள்ளுமா? அல்லது மீண்டும் சிலுமிஷங்களைத் தொடர்ந்து சீரழிவில் சிக்கிக் கொள் ளுமா?
தினமலர் தான் முடிவெடுக்க வேண்டும்.
தினமலரின் அந்தர்பல்டியும் அறிவுகெட்ட வாதமும்
``You Tube’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக தினமலர் கம்ப்யூட்டர் மலரில் `இறைத்தூதர் அவமதிப்பு கார்ட்டூன்’ குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
``You Tube’ என்ற இணையதளம் வீடியோ காட்சிகளுக்காக உலக அளவில் பிரபலமான இணையதளமாகும். தேவையான படக் காட்சிகளும், சில தேவையற்ற படக் காட்சிகளும் கொண்ட அந்த இணையதளம் குறித்து அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத தினமலரின் செயலைப் பார்க்க முடிகிறது. கார்ட்டூனைப் பார்க்க `லுடிர கூரநெ’ இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பதில் தினமலரின் விஷமம் தெரிய வருகிறது.
இரண்டாவது அது உலகையே டென்மார்க் கார்ட்டூன் என்பது மடையனுக்குக் கூடத் தெரியும். வேண்டுமென்றே வம்பை விலை கொடுத்து வாங்குவதற்காகவே செய்த தினமலரின் தீய செயல் தெளிவாகிறது. அதை தங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர் தொழிலாளி ஒருவர் செய்து விட்டார் என மழுப்புவது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.
சரி, ஆசிரியர் குழுவினருக்கு தெரியாமல் நடந்த தவறு என்றே ஒப்புக்கொண்டு தொலைப்போம். ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் செயலை ஏன் செய்ய வேண்டும்? முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை வைத்தே தினமலரின் ஊழியர்கள் உரம் ஊட்டப்படுகிறார்களா?
அப்படி ஒரு வெறிபிடித்த மனநோயாளிகளின் கூட்டம் தமிழகத்திற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. தினமலரின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பியூன், குப்பை கூட்டி பெருக்குபவன், முதலாளி என அனைவரும் குரோத வெறிபிடித்த கிறுக்கன்களாகவே இருப்பார்களோ என மக்கள் நினைப்பதில் அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது
தமிழகம் முழுவதும் கொந்தளிப்பு!!
ஹபீபாபாலன்
உலகத்தின் வழிகாட்டி, உத்தமர் நபிகள் பெருமானாரின் வாழ்வியல் நெறி வசந்தமாய் பூமிப் பந்தெங்கும் பரவி வருகிறது. காற்றை விட வேகமாக, கடலை விட ஆழமாக, ஆகாயத்தை விட விசாலமாக அந்த தூயவரின் வழிகாட்டுதல்கள் எட்டுத் திக்கும் பற்றிப் பரவி வருகிறது. நபிகள் பெருமானை அனைத்துத் துறைகளுக்கும் வழிகாட்டி யாகப் பெற்றதை தங்களின் பெறற்கரிய பாக்கியமாக எண்ணி உலகின் 140 கோடி முஸ்லிம்கள் பூரித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். உயிரை விட மேலாகக் கருதும் அந்த உத்தமரின் புகழுக்கு துளி அளவு மாசு நேர்ந்தாலும் புழுவென துடித்துப் போவார்கள், புயலென கொதித்து எழுவார்கள், சூரியக் கதர்களாய் சுட்டெரிக்கப் புறப்படுவார்கள்.
அண்ணலாரின் மீது இந்த அவனி யில் வாழும் 140 கோடி முஸ்லிம்கள் காட்டும் அன்பு அத்தகையது.
பெருமானார் (ஸல்) அவர்களின் மாண்பினைக் குலைக்கும் முயற்சியை எவர் செய்தாலும் அப்போது `யுகப் பிரளயமே’ உருவானதோ என இந்த உலகமே கலங்கும் அளவுக்கு மக்களின் தார்மீக கோபம் இந்த பூமிப் பந்தை உஷ்ணமாக்கியிருக்கிறது.
சரித்திரங்கள் சாட்சியம் பகர்கின்றன. இவையெல்லாம் ஒரு சராசரி பொது அறிவு கொண்ட மனிதனுக்குக் கூட தெரியும். ஆனால் தினமலர் என்ற நாளேட்டிற்கு எப்படித் தெரியாமல் போனது? சீண்டிப் பார்க்கும் சின்னப் புத்தி இந்த இதழின் பரம்பரை குணம் என்றாலும் கூட விபரீதத்தை விலைக்கு வாங்குகிறோம் என்பதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு விஷய ஞானம் கொண்டவர்கள்(!)தான் தினமலரை நடத்தி வருகிறார்கள் என்பதை நம்ப இங்கு யாரும் தயாராக இல்லை.
தமிழகம் திராவிட இயக்க பூமி, பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண் என்பது பிரச்சார வியூக அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. பொட்டில் அடித்தாற்போல், செவுளில் அறைந்தாற் போல் மற்றொரு உண்மையை விழுங்கிக் கொள்ள, உண்மையை விளங்கிக் கொள்ள தமிழகம் மெல்ல மெல்ல தயாராகி வருகிறது.
இந்திய பூபாகத்தை பெரும் சீரழிவுக்கு உள்ளாக்கி வருகின்ற ஹிந்துத்துவ பாசிசவாதத்திற்கான மூலப்பொருள், கருப்பொருள், அந்த பாசிசவாதத்தை வேகமாக கொண்டு செல்ல உதவும் எரிபொருள் தமிழகத்திலிருந்துதான் விநியோகிக்கப்படுகிறது என்ற உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும்?
இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவருக்கும் தலைமைப் பீடமான நாக்பூர் என்றும், அதன் தலைவர் சுதர்சன் என்றும் இந்த நாடு தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறது. ஆனால் உண்மையில் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அனைவரின் (அஞ்)ஞான குருவாக தமிழகத்தைச் சேர்ந்த குருமூர்த்திதான் விளங்கி வருகிறார் என்பதை கள்ளம் கபடமில்லா தமிழக மக்கள் மெல்ல மெல்ல உணரத் தொடங்கி விட்டார்கள்.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையான குஜராத் இனப் படுகொலையின் சூத்ரதாரி என வரலாற்றின் கறுப்புப் பக்கங்களில் வரித்தெடுக்கப்பட்டவர் நரவேட்டை நரேந்திர மோடி. அவரது மூச்சுக்காற்று பட்டால் கூட முழு நாசம் என எண்ணிய இந்த நாடு அவரை சற்று தள்ளியே வைத்தது. பாதகம் இழைக்க அஞ்சாத பாஜக கூட கொடூர மோடியை குஜராத்துக்கு வெளியே எட்டிப் பார்க்கக் கூடாது என தலையில் குட்டி வைத்தது. அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விசா வழங்க மறுத்து மோடியை ஒரு சர்வதேச `போர்க் குற்றவாளி’ எனும் அளவுக்கு கீழிறக்கி காட்டியது.
