இறைவன் மிக பெரியவன் வாழ்த்த்துக்கள்

Wednesday, March 12, 2008

கொசோவோ விடுதலை! தொடரும் உலக ஆதரவு!!


ஐரோப்பாவில் இஸ்லாம் பண்டைய காலத்திலேயே பரவிவிட்டது. ஸ்பெயி னில் 800 ஆண்டுகாலம் முஸ்லிம்களின் ஆட்சி நடைபெற்றது. 14ஆம் நூற்றாண் டில் உருவான சக்திமிக்க உதுமானிய பேரரசு 20ஆம் நூற்றாண்டு வரை கிழக்கு ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் வடஆப்பிரிக்க பகுதிகளிலும் ஆட்சி செலுத்தியது.

முதல் உலகப் போருக்குப் பிறகு உதுமானிய பேரரசின் கீழ் இருந்த பகுதிகள் பிரிந்து செல்ல ஆரம்பித்தன. 1917ல் ரஷ்யாவில் வெடித்த கம்யூனிஸப் புரட்சியின் ஈர்ப்பால் பல பகுதிகள் கம்யூனிச குடையின் கீழ் ஒன்றிணைக்கப் பட்டன. அவ்வாறு இணைந்தவைகளில் யூகோஸ்லோவியா போன்ற பல நாடு களைச் சார்ந்த முஸ்லிம்களைப் பெரும் பான்மையாகக் கொண்ட பிராந்தியங்கள் உண்டு. போஸ்னியா ஹெர்ஸகோவினா, கொசோவோ போன்ற பகுதிகளும் அடக்கம். அவற்றிற்கு நீண்டகாலமாக சுதந்திரம் மறுக்கப்பட்டதோடு அடக்கு முறைக்கும் ஆளாக்கப்பட்டன.

போஸ்னியா 90களில் விடுதலைப் பெற்றது. கொசோவோ கடந்த மாதம் சுதந்திரம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகினாலும் கொசோவோவுக்கு எதிர்ப்பும் பல வழிகளில் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் கொசோவோ சுதந்திரத் திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவை எதிர்த்து செர்பியர்கள் பெரும் கலவரத்தில் இறங்கினர். கொசோவோவின் சுதந்திர அறிவிப்பினை எதிர்த்து ஒன்றரை லட்சம் செர்பியர்கள் பெரும் வன்முறையில் இறங்கினர். தலைநகர் பெல்கிரேடில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தாக்கப் பட்டது வாகனங்கள் அடித்து நொறுக்கப் பட்டன.

வெறிபிடித்த செர்பிய இளைஞர்கள் அமெரிக்க தூதரகத்தை தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்தனர். காவல் துறையினரும் தாக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனி மற்றும் கனடா நாட்டு தூதரகங் களும் தாக்கப்பட்டன. வன்முறையாளர் களின் வெறியாட்டத்தில் போஸ்னியா, க்ரோஷியா மற்றும் துருக்கி நாட்டு தூதரகங்கள் மீதும் தாக்குதல் நடத்தப் பட்டன.

ஐரோப்பிய யூனியன் 2 ஆயிரம் உயர் அதிகாரிகளை கொசோவோவுக்கு அனுப்பி வைத்தது. அவர்கள் காவல் துறை, நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை யில் பயிற்சியளிப்பார்கள் என ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

கொசோவோ என்ற புதிய நாட்டின் உதயம் உலக அளவில் பெரும் வரவேற் பைப் பெற்றுள்ளது. ரஷ்யாவும், செர்பியா வும் கடுமையான அதிருப்தியைத் தெரிவித்துள்ளன. நமது அண்டை நாடான இலங்கை கூட தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ள
ஆப்பிரிக்காவை ஆக்கிரமிக்கத் துடிக்கும் அமெரிக்கா!



அமெரிக்காவின் பார்வை தற்போது ஆப்பிரிக்காவை நோக்கித் திருப்பி யுள்ளது.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறக்கவும், இழந்த பெருமிதத்தை மீட்கவும் அமெ ரிக்கா இந்த நிலைபாட்டை மேற்கொண் டுள்ளதாக கருத்துக்கள் உலாவருகின்றன.

