நவீன நீரோ மன்னன் மோடி பேட்டியிலிருந்து ஓட்டம்
ஹபீபா பாலன்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சி.என்.என்லிஐ.பி.என் தொலைக்காட்சியில் பிரபல இதழியலாளர் கரண்தாப்பரிடம் பேட்டியளிக்க வந்தபோது கோத்ரா முஸ்லிம்கள் கோரக் கொலைகள் பற்றியும், அப்பாவி முஸ்லிம்கள், பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட கொடூரங்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் ஓடினார்.
நவீன நீரோ மன்னன் என்று உங்களை உச்சநீதிமன்றம் கூறியிருக் கிறதே போன்ற பல்வேறு கேள்வி கணைகளுக்கு மோடி திக்கினார் திணறினார். மூன்று நிமிடத்துக்குள் பேட்டியை முடித்துக் கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார் மோடி பேட்டி முடித்து விட்டது. மோடி ராஜ்யம் இந்த சட்டமன்றத் தேர்தலுடன் முடிந்து விடுமா?
மோடியின் பேட்டி...
கரண்தாப்பர்: நீங்கள் இனப்படுகொலைகளை நிகழ்த்தியதற்காக வெறுக்கப்படுகிறீர்கள். முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறீர்கள் இதை ஒரு இமேஜ் பிரச்சினையாக படவில்லையா?நரேந்திர மோடி: இரண்டு அல்லது மூன்று நபர்கள் இந்த பாணியில் பேசிக்கொள்கிறார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்.
கரண்தாப்பர்: இது உங்களுக்கு எதிரான இரண்டு அல்லது மூன்று நபர்களின் சதி என்று சொல்கிறீர்களா?
நரேந்திர மோடி: நான் அதைப் பற்றி பேசவில்லை?
கரண்தாப்பர்: ஆனால் வெறும் இரண்டு அல்லது மூன்று பேர் பற்றிய விஷயம் என்று கூறுகிறீர் களா?
நரேந்திர மோடி: இது எனக்கு வந்த தகவல். இது மக்களின் குரல்.
கரண்தாப்பர்: 2003 செப்டம்பரில் உச்சநீதிமன்றம் 'குஜராத் அரசின் மீது நம்பிக்கை இழந்துவிட்டதாகக் கூறியது. பெண்கள், குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி செப்டம்பர் 2004ல் 'நவீன நீரோ மன்னன் போல நீங்கள் நடந்து கொண்டதாக கூறினார். பிரச்சினை உங்களிடம் தான் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
நரேந்திர மோடி: கரண், உங்களிடம் நான் சிறிய வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து உச்சநீதிமன்ற தீர்ப்பு விஷயத்திற்குப் போகவேண்டாம். அதில் என்னைப் பற்றி என்ன எழுதியிருந்தாலும் எனக்கு சந்தோஷமே.
கரண்தாப்பர்: அதில் உங்களைப் பற்றி நல்லவை எதுவும் எழுதப்படவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து இது.
நரேந்திர மோடி: இதுதான் தீர்ப்பு என்றால் அதற்கு பதில் கூறுவதில் எனக்கு சந்தோஷமே.கரண்தாப்பர்: தலைமை நீதிபதியின் விமரிசனம் ஒரு 'பெரிய விஷயமே இல்லை என்று சொல்கிறீர்களா?நரேந்திர மோடி: தயவு செய்து நீதிமன்ற விஷயத்தை விட்டு விடுங்கள். அந்த வாசகங்களையும், உதாரணங்களை யும் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.
கரண்தாப்பர்: ஒ.கே. இது தலைமை நீதிபதியின் வெளிப்படையான கருத்து இல்லையா? 4,600 வழக்குகளில் 2,100 வழக்குகளை மறுவிசாரணை செய்ய உச்சநீதிமன்றம் கூறுகிறது. குஜராத்தில் நீதி கிடைக்காது என்றே மக்கள் நம்புகிறார்கள்.
நரேந்திர மோடி: .....?