இந்தியாவே காறி உமிழ்ந்தால் என்ன? அமெரிக்காவும் பிரிட்டனும் விசா வழங்க மறுத்தால்தான் என்ன? பாஜகவே பக்கத்தில் வராதே என வெருண்டோடினால்தான் என்ன? மூன்றாயிரம் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற நரேந்திர மோடிக்கு முழுக் கிரீடம் சூட்ட நாங்கள் தயார் என தமிழகத்திலிருந்து முதல் குரல் எழுந் தது. ஒன்று இரண்டானது, இரண்டு மூன்றானது.
திராவிடத் தாய் என தனது கட்சிக்காரர்களாலேயே புகழப்பட்ட ஜெயலலிதா, மோடியின் பதவியேற்பு விழாவிற்கு தனி விமானத்தில் பறந்து சென்றார். பொங்கல் விருந்துக்கு அழைத்தார். ஹிந்துத்துவ பாசிசத்தின் அகில இந்திய பிரச்சார பீரங்கி, சிரிப்பு நடிகர் `சோ’ ராமசாமி தனது பத்திரிக் கையின் விழாவுக்கு அழைத்தார். மோடியின் ஆட்சியை பொற்கால ஆட்சி என விமர்சித்து சிறப்பு இதழ் வெளி யிட்டது கல்கி வார ஏடு. (மூன்றாயிரம் முஸ்லிம்களை கதறக் கதற குதறிய அந்த செயலைத்தான் (!) கல்கி ஏடு பொற்கால ஆட்சி என்றதோ?) மேற்கூறிய அத்தனை புண்ணிய(!) வான்களுக்கும் ஒருபடி மேலாக செயல்படும் ஒரு தீவிர பாசிச சக்தியாக தினமலர் நாளேடு செயல்பட்டது. முஸ்லிம்களின் மனதை வேதனைப் படுத்துவதில் முன்னிலை வகித்தது தினமலர். நாளொரு அவதூறும், பொழுதொரு புளுகுமாய் வெளியிட்டு வெறித்தனத்தை பறைசாற்றியது.
முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்நாட் டில் வாழும், உழைத்து பிழைக்கும் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அழுத்தப் பட்ட மக்களை அவமானப்படுத்துவதில் அது முன்னிலை வகித்தது.
கோபால்ஜி என்றழைக்கப்படும் தினமலர் (வி.எச்.பி.) கோபால்
சமூக நீதி தத்துவத்தின் பிதாமகனாக தமிழக மக்களால் போற்றப்படும் பெரியாரை அனைத்துத் தரப்பு மக்களும் பெரியார் என்று அழைப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், பெரியாரை ஈ.வே.ரா. என தனது பத்திரிக்கையில் எழுதி ஈனத்தனமாக நடந்து கொண்டது.
ஒரு தாயின் வயிற்றில் நாம் அனை வரும் பிறந்தால் அந்தத் தாயின் மணி வயிறு தாங்காது என்ற காரணத்தால் தனித்தனி தாயின் வயிற்றில் பிறந்தோ மடா தம்பிகளா? என தமிழக இளைஞர் களை சகோதர வாஞ்சையுடன் அழைத்து மகிழ்ந்தவர் அறிஞர் அண்ணா. அத னால்தான் அவரை அண்ணா, அண்ணா என தமிழகம் அழைத்து மகிழ்ந்தது. அரசியல் எதிர்முகாமில் உள்ளவாகள் கூட அண்ணா என அழைத்த போதும், தினமலர் மட்டும் அண்ணாதுரை என அதிமேதாவி(!)த்தனமாக அழைத்து தன்னை அடையாளம் காட்டியது.
தமிழ்நாட்டில் பாமரர்களையும் பத்தி ரிகை படிக்க வைத்தவர் தினத்தந்தி ஆதித்தனார். பத்திரிகையுலக ஜாம்ப வான் என அவரை அழைப்பதுண்டு. அவரை தமிழர் தந்தை என அவர் மீது அன்பு கொண்டோர் அழைத்தனர். அதில் தினமலருக்கு ஏற்பட்ட வயிற்றெ ரிச்சலில் கொச்சைப்படுத்தும் வரிகளை வெளியிட்டது.
தமிழின உணர்வாளர்களை, தலித் பெருமக்களை,பிற்படுத்தப்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி இன்பம் கண்டது.
கற்பு குறித்து விநோதமான கருத்து தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்புவுக்கு முஸ்லிம் பெண்களின் மத்தியில் ஆதரவு அலை வீசுகிறது என பைத்தியக்காரன் கூட கற்பனை செய்ய முடியாத ஒரு கருத்தை தினமலர் அச்சில் ஏற்றியது.
மாலேகான் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 50க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நாடே வேதனை யில் ஆழ்ந்த அந்த சம்பவத்தில் கூட தினமலர் தனது ஈனச் செயலின் மூலம் சாதனையைப் படைத்தது.
`மாலேகான் பள்ளிவாசலில் இருந்த குண்டு வெடித்தது’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.
இவ்வாறு ஈனத்தனத்திலும் இழிசெய லிலும் சாதனை(!) படைத்த தினமலர், பெட்ரோல் கிணற்றில் பீடி பற்ற வைத்த தைப் போன்ற ஒரு முட்டாள்தனமாக செயலைச் செய்து நாட்டையே அவமா னத்தில் ஆழ்த்தி விபரீதத்தை விதைத்தது.
நபிகள் பெருமானாரை அவமதிக்கும் விதமாக டென்மார்க்கிலிருந்து வெளி வந்த ஜிலாண்ட்ஸ் போஸ்டன் என்ற பத்திரிகை கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டது. ஒன்றல்ல, 12 கார்ட்டூன் சித்திரங்களை வெளியிட்டது.
டென்மார்க்கில் சிறுபான்மை முஸ்லிம்கள் தங்களது கோபத்தை ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வெளியிட்டனர். சர்வதேச இஸ்லாமிய அறிஞர்களின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றது. எகிப்தின் புகழ்பெற்ற அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் தலைமை இமாம் ஷேக் அஹ்மத் தந்தாவி யூசுப் அல்கர் ளாவி போன்றோர் அந்தப் பத்திரிக்கை மன்னிப்புக் கேட்க வேண்டுமென கருத்து தெரிவித்தனர். டென்மார்க் அரசும், ஜிலாண்ட்ஸ் போஸ்டன் பத்திரிக் கையும் மார்க்க அறிஞர்களின் கோரிக் கைக்கு தலைசாய்க்க மறுத்துவிடவே `டென்மார்க் கார்ட்டூன்’ விவகாரம் சர்வதேச அளவில் கொதி நிலையை எட்டியது. உலகெங்கும் உள்ள முஸ்லிம் கள் கண்டனப் போராட்டங்களை நடத்தினர்.
மொராக்கோவிலிருந்து இந்தியா வரை, மவுரிடானியாவிலிருந்து இந்தோ னேஷியா வரை முஸ்லிம்களின் `பெருமானார் பேரபிமானம்’ வெளிப்பட் டது. டென்மார்க் பொருட்களை புறக்கணிக்குமாறு உலக அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. பால் பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் முன்னிலை வகித்த டென்மார்க், உலக முஸ்லிம்களின் புறக்கணிப்பால் பெரும் இழப்பினை சந்தித்தது. பால் பொருட்கள் பாழாயின. போராட்டங்கள் ஓயாத சூழ்நிலையில், டென்மார்க் பிரதமர் ரஸ்முஸ்ஸன் மன்னிப்புக் கேட்டார். போப் 16ஆம் பெனடிக்ட், பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்தார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் ’பெருமானார் அவமதிப்பு கார்ட்டூன் தேவையற்ற விஷயம்’ என கண்டித்தார்.