புஷ் சென்ற வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆப்பிரிக்காவின் ஐந்து நாடுகளில் அமெரிக்க அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை குறிப்பிடும் அரசியல் ஆய்வாளர்கள், 2015ஆம் ஆண்டு 25 சதவீத பெட்ரோல் பற்றாக்குறையை சந்திக்க இருப்பதால் தனது எண்ணெய் வல்லாண்மையை நிலைநிறுத்த அமெ ரிக்கா முயற்சி செய்வதாக வெளியுறவுக் கொள்கைகளை ஆய்வு செய்துவரும் எமிராவுட்ஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பிரிக்கா, எண்ணெய் வளம் பெற்றுள்ளது. பின்னர் ராணுவ வலிமையைப் பெருக்க முயற்சி செய்கிறது. அதோடு இனி ஆப்பிரிக்காவின் வெளியுறவுக் கொள்கையே சீர்குலையும் என்றும் எமிராவுட்ஸ் தெரிவித்தார்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் சீனா அதிக நட்புறவு பேணி வருகிறது. எண்ணெய் வர்த்தகம், உலோகங்கள் மற்றும் பல்வேறு வர்த்தகத் தொடர்புகளிலும் ஆப்பிரிக்காலி சீனா இடையே ஒத்துழைப்புகள் தொடர் கின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் தலையீடு ஆப்பிரிக்க பூபாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 1,800 அமெரிக்கத் துருப்புகள் தற்போது ஜிபோதியில் நிலைகொண்டுள்ளது.

சூடானின் தார்ஃபரில் ஆப்பிரிக்க யூனியனின் கண்காணிப்புப் படைகளுக்கு உதவுவதற்காக அமெரிக்கா நெடுநாளாகவே காத்திருக்கிறது. சோமாலியாவில் அமெரிக்க ஆதரவு பெற்ற எத்தியோப்பிய துருப்புகள் தாக்குதலைத் தொடர்கின்றன. எகிப்து அமெரிக்காவின் முக்கிய நேச நாடாக திகழ்கிறது. லிபியா அடக்கி வாசிக்கிறது. இந்நிலையில் புஷ் சென்ற வாரம் ஆப்பிரிக்க நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அமெரிக்கா தனது அதிகார எல்லையை விரிவாக்குவதற்காக தனது ராணுவ மேலாண்மையை நிலைநிறுத்த முயல்வதாகவும் கருத்துக்கள் புறப்படத் துவங்கியுள்ளன.

Tuesday, March 11, 2008

காஸா ஹமாஸின் பதிலடியால் பின்வாங்கி ஓடியது இஸ்ரேல்!

அபூசாலிஹ்.



1979ல் அமெரிக்காவின் அடிவருடி யாக இருந்த ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சி அகற்றப்பட்டு இஸ்லாமியக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.

2006ல் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் விரட்டியடிக்கப்பட்டன. இதைப் போன்று ஒரு வரலாற்று நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

2008 மார்ச் 3 ஆம் தேதி மூர்க்கமான இஸ்ரேலியத் துருப்புகள் வீரப் போராளி களான ஹமாஸின் பதிலடியை எதிர் கொள்ள முடியாமல் காஸாவை விட்டு காலி செய்துள்ளனர். சமாதான ஆர்வலர் கள் கெஞ்சியபோது முரண்டு பிடித்த இஸ்ரேல், ஹமாஸின் பதிலடிக்குப் பிறகு ஓட்டம் பிடித்துள்ளார்கள்.

படுகொலைகளைப் புரிந்த பாதகர்கள் பின்வாங்கி ஓடினார்கள். உலகின் மிகமோசமான ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் காஸாப் பகுதியை விட்டு தனது ராணுவத்தை திரும்பப் பெற்றது.

பாலஸ்தீனர்களின் பேராதரவுப் பெற்ற மக்கள் இயக்கமான ஹமாஸ் நாடாளு மன்றதைக் கைப்பற்றியது. தூய்மையான ஆட்சியையும் வழங்கி வருகிறது. பாலஸ் தீனர்களது வெற்றியின் வீச்சைகண்டு பொறுக்காத இஸ்ரேலும், அமெரிக்காவும் ஹமாஸுக்கு வாக்களித்த அப்பாவி பாலஸ்தீன மக்களை கொடூரமாக தண்டித்தன.