கரண்தாப்பர்: இந்தியாடுடே உங்களை சிறந்த முதல்வர் என்று கூறினாலும் ராஜிவ்காந்தி அறக்கட்டளை குஜராத் சிறந்த நிர்வாகத்துடன் செயல்படுகிறது என்று கூறினாலும் வேண்டுமென்றே முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறீர்கள் என்றே கூறுகிறார்கள். ஏன் இதை உங்களது இமேஜ் பிரச்சினையாக எடுத்துக் கொள்ளவில்லை.நரேந்திர மோடி: நான் குஜராத்துக் காகவே என் வாழ்வை அர்ப்பணித்து விட்டேன் (அடங்கப்பா) போதும் ப்ளீஷ் கரண்.கரண்தாப்பர்: ஆனால் மோடி நான் ஒன்றும் தவறாக பேசி விடவில்லை. உங்கள் இமைஜை சரி செய்ய முயலாதது ஏன் என்பதுதான் என் கேள்வி?நரேந்திர மோடி: அதற்கு இது நேரமல்ல என்று மழுப்பிய மோடி தண்ணீர் வேண்டும் என்று கேட்டு மிடறு விழுங்கினார்.
குஜராத் இனப்படுகொலைகள் குறித்த கேள்வியால் திணறிய மோடி, உச்சநீதி மன்றத்தின் கருத்து குறித்த கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார். ஆத்திரமும் அவமானமும் ஒருசேர மோடி கோழை போல ஓடினார்
Wednesday, October 24, 2007
Thursday, October 11, 2007
Wednesday, October 10, 2007
ramadan news from abusalih in tamil
உலகமெங்கும் புனித ரமலான்
ஹபீபா பாலன்
எல்லாம் வல்ல இறைவனிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்து, பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணங்கி தனது வருமானத்தில் இல்லாதோருக்கு ஈந்து மகிழும் உயர்ந்த செயலை உலக முஸ்லிம்களின் உயர் கடமையாக்கிய உன்னத ரமலான் இதோ நம்மை விட்டு விடை பெறுகின்றது.
இப்பரந்த பூமிப்பந்தில் கிழக்கிலிருந்து மேற்கிலும், தென்முனையிலிருந்து வடபுலத்திலும், சமவெளிகளிலும், மலைப்பிரதேசங்களிலும், பீட பூமிகளிலும், நெய்தலிலும் பாலையிலும் புனித ரமலான் நோன்பு நெக்குருகி மெய்சிலிர்த்து நோற்கப்பட்டது.. உலகத்தில் உள்ள 140 கோடி முஸ்லிம்களும் புனித ரமலானை போற்றதற்கரிய பேறாக எண்ணி பூரித்துப் போயினர்.
ரமலான், ஈகையின் பெருமையை நமக்கு வலியுறுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்துகிறது. இறைவன் தங்களுக்கு வழங்கிய அனைத்திலும் இருந்து மனித சமூகத்திற்கு வழங்க இறைவன் கட்டளையிட்ட மாதமே ரமலான். ரமலான் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர சமுதாயத்தினருக்கும் இடையிலான உறவின் பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. அதோடு சோர்வில்லாத இறைவணக்கத்தின் மூலம் படைத்தவனுக்கும் மானிடர் களுக்கும் இடையிலான உறவும் நெருக்கம் அடைகிறது.
காஷ்மீரில்...
''இந்த ஆண்டிலிருந்தாவது தங்களுக்கு அமைதிவாழ்வு வேண்டும் என காஷ்மீர் மக்கள் புனித ரமலான் மாதத்தில் உள்ளம் உருக பிரார்த்தித்தனர். இது சமாதானத்தின் மாதம் எல்லாம் வல்ல கருணையான அல்லாஹ் எங்களுக்கும் சமாதானத்தை அருளுவானாக.