உலக அளவில் பெரும் புயலையும் பதட்டத்தையும் எழுப்பிய அதே டென் மார்க் கார்ட்டூன்களில் ஒன்றைத்தான் அசட்டு துணிச்சலுடன் உள்நோக்கத் துடன் தினமலர் பத்திரிகை வெளியிட்டது.
கடந்த திங்கள்கிழமை (1.9.08) அன்று வேலூர் பதிப்பு தினமலரில் இலவச இணைப்பான கம்ப்யூட்டர் மலரில் 12வது பக்கத்தில் “லுடிர கூரநெ இணையதளம் மூலமாக படங்களைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு `முஹமது நபி கார்ட்டூன்’ என்று விஷமத்தனமான கார்ட்டூன் சித்திரத்தை வெளியிட்டிருக்கிறது தினமலர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தொலைபேசி தகவல் பரிமாற்றங்களும், குறுந்தகவல்களும் மின்னல் வேகத்தில் பறந்தன. இறைத்தூதரை அவமதித்த அடாத செயலை அனுமதிக்கவே மாட்டோம் என நாடெங்கும் குமுறல்கள் எழுந்தன. அந்த இழிசெயலை நிகழ்த்தய வேலூர் தினமலர் அலுவலகத்தின் முன்பு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டனர். வேலூர் மட்டுமின்றி, திருவண்ணாமலை, சேலம், திருச்சி உள்பட மாநிலத்தின் பல பாகங்களிலும் மக்களின் கோபம் ஆத்திர அலையாக வெடித்தது.
வேலூரில் ஏற்பட்ட எழுச்சி ஆதிக்க சக்திகளின் அடிவயிற்றை கலக்கியது. (வேலூர் போராட்டம் தனிச்செய்தியில் காண்க). தமிழகமெங்கும் கொந்தளித்த தாலும் இதன் வீச்சில் உலகமே பதற்றம் அடைந்ததாலும் உலக மக்களின் உச்சக் கட்ட வெறுப்பை சுமந்த கேவல தினமலர் முதல் பக்கத்தில் வருத்தத்தினை தெரிவித்தது. தமிழகம் முழுவதும் நிகழ்ந்த எதிர்ப்பலையில் மக்களைத் திரட்டும் விஷயத்தில் தமுமுக பெரும் பங்கு வகித்தது. 1995ஆம் ஆண்டு முதலே தமிழக முஸ்லிம்களின் போர்க் குணத்தை வகுத்தெடுப்பதில் முழு இடம்பெற்ற அந்த மக்கள் இயக்கம் இதுவரை முஸ்லிம்களின் கல்வி, சமூகம் அரசியல் தொடர்பான போராட்டங்களை மக்கள் இயக்கமாக நடத்திக் காட்டியது.
இறைத்தூதரை அவமதித்த தினமலர் விவகாரத்தில் தமுமுக தமிழகமெங்கும் போர்க்கோலம் பூண்டது. இளைஞர் சக்தியின் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த தலைவர்கள் பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டியதாயிற்று.
சரியாக விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாளில் அவமதிப்புக் கார்ட் டூனை வெளியிட்டு அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் கொந்தளித்து போராட்டங்களை நடத்தினர். இதைப் பயன்படுத்தி நாடெங்கும் சங்பரிவார சக்திகள் பெரும் கலவரங்களை நடத்த திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி ரத்தம் குடிக்க ஒரு கூட்டம் தயாராக இருந்தது. புனித ரமலான் மாதத்தில் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் இறைவனி டம் பாதுகாப்பு கேட்கும் முஸ்லிம்களை வேதனைப்படுத்த வெறியோடு காத்தி ருந்த கூட்டத்தின் முக்கிய சதிகாரனாக தினமலரின் முதலாளிகளில் ஒருவரான கோபால் என்பவர் அறியப்படுகிறார். விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய அஜெண்டாக்களை செயல்படுத்து வதையே லட்சியமாகக் கொண்டு அவரும் அவரது பத்திரிகையும் விளங்கி வருகிறது என்பதை இந்த நாடும் மக்களும் எப்போதும் மறக்க மாட்டார்கள்.
மக்களின் பெருங்கோபத்தைக் கண்ட தினமலர் மன்னிப்பு கேட்டது.
மன்னித்தல் என்பது மிகப் பெரிய வர்களின் இயல்பு. மன்னிப்பு என்பது தவறிழைத்தவர்கள் அதை மீண்டும் செய்யலாம் என்பதற்கான லைசென்ஸ் அல்ல. தவறினை ஒப்புக்கொண்டு அதை மீண்டும் செய்ய மாட்டோம் என உறுதிமொழி ஏற்பதுதான் மன்னிப்பு.
தமுமுக தலைமையிடம் தினமலர் நிர்வாகம் நேரடியாக அணுகி தனது வருத்தத்தினை தெரிவித்தது.
மேலும் சில சாதுவான முஸ்லிம் இயக்கங்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து தனது வருத்தத்தினை தினமலர் நிர்வாகம் தெரிவித்ததாக தனது முதல் பக்க மன்னிப்பு செய்தியில் குறிப்பிட்டிருந்தது.
தினமலர் பத்திரிகைக்கு இந்த சமுதாயம் வழங்கியிருக்கும் மன்னிப்பு தினமலர் தனது தீய இயல்புகளை திருத்திக் கொள்வதற்கான அவகாசம் மட்டுமே. கார்ட்டூன் விவகாரத்தால் உலக முஸ்லிம்களின் உச்சக்கட்ட வெறுப்பிற்கு ஆளாகியிருக்கும் தினமலர் தன்னை திருத்திக் கொள்ளுமா? அல்லது மீண்டும் சிலுமிஷங்களைத் தொடர்ந்து சீரழிவில் சிக்கிக் கொள் ளுமா?
தினமலர் தான் முடிவெடுக்க வேண்டும்.
தினமலரின் அந்தர்பல்டியும் அறிவுகெட்ட வாதமும்
``You Tube’ என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக தினமலர் கம்ப்யூட்டர் மலரில் `இறைத்தூதர் அவமதிப்பு கார்ட்டூன்’ குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறது.
``You Tube’ என்ற இணையதளம் வீடியோ காட்சிகளுக்காக உலக அளவில் பிரபலமான இணையதளமாகும். தேவையான படக் காட்சிகளும், சில தேவையற்ற படக் காட்சிகளும் கொண்ட அந்த இணையதளம் குறித்து அறிவுக்கு சற்றும் பொருத்தமில்லாத தினமலரின் செயலைப் பார்க்க முடிகிறது. கார்ட்டூனைப் பார்க்க `லுடிர கூரநெ’ இணையதளத்தைப் பார்க்கலாம் என்று தெரிவித்திருப்பதில் தினமலரின் விஷமம் தெரிய வருகிறது.