பாலஸ்தீனத்தில் செல்வாக்கிழந்த மற்றொரு இயக்கமான ஃபதாஹையும் தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்டு பாலஸ்தீன மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர்.

ஹமாஸின் செல்வாக்குப் பெற்ற காஸா பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் மறுக்கப்பட்டன.

வான் தாக்குதலில் பச்சிளம் பாலகர்கள் உட்பட பல அப்பாவிகள் கொல்லப்பட்ட னர். வாழ்வாதாரங்களைத் தேடி அப்பாவி பாலஸ்தீன மக்கள் காஸா எல்லையைத் தாண்டி எகிப்தில் நுழைந்தனர். வெள்ள மாய் புகுந்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

தடுப்புச் சுவர்கள் உடைக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களில் இஸ்ரேலின் வான்தாக்குதலில் 116 அப்பாவி பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகர்கள் என்பது நெஞ்சை உலுக்குகிறது.

பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் அருகேயும் குண்டு வீசப்பட்டுள்ள விமானங்களும் ராக்கெட்களும் சீறிப்பாய்ந்து கவச வாகனங்களும் நெருக்கத் தொடங்கின.

அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தி ஒளியில் குழந்தைக் கொழுந்துகள் தங்கள் பள்ளிப் பாடங்களை படிக்க நேர்ந்தது.


பாலஸ்தீன மக்களின் அவலநிலை குறித்து தாங்கள் மிகவும் வேதனை அடைவதாகவும் ஆனால் ஹமாஸால் தான் பிரச்சினை எனவும் நடுநிலையான
(!) கருத்தொன்றை உதித்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸ்.

இந்திய விண்வெளி ஏவுதளத்திலிருந்து இஸ்ரேலின் உளவு செயற்கை கோள் ஏவப்பட்டதின் பிறகே பாலஸ்தீ னின் காஸாப் பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட உலகமே கைவிட்ட நிலை யில் பாலஸ்தீன மக்களின் துயரவாழ்க்கை தொடகிறது.

இந்நிலையில், 2008 மார்ச் மூன்றாம் தேதி அதிகாலையில் இஸ்ரேல் படைகள் இடத்தைக் காலி செய்தன.

முதலாவதாக காஸாநகரின் வடக்குப் பகுதியான ஜபலிய்யா அகதி முகாமிலிருந்து இஸ்ரேலின் கவச வாகனங்கள் திரும்பத் தொடங்கின.

இஸ்ரேலின் திடீர்பின் வாங்கலுக்கு ஹமாஸின் பதிலடியே காரணம் என வளைகுடாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரே லின் கடுமையான தாக்குதலுக்கு மோசமாக தாக்கப்பட்ட ஹமாஸ் போராளிகளிடம் இருந்து மிகமோசமான பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை.

இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரான ஆஸ்க்லான் குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகளின் கட்யூஸா ராக்கெட்டுகள் முதல்முதலாக சீறிப்பாயத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் காஸாப் பகுதியை விட்டும் திரும்பத் தொடங்கின.

அவர்களும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்தால் நாங்கள் தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேலிய ராணுவப் படையின் முக்கிய அதிகாரி கூறியதாக இஸ்ரேலின் பிரபல ஹாரெட்ஸ் நாளேடு குறிப்பிடுகிறது. இந்த அறிவிப்புக்கு பின்னரும் ஹமாஸின் 33 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளன.

காஸா எப்போதுமே எதிரிகளின் கல்லறையாக இருக்கும் அதில் மாற்ற மில்லை என மூத்த ஹமாஸ் தலைவர் அபூ ஜெôஹ்ரி தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸின் ராக்கெட்டுகள் தான் இஸ்ரேலின் பெரும்பாலான ஆட்டத்தை நிறுத்தியிருப்பதாக இஸ்ரேலின் ஊடகங் கள் குறிப்பிட்டுளளன.