ஸ்ரீநகர் பள்ளிவாசல் இமாம் அலி முஹம்மத் கூடியிருந்த மக்களிடையே உருக்கத்துடன் பிரார்த்தித்தார். அவர்களது வேதனையை அதிகப்படுத்தும் வண்ணம் ஒரு அராஜக நிகழ்வு இந்த ரமலான் மாதத்தில் நிகழ்ந்தது. தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் பெண்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு படையினர் மூர்க்கத்தனமாக தாக்கினர். 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற படைப்பிரிவினர் தான் இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது தாக்குதலுக் கான ஒரே ஆதாரம் இவர்கள் மீது காஷ்மீர் மாநில காவல் துறையினரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. இத்தகவலை குப்வாரா பகுதி காவல்துறை கண்காணிப் பாளர் அப்துல் கையூம் உறுதிசெய்தார். ஹாஜரா பேகம், சமீனா அக்தர் உள்பட பல பெண்களும், படுகாயம் அடைந்தவர் களாக நாசிர் அஹ்மத் பட், நாசிர்தர், முக்தர் அஹ்மத் மற்றும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ருகையா பேகம் பேசும் நிலையில் இல்லை. இவருக்கு தலையில் பலமாக காயம் பட்டிருக்கிறது. எனது மகள் என்ன பாவம் செய்தாள்? ஏன் அவளை காட்டுத்தனமாக தாக்கினார்கள் என வெடிக்கிறார் அவரது தந்தை. ருகையாவின் சகோதரர் தாளாத ஆத்திரத்துடன் குமுறினார். இது இரண்டாவது தடவை, இவர்களது அக்கிரமத்துக்கு, அதிகாலை 5:30 மணிக்கு குல்போரா கிராமவாசிகள் அனைவரையும் அருகில் உள்ள பள்ளிக் கூட மைதானத்தில் கூடுமாறு கட்டளையிட்டுள் ளனர்.. 55வது ராஷ்ட்ரிய ரைபிள் படைப்பிரிவின் முன்னிலையில், இந்த பாதுகாப்புப் படையினரின் இன்ஃபார்மர்கள் என்று கூறப்படும் ஆள்காட்டிகள் முன்னிலையில் கிராமவாசிகள் நிறுத்தப் பட்டனர். அன்று மாலை வரை நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டனர். மறுநாள் அதிகாலை அவர்களது துன்பம் தொடர்ந்தது. பாதுகாப்புப்படையினர் முன் நிறுத்தப்பட்ட அக்தர் என்ற இளைஞரை இழுத்துச் சென்றனர். அதோடு அந்த மைதானத்தில் இருந்த காஷ்மீர் மாநில காவல்துறையினர் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று கட்டளையிடப்பட்டனர். அக்தர், ருகையா உள்ளிட்ட அப்பாவிகள் இழுத்து செல்லப்பட்ட போது பெண்கள் பகுதியிலிருந்து அழுகை பீறிட்டது. ஆடவர்கள் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தனர். அக்தர் தற்போது கோமாவில், ருகையா வாய் பேச முடியாதவராகி விட்டார். பாதகம் இழைத்த பாதுகாப்பு படையினர் மீது காஷ்மீர் மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கம் போல ராணுவ உயர் அதிகாரிகள் எடுத்த எடுப்பிலேயே இதை மறுக்கத் தொடங்கியுள்ளனர். ரமலானின் முதல் நாள் நடைபெற்ற இச்சம்பவம் காஷ்மீர் முழுவதும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஸ்ரீநகரில் முக்கிய பள்ளிவாசல் இமாம் அமைதிக்காக பிரார்த்தனை செய்வதைத்தான் நம்மால் அறிய முடிகிறது. குல்ப்போரா கிராமமக்களின் கதி என்ன என்பது யாருக்குத் தெரியும்.
இந்தோனேஷியாவில்...
இந்தோனேஷியாவில் 'பெங்களு பகுதி மக்கள் இந்த ஆண்டு முதல் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற முடிய வில்லையே என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டியதாயிற்று. ரமலானுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அந்தப் பிராந்தி யத்தில் நிலநடுக்கம் 8.4 என்ற அளவில் ஏற்பட்டது. 10 பேரை பலிவாங்கிய இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டடங்களை ஒருக்களித்து படுக்க வைத்தது. வியப்பூட்டும் விதமாக நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிக்கு அருகிலேயே இருந்த கோடா அகுனுங் பகுதியில் அதன் சிறிய சீற்றத்தைக் கூட காண முடியவில்லை. இது நிச்சயம் இறை அருள்தான் என சிலிர்க்கின்றனர். அப்பகுதி மக்கள் கடலுக்கடியில் உருவான சுனாமி நிலநடுக்கமாக மாறி ரமலானுக்கு முதல் நாள் கோடா அகுங் மக்களின் வீடுகளைப் புரட்டிப் போட்டாலும் அவர்கள் கலங்காது வெட்டவெளியில் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி முதல் நோன்பை துவக்கினர். அடுத்தடுத்த நாட்களில் மண்ணெண்ணெய், ஸ்டவ்களை ஏற்பாடு செய்து ரெடிமேட் நூடில்ஸ்களை உணவாக உட்கொண்டு நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர். இறைவனுக்கு நன்றியுடைய மக்கள் என்றால் இவர்கள் அல்லவா என சிலிர்க்கிறார். ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர்.
பெல்ஜியம், பிரான்ஸ்...