இரண்டாவது அது உலகையே டென்மார்க் கார்ட்டூன் என்பது மடையனுக்குக் கூடத் தெரியும். வேண்டுமென்றே வம்பை விலை கொடுத்து வாங்குவதற்காகவே செய்த தினமலரின் தீய செயல் தெளிவாகிறது. அதை தங்களுக்குத் தெரியாமல் கம்ப்யூட்டர் தொழிலாளி ஒருவர் செய்து விட்டார் என மழுப்புவது கடைந்தெடுத்த கயமைத்தனமாகும்.
சரி, ஆசிரியர் குழுவினருக்கு தெரியாமல் நடந்த தவறு என்றே ஒப்புக்கொண்டு தொலைப்போம். ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்துவதற்காக முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் செயலை ஏன் செய்ய வேண்டும்? முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வை வைத்தே தினமலரின் ஊழியர்கள் உரம் ஊட்டப்படுகிறார்களா?
அப்படி ஒரு வெறிபிடித்த மனநோயாளிகளின் கூட்டம் தமிழகத்திற்கு நிச்சயம் ஊறு விளைவிக்கக் கூடியது என்பதில் ஐயமில்லை. தினமலரின் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பியூன், குப்பை கூட்டி பெருக்குபவன், முதலாளி என அனைவரும் குரோத வெறிபிடித்த கிறுக்கன்களாகவே இருப்பார்களோ என மக்கள் நினைப்பதில் அர்த்தம் உள்ளதாகவே தோன்றுகிறது
Thursday, September 4, 2008
விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்!
உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!
-சர்ஜுன்
ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.
பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.
ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.
கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.
ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.
அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.
முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை
5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...
அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.
6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.
இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.
ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.
காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.
10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.
முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.
தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.
தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.
2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.
இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.
ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
1. விஜய் பரிச்சா
2. ஆர்.கே. நாயக்
3. ஜோசப் நாயக்
4. சூசன் நாயக்
5. சந்தோஷ நாயக்
6. ஹரி ஹர்தாஸ்
7. மோசே நாயக்
8. பிரகாஷ் நாயக்
9. மோசே நாயக்
10. ராஜு மற்றும் பலர்
ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.
பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்
பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்
மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.
பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.
குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.
முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.
இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!
-சர்ஜுன்
ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.
பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.
ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.
கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.
ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.
அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.
முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை
5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.
6 மணிக்கு...
அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.
6.45 மணி...
பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.
இரவு 7 மணிக்கு..
ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.
ஆகஸ்ட் 25, 2008...
வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.
காலை 7 மணி..
புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.
10.30 மணி..
பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.
முற்பகல் 11.30 மணி...
நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.
தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.
ஒரு மணி..
ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.
தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.
2 மணி...
கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.
இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.
ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.
சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.
ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.
1. விஜய் பரிச்சா
2. ஆர்.கே. நாயக்
3. ஜோசப் நாயக்
4. சூசன் நாயக்
5. சந்தோஷ நாயக்
6. ஹரி ஹர்தாஸ்
7. மோசே நாயக்
8. பிரகாஷ் நாயக்
9. மோசே நாயக்
10. ராஜு மற்றும் பலர்
ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.
பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்
பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்
மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.
பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.
குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.
குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.
பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.
முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.
இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன
Friday, August 1, 2008
abusalih news on bangalooru and ahamedabad
தொடரும் குண்டுவெடிப்புகள்: உளவுத்துறையின் எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய மோடி...
-தமிழ்மாறன்
மே மாதம் நிகழ்ந்த ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி பெங்களூருவிலும், அதற்கு அடுத்த நாள் குஜராத் மாநிலத் தலைநகர் அஹ்மதாபாத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
பெங்களூருவில் ஒரு பெண் உள்பட இருவர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். பலியானவர் களில் ஒருவரின் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றொரு வர் யார் என்பதை இன்னும் வெளியிட வில்லை. ஜூலை 26ஆம் தேதி குஜராத் தலைநகர் அஹ்மதாபாத்தில் நிகழ்ந்த 16 தொடர் குண்டுவெடிப்பு களில் 49க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் கள் நடைபெறும்போதெல்லாம் பாரதீய ஜனதா, மத்திய அரசின் மீதும் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளின் மீதும் சரமாரியாக குற்றச் சாட்டுக்கள் கூறுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாங்கள் மட்டுமே தீவிரவா தத்தை ஒழிப்பதில் முன்னிலை வகிக்கி றோம் என்று ஜம்பம் அடித்தவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியா மல் தவித்ததோடு மத்திய அரசின் மீது மீண்டும் குற்றம்சாட்டும் முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் பெருமை அடித்தவர்கள், பிறரைக் குறைகூறித் திரிந்தவர்கள் தாங்கள் ஆட்சி செய்யும் மாநில மக்களை காப்பாற்ற முடியாத அவல நிலை தொடர்கிறது.
இதற்கிடையில், 'இந்த குண்டுவெடிப்பு நாட்டுக்கே எதிரானது. நாட்டின் விரோதி கள் மஹாத்மா காந்தி பிறந்த மண்ணில் ரத்தம் சிந்தவைத்து விட்டனர் என குஜராத் முதலமைச்சர் மோடி அறிக்கை வெளியிட்டது அந்த துயரமான சூழ்நிலையிலும் நாடெங்கும் சிரிப்பு அலையைத் தோற்றுவித்தது.
மோடி 2002ல் குஜராத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைகளுக்கு பழிவாங்கும் முயற்சியாக இதனை சில பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருப்பார்கள் என ஊக செய்திகள் உலா வருகின்றன. இதனை உள்நோக்கத்தோடு பரப்புகிறார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
குஜராத் 2002 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களில் ஏராளமானோர் இன்னும் நிவாரண முகாம்களில் வாழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற இரக்கமற்ற குற்றச்சாட்டுக்கள் எழுவது நியாயம் தானா? என நடுநிலையாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.
வழக்கம்போல தற்போதும் கூட ஊடகங்கள் அனைத்தும் தங்களது ஒரு தலைப்பட்சமான நீதி விசாரணையை நடத்தத் துவங்கிவிட்டன. அவர்கள் மனம் போல் ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு கதைவிடத் தொடங்கினார்கள். முஸ்லிம் களை வேதனைப்படுத்தும் விதமாக கற்பனைகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. இந்த நிலையிலும் நாட்டின் நெருக்கடியான சூழ்நிலை யில் நாட்டின் முன்னணி முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இது நாட்டு மக்களின் ஒற்றுமை யைக் குலைக்கும் செயல், மனித குலத்துக்கே விரோதமான செயல் என்றும் நாடு தழுவிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த், தமுமுக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கர்நாடகா முத்தஹிதா தஹ்ரீக், கர்நாடகா போரம் டிக்னிட்டி, மஹராஷ்ட்ரா மாநிலத்தின் எம்.பி.ஜெ., பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா வில் செயல்ட்டு வரும் இமாரத் ஷரீஆ உள்ளிட்ட இயக்கங்களும் தங்களது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
இமாரத் ஷரீஆ அமைப்பின் பொதுச் செயலாளர் அனீசுர் ரஹ்மான் காசிமி தனது கண்டன அறிக்கையில் உளவுத் துறையின் சோம்பலே இத்தகைய குண்டு வெடிப்பு நிகழ முக்கியக் காரணம் என தெரிவித்திருக்கிறார்.