தற்போது இஸ்ரேலிய அமைச்சர் அமி அய்லோன் வெளியிட்டிருக்கும் கருத்து சர்வதேச அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் கவுரவம் பார்க்காமல் ஹமாஸ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும். அதுவே இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப வழிவகுக்கும். என அமி அய்லோன் தெரிவித்ததோடு 5 ஆம் தேதி கூட்டப்படவுள்ள இஸ்ரேலிய அமைச்சர வைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக் கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸை அங்கீகரிக்க மறுத்து. அழிச்சாட்டியம் செய்து வந்த இஸ்ரேல் ஹமாஸிடம் சமரசம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஹமாஸ் போராளிகளுக்கு போர்க் களத்தில் கிடைத்த முக்கிய வெற்றியாக இது கருதப்படுகிறது. வாழ்க பாலஸ்தீனம்
காஸா ஹமாஸின் பதிலடியால் பின்வாங்கி ஓடியது இஸ்ரேல்!

அபூசாலிஹ்.



1979ல் அமெரிக்காவின் அடிவருடி யாக இருந்த ஈரான் மன்னர் ஷாவின் ஆட்சி அகற்றப்பட்டு இஸ்லாமியக் குடியரசாக பிரகடனம் செய்யப்பட்டது.

2006ல் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலி ஆக்கிரமிப்பு படைகள் ஹிஸ்புல்லாஹ் போராளிகளால் விரட்டியடிக்கப்பட்டன. இதைப் போன்று ஒரு வரலாற்று நிகழ்வு சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

2008 மார்ச் 3 ஆம் தேதி மூர்க்கமான இஸ்ரேலியத் துருப்புகள் வீரப் போராளி களான ஹமாஸின் பதிலடியை எதிர் கொள்ள முடியாமல் காஸாவை விட்டு காலி செய்துள்ளனர். சமாதான ஆர்வலர் கள் கெஞ்சியபோது முரண்டு பிடித்த இஸ்ரேல், ஹமாஸின் பதிலடிக்குப் பிறகு ஓட்டம் பிடித்துள்ளார்கள்.

படுகொலைகளைப் புரிந்த பாதகர்கள் பின்வாங்கி ஓடினார்கள். உலகின் மிகமோசமான ஆக்கிரமிப்பு சக்தியான இஸ்ரேல் காஸாப் பகுதியை விட்டு தனது ராணுவத்தை திரும்பப் பெற்றது.

பாலஸ்தீனர்களின் பேராதரவுப் பெற்ற மக்கள் இயக்கமான ஹமாஸ் நாடாளு மன்றதைக் கைப்பற்றியது. தூய்மையான ஆட்சியையும் வழங்கி வருகிறது. பாலஸ் தீனர்களது வெற்றியின் வீச்சைகண்டு பொறுக்காத இஸ்ரேலும், அமெரிக்காவும் ஹமாஸுக்கு வாக்களித்த அப்பாவி பாலஸ்தீன மக்களை கொடூரமாக தண்டித்தன.

பாலஸ்தீனத்தில் செல்வாக்கிழந்த மற்றொரு இயக்கமான ஃபதாஹையும் தனது கைப்பாவையாக மாற்றிக் கொண்டு பாலஸ்தீன மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்கினர்.

ஹமாஸின் செல்வாக்குப் பெற்ற காஸா பகுதி திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், மின்சாரம் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் மறுக்கப்பட்டன.

வான் தாக்குதலில் பச்சிளம் பாலகர்கள் உட்பட பல அப்பாவிகள் கொல்லப்பட்ட னர். வாழ்வாதாரங்களைத் தேடி அப்பாவி பாலஸ்தீன மக்கள் காஸா எல்லையைத் தாண்டி எகிப்தில் நுழைந்தனர். வெள்ள மாய் புகுந்த பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.

தடுப்புச் சுவர்கள் உடைக்கப்பட்டன. கடந்த ஐந்து நாட்களில் இஸ்ரேலின் வான்தாக்குதலில் 116 அப்பாவி பாலஸ் தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 22 பேர் ஒரு பாவமும் அறியாத பச்சிளம் பாலகர்கள் என்பது நெஞ்சை உலுக்குகிறது.

பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனியாவின் அலுவலகம் அருகேயும் குண்டு வீசப்பட்டுள்ள விமானங்களும் ராக்கெட்களும் சீறிப்பாய்ந்து கவச வாகனங்களும் நெருக்கத் தொடங்கின.

அடர்ந்த இருட்டில் மெழுகுவர்த்தி ஒளியில் குழந்தைக் கொழுந்துகள் தங்கள் பள்ளிப் பாடங்களை படிக்க நேர்ந்தது.


பாலஸ்தீன மக்களின் அவலநிலை குறித்து தாங்கள் மிகவும் வேதனை அடைவதாகவும் ஆனால் ஹமாஸால் தான் பிரச்சினை எனவும் நடுநிலையான
(!) கருத்தொன்றை உதித்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீஸா ரைஸ்.

இந்திய விண்வெளி ஏவுதளத்திலிருந்து இஸ்ரேலின் உளவு செயற்கை கோள் ஏவப்பட்டதின் பிறகே பாலஸ்தீ னின் காஸாப் பகுதியில் இஸ்ரேலின் கொடூர தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.
கிட்டத்தட்ட உலகமே கைவிட்ட நிலை யில் பாலஸ்தீன மக்களின் துயரவாழ்க்கை தொடகிறது.

இந்நிலையில், 2008 மார்ச் மூன்றாம் தேதி அதிகாலையில் இஸ்ரேல் படைகள் இடத்தைக் காலி செய்தன.

முதலாவதாக காஸாநகரின் வடக்குப் பகுதியான ஜபலிய்யா அகதி முகாமிலிருந்து இஸ்ரேலின் கவச வாகனங்கள் திரும்பத் தொடங்கின.

இஸ்ரேலின் திடீர்பின் வாங்கலுக்கு ஹமாஸின் பதிலடியே காரணம் என வளைகுடாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு வருடத்திற்கும் மேலாக இஸ்ரே லின் கடுமையான தாக்குதலுக்கு மோசமாக தாக்கப்பட்ட ஹமாஸ் போராளிகளிடம் இருந்து மிகமோசமான பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கவில்லை.

இஸ்ரேலின் தெற்குப் பகுதி நகரான ஆஸ்க்லான் குடியிருப்புகள் மீது ஹமாஸ் போராளிகளின் கட்யூஸா ராக்கெட்டுகள் முதல்முதலாக சீறிப்பாயத் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் இஸ்ரேலிய கவச வாகனங்கள் காஸாப் பகுதியை விட்டும் திரும்பத் தொடங்கின.

அவர்களும் ராக்கெட் தாக்குதலை தொடர்ந்தால் நாங்கள் தாக்குதலை தொடர்வோம் என இஸ்ரேலிய ராணுவப் படையின் முக்கிய அதிகாரி கூறியதாக இஸ்ரேலின் பிரபல ஹாரெட்ஸ் நாளேடு குறிப்பிடுகிறது. இந்த அறிவிப்புக்கு பின்னரும் ஹமாஸின் 33 ராக்கெட்டுகள் தெற்கு இஸ்ரேலை நோக்கி பாய்ந்துள்ளன.

காஸா எப்போதுமே எதிரிகளின் கல்லறையாக இருக்கும் அதில் மாற்ற மில்லை என மூத்த ஹமாஸ் தலைவர் அபூ ஜெôஹ்ரி தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸின் ராக்கெட்டுகள் தான் இஸ்ரேலின் பெரும்பாலான ஆட்டத்தை நிறுத்தியிருப்பதாக இஸ்ரேலின் ஊடகங் கள் குறிப்பிட்டுளளன.

தற்போது இஸ்ரேலிய அமைச்சர் அமி அய்லோன் வெளியிட்டிருக்கும் கருத்து சர்வதேச அளவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இஸ்ரேல் கவுரவம் பார்க்காமல் ஹமாஸ் இயக்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும். அதுவே இந்தப் பிராந்தியத்தில் அமைதி திரும்ப வழிவகுக்கும். என அமி அய்லோன் தெரிவித்ததோடு 5 ஆம் தேதி கூட்டப்படவுள்ள இஸ்ரேலிய அமைச்சர வைக் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக் கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஹமாஸை அங்கீகரிக்க மறுத்து. அழிச்சாட்டியம் செய்து வந்த இஸ்ரேல் ஹமாஸிடம் சமரசம் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது.