இஸ்லாமியக் கொள்கைகள் வேகமாகப் பரவிவரும் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது. அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்து ஆறு ஆண்டு ஆனதை நினைவூட்டி பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம் விரோத ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஏறக்குறைய செப்டம்பர் மாதம் முழுவதும் இத்தகைய வெறியூட்டும் பேரணிகள் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்டது. இஸ்லாமிய மயமாக்கல் தடுத்து நிறுத்தப் படவேண்டும் என அவர்கள் கத்தித்தீர்த்தனர். ரமலான் மாதம் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அவர்களது வெறியுணர்வின் உச்சம் என பெல்ஜியம் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் தலைவர் உமர் ப்ராதி தெரிவித்தார். இவற்றை ரமலான் மாதத்தில் நடத்தி முஸ்லிம்களின் உணர்வை காயப்படுத்து வதே அவர்களது நோக்கம் என்றும் உமர் தெரிவித்தார். ஒரு கோடி மக்கள் வாழும் பெல்ஜியத்தில் நான்கரை லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்க சிலர் முனைந்து வருகிறார்கள். சமீபத்தில் பிரான்ஸின் பொதுத் தகவல்துறை ஒரு திடுக்கிடும் செய்தியைக் கூறியுள்ளது. பிரான்ஸில் மதரஸாக்கள் கடுமையான கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறது.. அதாவது இன்றைய தலைமுறையினர் அரபி மொழியை விருப்பப்பாடமாக படிப்பதால் பிரான்ஸ் உளவுத் துறை எரிச்சலடைகிறதாம். இதே நேரத்தில் பள்ளிவாசல்கள் நிறைந்து நடைபாதைகளிலும் தெரு வோரங் களிலும் முஸ்லிம் இளைஞர்கள் தராவீஹ் என்ற ரமலான் தொழுகையை பேணுவதும் தொடர்கிறது.
பிரிட்டன்
பிரிட்டன் முஸ்லிம்கள் ரமலானை ஒரு சமாதான மீட்பு பிரச்சார சாதனமாக பயன்படுத்தினார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி தேசிய அளவிலான ஒரு கருத்தாய்வை முஸ்லிம்கள் ஏற்படுத்தினர். பரஸ்பர சந்தேகங்கள் களைந்து உலகிற்கு இஸ்லாம் வழங்கிய நன்கொடைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாம் குறித்தும் பிரிட்டிஷ் முஸ்லிம் கள் குறித்தும் அச்ச உண்வை களைய வேண்டும் 'இஸ்லாம்லிஇன்லிபீஸ்' ஒருங்கிணைப்பாளர் இஃப்ஹாப் ஷாஹீன் தெரிவித்தார். பாதாள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அனைத்திலும் முஸ்லிமாக இருப்பதில் பெருமையடைகிறோம் என்ற பதாகைகள் பிரிட்டன் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டன. இது பிரிட்டிஷ் சமூகத்தில் மத மாச்சரியங்களை அகற்றும் என பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பி னரும் அரசுக் கொறடாவுமான சாதிக்கான் தெரிவித்தார்.
ரஷ்யாவில்
ரஷ்யாவில் ரமலானின் சிறப்பம்சமாக ஹலால் உணவகங்கள் திறக்கப்பட்டன. மாஸ்கோவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஹலால் உணவகம் அமைக்கப்பட்டதாக மாஸ்கோ நகர சமய விவகாரத்துறை தலைவர் இகோர் எலிஃபிரின் கோ தெரிவித்தார். ஹலால் உணவகங்கள் பள்ளிவாசல் வளாகங் களிலே அமைக்கப்பட்டு வருகின்றன வாம். இதில் முஸ்லிம் அல்லாதவர் களையும் ஹலால் உணவின் நேர்த்தியும் சுவையும் ஈர்த்து வருகிறதாம்.
வெள்ளை மாளிகையில் இஃப்தார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் முக்கியப்பிரமுகர்களும் அமெரிக்காவின் முஸ்லிம் பிரமுகர்களும், முஸ்லிம் தூதுவர்களும் கலந்து கொண்ட ரமலான் இஃப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசினார்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தூய்மை உணர்வில் பங்கேற்கிறோம். 90 சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். இஸ்லாத்தையும் அதன் செழுமிய பண்பாட்டை யும் கொண்டாட வேண்டிய முக்கிய தருணம் இது என்றார் அமெரிக்க அதிபர் புஷ்.
இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது. நாம் தீவிரவாதத் தையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்தியே பார்க்கிறோம். முஸ்லிம்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பதில் நாம் பின் வாங்குவதில்லை. போஸ்னியாவிலும், கொசாவாவிலும் குவைத்திலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே நாம் இருந்தொம் இங்குள்ள முஸ்லிம்கள் அமெரிக்கர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவ தலைமை யகமான பெண்டகனில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் நூறு பேரும் இப்ஃதார் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினருடன் முதன் முறையாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலும் ரமலான் தியாக உணர்வுடன் நெறியுடன் பேணப்பட்டது.