புதன்கிழமைக்கு அடுத்து வியாழக்கிழமை என்று கூறுவதைப் போல முதலில் குண்டு வெடிப்பு அதன் பிறகு சிமி அமைப்பின் மீது சந்தேகம் என காவல்துறையினர் பேட்டி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது.
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது ''சிமி இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?'' என ஆங்கில செய்திச் சேனலின் பெண் நிருபர் ஒருவர் கேட்கிறார். அதற்கு ''விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என அந்த அதிகாரி பதில் சொல்கிறார். அதாவது இவர்களாகவே யூகங்களை கேள்விகளாகக் கேட்டு அதை அமைச்சர்களையோ அதிகாரிகளையோ 'ஆம்' என்று சொல்ல வைத்து சிமிக்கு தொடர்பு ஏற்படுத்தி செய்தியை பரப்பி விடுவார்கள்.
நான்டெட்டிலும், நவி மும்பையிலும், தென்காசியிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய சங் பரிவார் பயங்கரவாத இயக்கங்கள் குறித்து எந்த செய்தி ஊடகமும் வாய் திறப்பதில்லை.
உண்மையை சாகடிக்கும் போக்கையே தொடர்கிறார்கள்.
விசாரணைகளை துவங்குவதற்கு முன்பே தீர்ப்பு களை எழுதும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். செப்டம்பர் 11, 2001ல் அமெரிக்காவில் நிகழ்ந்த நியூயார்க் வர்த்தக மையத் தாக்குதலின் போது எவ்வித முகாந்திரமும் இன்றி சிமி அமைப்பு தடை செய்யப் பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு சிமி மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. இரண்டு முறை காங்கிரஸ் அரசு தடையை நீட்டித்து உள்ளது.
பாஜகவை விட தாங்கள் ரொம்ப(!) நல்லவர்கள் (!) என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது.
குற்றம் யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் சமீப காலமாக நிகழும் குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டியவர்களை கொடுமைக்கு உள்ளாக்கியதைத் தவிர உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா?
சிமிக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என 2006ல் தெரிவித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வாலும் மும்பை தொடர் வண்டி குண்டு வெடித்த போது சிமி மீது குற்றம் சாட்டி செய்திகள் வந்தபோது சிமி மீது பயங்கரவாத குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என மறுத்த முலாயம் சிங்கும் தற்போது வாய் மூடி இருப்பது ஏன்? இவர்களின் வாய்களை அடைத்தது எது? குரல் வளைகளுக்கு பூட்டு போட்டவன் எவன்?
குண்டு வெடிப்புகள் தற்போது ஆறு மாதத்துக்கு ஒரு தடவை ஏதோ பட்டாசு வெடிப்பதைப் போல நிகழ்வது எதனால்? யாரால்? விடை தெரியாத இந்தக் கேள்விக்கு அப்பாவி முஸ்லிம்களை பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயம்?
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து பாஜகவின் பெருந்தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டன் வரை பங்களாதேஷிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் தான் இதற்கு காரணம் என கூறத் தொடங்கினர்.
காவல்துறையும், அப்பாவி வங்காள மக்களை வேட்டையாடத் தொடங்கியது. பங்களாதேஷ் மக்களை வேட்டையாடத் தொடங்கிய அவர்கள் வங்காள மொழி பேசும் மேற்கு வங்காள மக்களையும் வேட்டையாடத் தொடங்கினர். இது ஏழை அப்பாவிகளை அல்லலுக்கு உள்ளாக்கியது. சுயேச்சையான சிறப்பு விசாரணைகள் அமைக்கப்படவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் கூட பலன் ஏதும் விளையவில்லை.
ஒரு குறிப்பிட்ட நலிவுற்ற சமூகத்தை மட்டும் துன்புறுத்தும் போக்கை இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருவார்கள்? உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டா இல்லையா? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த பம்மாத்து வேலைகள்.
மத்திய அரசும் உளவுத்துறையும் எத்தனை முறை எச்சரித்தும் மோடி அதனை அலட்சியப்படுத்தியிருக்கிறார்.
இத்தகவலை குஜராத்தின் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் ராஜீவ் சுக்லா கூறுகிறார்.
''இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நரேந்திர மோடி தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
குஜராத்தை நான் நன்றாக வைத்திருக்கிறேன். சிறப்பான பாதுகாப்பு உள்ளது என்று வானளாவ தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு திரிந்தார். அடிப் படை பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. மத்திய உளவுத் துறையின் எச்சரிச்கை அலட்சியப்படுத்தப்பட்டது. மத்திய அரசை பாய்ந்து பிராண்டியதற்கு காங்கிரஸின் சார்பில் சுடச்சுட பதிலடி கிடைத்திருக்கிறது.
குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளது எச்சரிக்கையாக இருக்கவும் என பலமுறை மத்திய அரசு எச்சரித்தும் மோடிக் கூட்டத்தின் கவன மின்மையால் அப்பாவி மக்கள் 49 பேர் பலியாகி உள்ளனர்.
ஒருநாள் முன்பு தான் பெங்களூருவில் குண்டு வெடித்தது. மோடிக்கூட்டம் குஜராத்தில் என்னவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதை விளக்கத் தயாராக இல்லை. இதுவரை 19 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டனரா? பின்னணியில் நின்று செயல்பட்டவர்கள். சூத்ரதாரிகள் யாரும் கண்டு பிடிக்கப்படவில்லை.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மட்டும் குறிவைக்கும் போக்கு மட்டும் தொடர்கிறது. அனைத்து முதலமைச்சர்களையும் கூட்ட வேண்டுமென்கிறார் மோடி. முதலமைச்சர்கள் மட்டுமல்ல, அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் புலனாய்வு செய்த, செய்து கொண்டிருக்கிற அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கூட்டி இதுவரை இவர்கள் செய்த விசாரணை முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் கைதுகள் குறித்து தீவிர ஆய்வுகள் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தீவிரவாத சிந்தனையோடு அலையும் பேர்வழிகளை ஒழிப்பதில் மக்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றனர். நிஜ தீவிரவாதிகளை ஒழிக்க அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப் படவேண்டும்
-தமிழ்மாறன்
மே மாதம் நிகழ்ந்த ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து ஜூலை 25ஆம் தேதி பெங்களூருவிலும், அதற்கு அடுத்த நாள் குஜராத் மாநிலத் தலைநகர் அஹ்மதாபாத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
பெங்களூருவில் ஒரு பெண் உள்பட இருவர் பலியானார்கள். பலர் படுகாயம் அடைந்தனர். பலியானவர் களில் ஒருவரின் பெயர் மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறது. மற்றொரு வர் யார் என்பதை இன்னும் வெளியிட வில்லை. ஜூலை 26ஆம் தேதி குஜராத் தலைநகர் அஹ்மதாபாத்தில் நிகழ்ந்த 16 தொடர் குண்டுவெடிப்பு களில் 49க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள்.