ஹமாஸ் போராளிகளுக்கு போர்க் களத்தில் கிடைத்த முக்கிய வெற்றியாக இது கருதப்படுகிறது. வாழ்க பாலஸ்தீனம்

Wednesday, March 5, 2008

டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் எழிலுறுமா?


டெல்லியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜும்ஆ மஸ்ஜித் முகலாய மாமன்னர் ஷாஜகானால் கட்டப்பட்டதாகும். ஒன்றரை லட்சம் மக்கள் ஒரே நேரத்தில் தொழுகை நிறைவேற்றும் வண்ணம். மிகப் பிரம்மாண்டமாகவும் எழிலுறவும் அமைக்கப்பட்டுள்ள டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை மன்னர் ஷாஜகான் தனது அரச மண்டபமான டெல்லி செங் கோட்டையில் இருந்து பார்க்கும் வண்ணம் அமைத்தார்.
ஆனால், காலங்கள் செல்ல செல்ல அதிகமாக கடைகள் முளைத்தன. இந்நிலையில் டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகுபடுத்த வேண்டும்.

2008 மே 18ஆம் தேதிக்குள் ஆக்கிர மிப்புகளை அகற்றி டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதையும், சுற்றியுள்ள பகுதிகளை யும் அழகுபடுத்த வேண்டும் என்று 2006 அக்டோபர் மாதம் நீதிமன்றம் டெல்லி மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. ஆனால், இது தொடர்பான எவ்வித நடவடிக்கை யும் இன்னும் தொடங்கப்படவில்லை.

டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதை அழகு படுத்தும் பணியில் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள விஜய்சிங் இந்த திட்டத் தினை மீண்டும் திருத்தி வரைவு செய்வதாக அறிவித்திருக்கிறார்.

1979லில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவின்படி ஜும்ஆ மஸ்ஜிதைச் சுற்றியும் பள்ளிவாசல் வளாகங்கள் விரிந்திருந்தன என்ற உண்மை வெளி யானது. இந்நிலையில் டெல்லி மஸ்ஜிதின் பாரம்பரிய அழகைக் கெடுக்கும் வண்ணம் பல்முனை வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பெருமை மிக்க டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் எழில் மீண்டும் மீட்கப்படுமா என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு.
வருடந்தோறும் 10 இலட்சம் மக்களைக் கொல்லும் அரக்கன்!

சப்ரன் ஹபீப்



இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் மக்கள் புகையிலை என்னும் அரக்கனுக்கு அடிமையாகி பலியாகி வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

புகையிலை எந்த வடிவில் பயன் படுத்தினாலும் அது பயன்படுத்து வோரின் உயிருக்கு ஆபத்தாக முடியும். 10ல் ஒரு பகுதி ஆண்களின் மரணத் திற்கு புகை பிடிப்பது முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புகைபிடிப்பதால் மரணமடையும் 10 லட்சம் மக்களில் 70 சதவீதம் பேர் இளவயதிலேயே மரணத்தை தழுவு கிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்தி குறிப்பிடுகிறது.

யார் சிகரெட்டை தொடர்ந்து பயன் படுத்துகிறார்களோ அவர்கள் தங்களது வாழ்நாளில் 10 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள். பீடி புகைக்கும் ஆண்கள் 6 ஆண்டுகளை தங்கள் வாழ்நாளில் இழக்கிறார்கள். பீடி புகைக்கும் பெண்கள் தங்கள் வாழ்நாளில் 8 ஆண்டுகளை இழந்து விடுகிறார்கள் எனவும் அந்த அதிர்ச்சி செய்திகள் குறிப்பிடுகின்றன.