நாட்டில் பயங்கரவாத தாக்குதல் கள் நடைபெறும்போதெல்லாம் பாரதீய ஜனதா, மத்திய அரசின் மீதும் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற சக்திகளின் மீதும் சரமாரியாக குற்றச் சாட்டுக்கள் கூறுவது வழக்கமான ஒன்றாக இருந்தது. நாங்கள் மட்டுமே தீவிரவா தத்தை ஒழிப்பதில் முன்னிலை வகிக்கி றோம் என்று ஜம்பம் அடித்தவர்கள் பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியா மல் தவித்ததோடு மத்திய அரசின் மீது மீண்டும் குற்றம்சாட்டும் முயற்சிகளை தொடர்ந்து வருகின்றது.
இந்நிலையில் பெருமை அடித்தவர்கள், பிறரைக் குறைகூறித் திரிந்தவர்கள் தாங்கள் ஆட்சி செய்யும் மாநில மக்களை காப்பாற்ற முடியாத அவல நிலை தொடர்கிறது.
இதற்கிடையில், 'இந்த குண்டுவெடிப்பு நாட்டுக்கே எதிரானது. நாட்டின் விரோதி கள் மஹாத்மா காந்தி பிறந்த மண்ணில் ரத்தம் சிந்தவைத்து விட்டனர் என குஜராத் முதலமைச்சர் மோடி அறிக்கை வெளியிட்டது அந்த துயரமான சூழ்நிலையிலும் நாடெங்கும் சிரிப்பு அலையைத் தோற்றுவித்தது.
மோடி 2002ல் குஜராத்தில் நிகழ்த்திய இனப்படுகொலைகளுக்கு பழிவாங்கும் முயற்சியாக இதனை சில பயங்கரவாதிகள் நிகழ்த்தியிருப்பார்கள் என ஊக செய்திகள் உலா வருகின்றன. இதனை உள்நோக்கத்தோடு பரப்புகிறார்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
குஜராத் 2002 இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களில் ஏராளமானோர் இன்னும் நிவாரண முகாம்களில் வாழ்ந்து வரும் நிலையில் இதுபோன்ற இரக்கமற்ற குற்றச்சாட்டுக்கள் எழுவது நியாயம் தானா? என நடுநிலையாளர்கள் வினா எழுப்புகிறார்கள்.
வழக்கம்போல தற்போதும் கூட ஊடகங்கள் அனைத்தும் தங்களது ஒரு தலைப்பட்சமான நீதி விசாரணையை நடத்தத் துவங்கிவிட்டன. அவர்கள் மனம் போல் ஏதாவது ஒரு முஸ்லிம் இயக்கத்தின் பெயரைக் குறிப்பிட்டு கதைவிடத் தொடங்கினார்கள். முஸ்லிம் களை வேதனைப்படுத்தும் விதமாக கற்பனைகள் சிறகடித்துப் பறக்கத் தொடங்கின. இந்த நிலையிலும் நாட்டின் நெருக்கடியான சூழ்நிலை யில் நாட்டின் முன்னணி முஸ்லிம் அமைப்புகள் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளன.
இது நாட்டு மக்களின் ஒற்றுமை யைக் குலைக்கும் செயல், மனித குலத்துக்கே விரோதமான செயல் என்றும் நாடு தழுவிய இயக்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஜம்யிய்யத்தே உலமாயே ஹிந்த், தமுமுக, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கர்நாடகா முத்தஹிதா தஹ்ரீக், கர்நாடகா போரம் டிக்னிட்டி, மஹராஷ்ட்ரா மாநிலத்தின் எம்.பி.ஜெ., பீகார், ஜார்கண்ட் மற்றும் ஒரிஸ்ஸா வில் செயல்ட்டு வரும் இமாரத் ஷரீஆ உள்ளிட்ட இயக்கங்களும் தங்களது கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.
இமாரத் ஷரீஆ அமைப்பின் பொதுச் செயலாளர் அனீசுர் ரஹ்மான் காசிமி தனது கண்டன அறிக்கையில் உளவுத் துறையின் சோம்பலே இத்தகைய குண்டு வெடிப்பு நிகழ முக்கியக் காரணம் என தெரிவித்திருக்கிறார்.
புதன்கிழமைக்கு அடுத்து வியாழக்கிழமை என்று கூறுவதைப் போல முதலில் குண்டு வெடிப்பு அதன் பிறகு சிமி அமைப்பின் மீது சந்தேகம் என காவல்துறையினர் பேட்டி கொடுப்பதும் வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது.
பெங்களூரு குண்டு வெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு சம்பவ இடத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்தபோது ''சிமி இதன் பின்னணியில் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?'' என ஆங்கில செய்திச் சேனலின் பெண் நிருபர் ஒருவர் கேட்கிறார். அதற்கு ''விசாரித்துக் கொண்டிருக்கிறோம்'' என அந்த அதிகாரி பதில் சொல்கிறார். அதாவது இவர்களாகவே யூகங்களை கேள்விகளாகக் கேட்டு அதை அமைச்சர்களையோ அதிகாரிகளையோ 'ஆம்' என்று சொல்ல வைத்து சிமிக்கு தொடர்பு ஏற்படுத்தி செய்தியை பரப்பி விடுவார்கள்.
நான்டெட்டிலும், நவி மும்பையிலும், தென்காசியிலும் நிகழ்ந்த குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய சங் பரிவார் பயங்கரவாத இயக்கங்கள் குறித்து எந்த செய்தி ஊடகமும் வாய் திறப்பதில்லை.
உண்மையை சாகடிக்கும் போக்கையே தொடர்கிறார்கள்.
விசாரணைகளை துவங்குவதற்கு முன்பே தீர்ப்பு களை எழுதும் போக்கு நிறுத்தப்பட வேண்டும். செப்டம்பர் 11, 2001ல் அமெரிக்காவில் நிகழ்ந்த நியூயார்க் வர்த்தக மையத் தாக்குதலின் போது எவ்வித முகாந்திரமும் இன்றி சிமி அமைப்பு தடை செய்யப் பட்டது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு சிமி மீதான தடையை நீக்க மறுத்து விட்டது. இரண்டு முறை காங்கிரஸ் அரசு தடையை நீட்டித்து உள்ளது.
பாஜகவை விட தாங்கள் ரொம்ப(!) நல்லவர்கள் (!) என்பதை நிரூபிக்கும் விதமாக காங்கிரஸ் அரசு நடந்து கொண்டது.
குற்றம் யார் செய்தாலும் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் சமீப காலமாக நிகழும் குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டியவர்களை கொடுமைக்கு உள்ளாக்கியதைத் தவிர உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா?
சிமிக்கும் பயங்கரவாதச் செயல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என 2006ல் தெரிவித்த மத்திய உள்துறை இணையமைச்சர் ஜெய்ஸ்வாலும் மும்பை தொடர் வண்டி குண்டு வெடித்த போது சிமி மீது குற்றம் சாட்டி செய்திகள் வந்தபோது சிமி மீது பயங்கரவாத குற்றச்சாட்டு ஆதாரமற்ற ஒன்று என மறுத்த முலாயம் சிங்கும் தற்போது வாய் மூடி இருப்பது ஏன்? இவர்களின் வாய்களை அடைத்தது எது? குரல் வளைகளுக்கு பூட்டு போட்டவன் எவன்?
குண்டு வெடிப்புகள் தற்போது ஆறு மாதத்துக்கு ஒரு தடவை ஏதோ பட்டாசு வெடிப்பதைப் போல நிகழ்வது எதனால்? யாரால்? விடை தெரியாத இந்தக் கேள்விக்கு அப்பாவி முஸ்லிம்களை பலிகடா ஆக்குவது எவ்வகையில் நியாயம்?
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு நிகழ்வைத் தொடர்ந்து பாஜகவின் பெருந்தலைவர்கள் முதல், அடிமட்ட தொண்டன் வரை பங்களாதேஷிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் தான் இதற்கு காரணம் என கூறத் தொடங்கினர்.
காவல்துறையும், அப்பாவி வங்காள மக்களை வேட்டையாடத் தொடங்கியது. பங்களாதேஷ் மக்களை வேட்டையாடத் தொடங்கிய அவர்கள் வங்காள மொழி பேசும் மேற்கு வங்காள மக்களையும் வேட்டையாடத் தொடங்கினர். இது ஏழை அப்பாவிகளை அல்லலுக்கு உள்ளாக்கியது. சுயேச்சையான சிறப்பு விசாரணைகள் அமைக்கப்படவேண்டும் என மனித உரிமை அமைப்புகள் மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்தும் கூட பலன் ஏதும் விளையவில்லை.
ஒரு குறிப்பிட்ட நலிவுற்ற சமூகத்தை மட்டும் துன்புறுத்தும் போக்கை இன்னும் எத்தனை காலத்துக்கு தொடருவார்கள்? உண்மைகள் வெளிவரவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு உண்டா இல்லையா? யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த பம்மாத்து வேலைகள்.
மத்திய அரசும் உளவுத்துறையும் எத்தனை முறை எச்சரித்தும் மோடி அதனை அலட்சியப்படுத்தியிருக்கிறார்.
இத்தகவலை குஜராத்தின் முக்கிய காங்கிரஸ் பிரமுகர் ராஜீவ் சுக்லா கூறுகிறார்.
''இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக நரேந்திர மோடி தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
குஜராத்தை நான் நன்றாக வைத்திருக்கிறேன். சிறப்பான பாதுகாப்பு உள்ளது என்று வானளாவ தன்னைத் தானே புகழ்ந்து கொண்டு திரிந்தார். அடிப் படை பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. மத்திய உளவுத் துறையின் எச்சரிச்கை அலட்சியப்படுத்தப்பட்டது. மத்திய அரசை பாய்ந்து பிராண்டியதற்கு காங்கிரஸின் சார்பில் சுடச்சுட பதிலடி கிடைத்திருக்கிறது.
குஜராத்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்த வாய்ப் புள்ளது எச்சரிக்கையாக இருக்கவும் என பலமுறை மத்திய அரசு எச்சரித்தும் மோடிக் கூட்டத்தின் கவன மின்மையால் அப்பாவி மக்கள் 49 பேர் பலியாகி உள்ளனர்.
ஒருநாள் முன்பு தான் பெங்களூருவில் குண்டு வெடித்தது. மோடிக்கூட்டம் குஜராத்தில் என்னவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தார்கள் என்பதை விளக்கத் தயாராக இல்லை. இதுவரை 19 குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
இதில் உண்மைக் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப் பட்டனரா? பின்னணியில் நின்று செயல்பட்டவர்கள். சூத்ரதாரிகள் யாரும் கண்டு பிடிக்கப்படவில்லை.
அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை மட்டும் குறிவைக்கும் போக்கு மட்டும் தொடர்கிறது. அனைத்து முதலமைச்சர்களையும் கூட்ட வேண்டுமென்கிறார் மோடி. முதலமைச்சர்கள் மட்டுமல்ல, அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் புலனாய்வு செய்த, செய்து கொண்டிருக்கிற அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் கூட்டி இதுவரை இவர்கள் செய்த விசாரணை முடிவுகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்பாவிகளின் கைதுகள் குறித்து தீவிர ஆய்வுகள் செய்ய வேண்டும். கைது செய்யப்பட்டு குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தீவிரவாத சிந்தனையோடு அலையும் பேர்வழிகளை ஒழிப்பதில் மக்கள் எப்போதுமே தயாராக இருக்கின்றனர். நிஜ தீவிரவாதிகளை ஒழிக்க அரசு இயந்திரங்கள் முடுக்கி விடப் படவேண்டும்
abusalih news on bosnia genocide
13 வருடம் தலைமறைவாக இருந்த போஸ்னிய இனப்படுகொலையாளன் பிடிபட்டான்
1992ல் இருந்து 1995 வரை போஸ்னி யாவில் 8,500 முஸ்லிம்கள் துள்ளத்து டிக்க கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.
கருணையின்றி கொடூரமாக கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானவர்கள் எத்தனை பேர்? உயிருக்கு அஞ்சி, ஓடி அடர்ந்த காடுகளில் ஒளிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் திரும்பினார்களா? என தெரியாத நிலையில் போஸ்னியா-ஹெர்ச கோவினா, பிணங்களின் கூடார மாக விளங்கின.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப்பெரும் இனப் படுகொலையாக போஸ்னியா படுகொலைகள் வரலாற்றில் குறிக் கப்படுகின்றன.
போஸ்னியாவில் பலியானவர் களின் விவரங்களை செயற்கைக் கோள் படங்களின் வழியாக உலகம் உண்மையைத் தெரிந்து கொண்டது.
அதன்பிறகும் போஸ்னியா மக்களின் சோகம் சொல்லி மாளாது. கண்டெடுக்கப் பட்ட உடல்கள் தங்களுடைய உறவினர் களுடையதா? என அறிந்துகொள்ள மரபணு சோதனைகள் செய்யப்பட்டன. தோண்டப்பட்ட உடல்கள் மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்தப் படுகொலை களுக்கு காரணமான வன்கொலையாளி கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சர்வதேச காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. முன்னாள் செர்பிய அதிபர் சுலோபதன் மெலோசெவிக் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிறையில் தண்டனை நாட்களைக் கழித்து வந்த சுலோபதன் மிலோ செவிக் சிறையிலே மாண்டு போனான்.
பால்கன் யுத்தத்தின் முடிவுக் குப் பிறகு போஸ்னியாவை புரட்டிப் போட்ட மனித மிருகங் கள் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்டவர்களில் போஸ்னியா-ஹெர்சகோவினா பகுதியில் எல்லைப்புறத்தை ஒட்டிய நாட் டின் அதிபராக 1992ல் இருந்து 1995 வரை ரதவான் கார்ட்சிக் போஸ் னிய மக்களைக் கொன்று குவித்ததை வரலாறு மறக்காது. போஸ்னிய தலைநகர் சரஜிவோவை 43 மாதங்கள் முற்றுகை யிட்டு தனது கூலிப்படையினால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற இந்த மாபாதகன் 13 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.