இந்தியாவில் புகைப்பிடிப்பவர்களின் மரணத்தை கட்டுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளும் அமைப்பான ஆ சஹற்ண்ர்ய்ஹப்ப்ஹ் தங்ல்ழ்ங்ள்ங்ய்ற்ஹற்ண்ஸ்ங் ஈஹழ்ங் லி ஈர்ய்ற்ழ்ர்ப் லி நற்ன்க்ஹ் ர்ச் நம்ர்ந்ண்ய்ஞ் ஹய்க் உங்ஹற்ட் ண்ய் ஒய்க்ண்ஹ லிவும் பிரிட்டனிலிருந்து வெளியாகும் பட்ங் சங்ஜ் ஊய்ஞ்ப்ஹய்க் ஓர்ன்ழ்ய்ஹப் ர்ச் ஙங்க்ண்ஸ்ரீண்ய்ங் என்ற பத்திரிக்கையும் இணைந்து இந்த ஆய்வினை மேற்கொண்டன.
பொதுவாக ஆண்களில் இறப்பு விகிதத்தை கணக்கெடுக்கும்போது 30 முதல் 69 வயது வரை மரணம் அடைபவர்களில் கணிசமானோர் புகை பிடிப்பவர்கள்தான் எனவும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. 2010ஆம் ஆண்டில் இந்தியாவில் நிகழும் 10 இறப்புகளில் ஒன்று புகைப் பிடிப்பதால் நிகழும் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

இந்தியாவில் 60 கோடி மக்கள் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் ஆவர். நமது இளைய தலைமுறையை புகையிலை அபாயத்திலிருந்து காப்பாற்ற வேண்டி யுள்ளது, அதற்கென சட்டங்களை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்திருக்கிறார்.

புகையிலையை அதிகமாகப் பயன் படுத்தி மரணமடைபவர்களில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கல்வியறிவு பெறாதவர்களாகவும், கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் புகை பிடிக்கும் தீய பழக்கத்திலிருந்து மீண்டவர்கள் வெறும் இரண்டு சதவீதம் தான். ஆனால், சீனாவில் 9 சதவீதத்தினர் தங்களை புகை பிடிப்பதிலிருந்து மீட்டுக் கொண் டுள்ளனர்.

பிரிட்டனில் புகை பிடிப்பவர்களில் 40 சதவீதத்தினர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டொழித்துள்ளனர். இது 20 ஆண்டு காலத்தில் நிகழ்ந்த மாற்றமாகும். 2003ல் ஜெனிவாவில் கூடிய மாநாட்டில் பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை தங்கள் நாடுகளில் பின்பற்றப்போவதாக 183 நாடுகள் அறிவித்திருக்கின்றன.

Thursday, February 21, 2008

உதயமானது கொசோவா
ஐரோப்பியாவில் மற்றொரு இஸ்லாமிய தேசம்!

அபூசாலிஹ்



கொசோவாவின் வரலாற்றில் இது ஒரு பொன்னாள். கொசோவா சுதந்திர நாடாக பிப்ரவரி 17 அன்று பிரகடனம் செய்யப்பட்டது.

ஐரோப்பாவில் மற்றுமொரு முஸ்லிம் தேசம்.

10 ஆண்டுகளுக்கு முன்பு இனவெறி செர்பியர்களால் கொசோவா மக்கள் கொடூரமாக நசுக்கப்பட்டனர். செர்பியர் களின் இனசுத்திகரிப்பு கொள்கையால் ஏராளமான கொசோவா மக்கள் கருவறுக்கப்பட்டனர். இந்நிலையில் அந்த வேதனைகளையும் மறக்க மாட்டோம், கொசோவாவில் வாழும் 10 சதவீத சிறுபான்மை செர்பியர்களையும் பழிவாங்க மாட்டோம், செர்பிய சமூகத் தினர் உரிய கண்ணியத்துடன் வாழ அனுமதிப்போம் என கொசோவாவின் பிரதமர் ஹாசிம் தாய்க் தெரிவித்தார்.