சர்வதேச சமூகத்தால் தேடப்பட்டு வந்த இனப்படுகொலையாளன், 50 மில்லியன் டாலர்கள் தலைக்கு அமெரிக்காவில் விலை அறிவிக்கப்பட்ட ரதவான் கர்ட்சிக் பெல்கிரேடு நகரத்தில் நீண்ட தாடியுடன் போலியான பெயருடன் நடமாடிய முன்னாள் அதிபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான். உலகமகா கொலைகாரனைத்தான் தாங்கள் பிடித் தோம் என்பது அப்போது பெல்கிரேடு நகர காவலர்களுக்கு தெரிந்திருக்காது.
பிளாட்பாரத்தில் வாழ்ந்து கொண்டு நாடோடிக் கும்பலுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் போல் திரிந்த இனப்படுகொலையாளன் பிடிபட்டபோது அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இவன் கவிஞன், டாக்டர் என பல்வேறு வேடம் தரித்தும் வாழ்ந்து வந்திருக்கிறான்.
மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் டெனாவிக்கின் வீட்டின் அருகில்தான் ரதவான் கரட்சிக் இதுவரை தலைமறை வாக வாழ்ந்து வந்திருக்கிறான்.
செரப்னிக்கா படுகொலையில் மாண்ட மக்களின் உடல்களைக் கண்டுபிடித்து மீண்டும் புதைத்தவர் ஆவார். இவரது வீட்டின் அருகில் பிடிபட்டதைக் கூறும்போது ''இந்த மொடாக்குடியன் தானா?'' இந்த பெரும் இனப்படுகொலை யாளன் என வியந்து போனார் யாஸ்மின்.
ரதவான் கார்ட்சிக் என்ற இனப் படுகொலையாளன் பிடிப்பட்டிருக் கிறான். மற்றும் பல இனப்படுகொலை யாளர்கள் வெள்ளை மாளிகையிலும், ஏன் இந்தியாவில் குஜராத்திலும் இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் பிடிப்பட்டு தண்டிக் கப்படுவது எப்போது?
1992ல் இருந்து 1995 வரை போஸ்னி யாவில் 8,500 முஸ்லிம்கள் துள்ளத்து டிக்க கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்களாவர்.
கருணையின்றி கொடூரமாக கொல்லப் பட்டவர்கள் எத்தனை பேர்? பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானவர்கள் எத்தனை பேர்? உயிருக்கு அஞ்சி, ஓடி அடர்ந்த காடுகளில் ஒளிந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் திரும்பினார்களா? என தெரியாத நிலையில் போஸ்னியா-ஹெர்ச கோவினா, பிணங்களின் கூடார மாக விளங்கின.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த மிகப்பெரும் இனப் படுகொலையாக போஸ்னியா படுகொலைகள் வரலாற்றில் குறிக் கப்படுகின்றன.
போஸ்னியாவில் பலியானவர் களின் விவரங்களை செயற்கைக் கோள் படங்களின் வழியாக உலகம் உண்மையைத் தெரிந்து கொண்டது.
அதன்பிறகும் போஸ்னியா மக்களின் சோகம் சொல்லி மாளாது. கண்டெடுக்கப் பட்ட உடல்கள் தங்களுடைய உறவினர் களுடையதா? என அறிந்துகொள்ள மரபணு சோதனைகள் செய்யப்பட்டன. தோண்டப்பட்ட உடல்கள் மீண்டும் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்தப் படுகொலை களுக்கு காரணமான வன்கொலையாளி கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.
சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சர்வதேச காவல்துறை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. முன்னாள் செர்பிய அதிபர் சுலோபதன் மெலோசெவிக் கைது செய்யப்பட்டான். தொடர்ந்து சிறையில் தண்டனை நாட்களைக் கழித்து வந்த சுலோபதன் மிலோ செவிக் சிறையிலே மாண்டு போனான்.
பால்கன் யுத்தத்தின் முடிவுக் குப் பிறகு போஸ்னியாவை புரட்டிப் போட்ட மனித மிருகங் கள் போர்க் குற்றவாளிகளாக சர்வதேச நீதிமன்றத்தால் அறிவிக் கப்பட்டவர்களில் போஸ்னியா-ஹெர்சகோவினா பகுதியில் எல்லைப்புறத்தை ஒட்டிய நாட் டின் அதிபராக 1992ல் இருந்து 1995 வரை ரதவான் கார்ட்சிக் போஸ் னிய மக்களைக் கொன்று குவித்ததை வரலாறு மறக்காது. போஸ்னிய தலைநகர் சரஜிவோவை 43 மாதங்கள் முற்றுகை யிட்டு தனது கூலிப்படையினால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற இந்த மாபாதகன் 13 ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.
சர்வதேச சமூகத்தால் தேடப்பட்டு வந்த இனப்படுகொலையாளன், 50 மில்லியன் டாலர்கள் தலைக்கு அமெரிக்காவில் விலை அறிவிக்கப்பட்ட ரதவான் கர்ட்சிக் பெல்கிரேடு நகரத்தில் நீண்ட தாடியுடன் போலியான பெயருடன் நடமாடிய முன்னாள் அதிபர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டான். உலகமகா கொலைகாரனைத்தான் தாங்கள் பிடித் தோம் என்பது அப்போது பெல்கிரேடு நகர காவலர்களுக்கு தெரிந்திருக்காது.
பிளாட்பாரத்தில் வாழ்ந்து கொண்டு நாடோடிக் கும்பலுடன் சேர்ந்து மது அருந்திக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் போல் திரிந்த இனப்படுகொலையாளன் பிடிபட்டபோது அனைவரும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள். இவன் கவிஞன், டாக்டர் என பல்வேறு வேடம் தரித்தும் வாழ்ந்து வந்திருக்கிறான்.
மனித உரிமை ஆர்வலர் யாஸ்மின் டெனாவிக்கின் வீட்டின் அருகில்தான் ரதவான் கரட்சிக் இதுவரை தலைமறை வாக வாழ்ந்து வந்திருக்கிறான்.
செரப்னிக்கா படுகொலையில் மாண்ட மக்களின் உடல்களைக் கண்டுபிடித்து மீண்டும் புதைத்தவர் ஆவார். இவரது வீட்டின் அருகில் பிடிபட்டதைக் கூறும்போது ''இந்த மொடாக்குடியன் தானா?'' இந்த பெரும் இனப்படுகொலை யாளன் என வியந்து போனார் யாஸ்மின்.
ரதவான் கார்ட்சிக் என்ற இனப் படுகொலையாளன் பிடிப்பட்டிருக் கிறான். மற்றும் பல இனப்படுகொலை யாளர்கள் வெள்ளை மாளிகையிலும், ஏன் இந்தியாவில் குஜராத்திலும் இருக்கிறார்கள்.
அவர்களெல்லாம் பிடிப்பட்டு தண்டிக் கப்படுவது எப்போது?
Subscribe to:
Posts (Atom)