கொசோவா மக்களில் 99 சதவீதம் அல்பேனிய முஸ்லிம்கள். கொசோவா வின் மக்கள் தொகை 20 லட்சமாகும். செர்பியாவை ஆண்ட இனவெறி அதிபர் சுலோபோதன் மிலோசெவிச் வீழ்ந்த பிறகு 1999 முதல் செர்பிய பிராந்திய பகுதிகளில் நேட்டோ படைகள் முகா மிட்டு வந்தன. கொசோவா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து செர்பியாவில் மிகப்பெரிய உள்நாட்டுக் கலவரம் மூண்டுள்ளது. இதனால் அங்கு முகாமிட்டுள்ள நேட்டோ படைகள் நிம்மதி இழந்தன. செர்பியர்களின் ஆட்சியிலிருந்து விடுதலைப் பெறும் ஆறாவது தேசமாக கொசோவா விளங்குகிறது. சுலோவேனியா, குரோ ஷியா, மாசிடோனியா, மான்டிநீக்ரோ மற்றும் போஸ்னியா என அனைத்தும் செர்பிய ஆதிக்கத்திலிருந்து முன்னரே விடுதலைப் பெற்றுவிட்டன.
இவை முன்னர் செர்பியாவின் மாகாணங்களாக இணைக்கப்பட்டிருந்தன. செர்பியர்களின் கொடுங்கோன்மையால் போஸ்னிய முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங் களுக்கு ஆளாகினர். போஸ்னிய முஸ்லிம்களின் நிலைகண்டு உலகமே கண்ணீர் வடித்தது. 1995ல் போஸ்னியா, தன்னுரிமைப் பெற்றது. தற்போது கொசோவாவும் விடுதலைப் பெற்று விட்டது. மக்கள் வானவேடிக்கை களையும் பட்டாசுகளையும் வெடித்த தோடு தங்கள் வாகனங்களின் ஒலிப்பான் களை இடைவிடாது இயக்கக் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொசோவாவின் விடுதலையை எதிர்த்து செர்பியாவும், ரஷ்யாவும் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன. கொசோவா விடுதலைக்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பையே தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. கொசோவா வின் உதயம் ரஷ்யாவினால் அடக்கப் பட்டு வரும் செசன்யா விலும் விடுதலை வேட் கையைத் தூண்டிவிடும் என்பதே ரஷ்யாவின் அச்சம். அதனால் ரஷ்யா, கொசோவா விடுதலையை எதிர்க்கிறது.

அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொசோவா விடுதலையை வரவேற்றிருக்கின்றன.

நேற்று போஸ்னியா, இன்று கொசோவா. நாளை செச்சன்யா! (இன்ஷா அல்லாஹ்)

இஸ்லாமிய உலகத்தின் ஆதரவு அவசியம்!

இஸ்லாமிய உலகத்தின் முழுமை யான ஆதரவு எங்களது புத்தம் புதிய சுதந்திர நாடான கொசோவாவுக்குத் தேவை என்றும், முஸ்லிம் உலகம் எங்கள் தாயகத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும் கொசோவாவின் தலைமை இமாம் சப்ரி பஜ்கோரா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

சின்னஞ்சிறிய நாடான கொசோவா வின் தொழில் முன்னேற்றத்திற்கு முஸ்லிம் நாடுகள் தங்கள் முதலீடு களின் மூலம் உதவிகள் புரிய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் இளைஞர்கள் படித்து முடித்து வேலை தேடி தவிக்கும் நிலை ஏற்படு கிறது. நாட்டின் மக்கள் தொகையில் 45 சதவீதம் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். கொசோவாவின் சாலைகள், ரயில் பாதைகள் 1998லி99ல் நிகழ்ந்த இன சுத்திகரிப்பு போரில் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கொசோவா பெண்கள் செர்பிய ராணுவ வெறிநாய்களால் மானபங்கப்படுத்தப் பட்டனர். ஆயிரக்கணக்கான குழந்தை கள் தங்கள் பெற்றோரை இழந்து வாழ் கின்றனர்.

புதிய சுதந்திர நாடு கொசோவா இஸ்லாமிய உலகின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறது.

ஆக்கிரமிப்பினால் வீழ்த்தப்பட்ட முஸ்லிம் தேசங்களான ஈராக், ஆப்கா னிஸ்தான் என பார்த்து வேதனையுற்ற முஸ்லிம் சமூகத்திற்கு கொசோவாவின் உதயம் ஒரு புன்னகையை அரும்ப வைத்திருக்கிறது

Web Counter Code