உலகின் 140 கோடி முஸ்லிம்களின் இதயங்களிலும், இமைகளிலும் நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி, எல்லாம் வல்ல இறைவனின் நற்கூலிக்காக அனைத்து இதயங்களும் காத்திருக் கின்றன.
ஹபீபா பாலன்
எல்லாம் வல்ல இறைவனிடம் தன்னை முழுமையாக சமர்ப்பித்து, பகல் முழுவதும் நோன்பு நோற்று இரவு முழுவதும் வணங்கி தனது வருமானத்தில் இல்லாதோருக்கு ஈந்து மகிழும் உயர்ந்த செயலை உலக முஸ்லிம்களின் உயர் கடமையாக்கிய உன்னத ரமலான் இதோ நம்மை விட்டு விடை பெறுகின்றது.
இப்பரந்த பூமிப்பந்தில் கிழக்கிலிருந்து மேற்கிலும், தென்முனையிலிருந்து வடபுலத்திலும், சமவெளிகளிலும், மலைப்பிரதேசங்களிலும், பீட பூமிகளிலும், நெய்தலிலும் பாலையிலும் புனித ரமலான் நோன்பு நெக்குருகி மெய்சிலிர்த்து நோற்கப்பட்டது.. உலகத்தில் உள்ள 140 கோடி முஸ்லிம்களும் புனித ரமலானை போற்றதற்கரிய பேறாக எண்ணி பூரித்துப் போயினர்.
ரமலான், ஈகையின் பெருமையை நமக்கு வலியுறுத்துகிறது. முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை உறுதிப் படுத்துகிறது. இறைவன் தங்களுக்கு வழங்கிய அனைத்திலும் இருந்து மனித சமூகத்திற்கு வழங்க இறைவன் கட்டளையிட்ட மாதமே ரமலான். ரமலான் முஸ்லிம்களுக்கும் பிற சகோதர சமுதாயத்தினருக்கும் இடையிலான உறவின் பிணைப்பை உறுதிப்படுத்துகிறது. அதோடு சோர்வில்லாத இறைவணக்கத்தின் மூலம் படைத்தவனுக்கும் மானிடர் களுக்கும் இடையிலான உறவும் நெருக்கம் அடைகிறது.
காஷ்மீரில்...
''இந்த ஆண்டிலிருந்தாவது தங்களுக்கு அமைதிவாழ்வு வேண்டும் என காஷ்மீர் மக்கள் புனித ரமலான் மாதத்தில் உள்ளம் உருக பிரார்த்தித்தனர். இது சமாதானத்தின் மாதம் எல்லாம் வல்ல கருணையான அல்லாஹ் எங்களுக்கும் சமாதானத்தை அருளுவானாக.
ஸ்ரீநகர் பள்ளிவாசல் இமாம் அலி முஹம்மத் கூடியிருந்த மக்களிடையே உருக்கத்துடன் பிரார்த்தித்தார். அவர்களது வேதனையை அதிகப்படுத்தும் வண்ணம் ஒரு அராஜக நிகழ்வு இந்த ரமலான் மாதத்தில் நிகழ்ந்தது. தீவிரவாதிகளைத் தேடுகிறோம் என்ற பெயரில் பெண்கள் உட்பட 19 பேரை பாதுகாப்பு படையினர் மூர்க்கத்தனமாக தாக்கினர். 55 ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் என்ற படைப்பிரிவினர் தான் இந்த கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது தாக்குதலுக் கான ஒரே ஆதாரம் இவர்கள் மீது காஷ்மீர் மாநில காவல் துறையினரால் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை போடப்பட்டுள்ளது. இத்தகவலை குப்வாரா பகுதி காவல்துறை கண்காணிப் பாளர் அப்துல் கையூம் உறுதிசெய்தார். ஹாஜரா பேகம், சமீனா அக்தர் உள்பட பல பெண்களும், படுகாயம் அடைந்தவர் களாக நாசிர் அஹ்மத் பட், நாசிர்தர், முக்தர் அஹ்மத் மற்றும் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ருகையா பேகம் பேசும் நிலையில் இல்லை. இவருக்கு தலையில் பலமாக காயம் பட்டிருக்கிறது. எனது மகள் என்ன பாவம் செய்தாள்? ஏன் அவளை காட்டுத்தனமாக தாக்கினார்கள் என வெடிக்கிறார் அவரது தந்தை. ருகையாவின் சகோதரர் தாளாத ஆத்திரத்துடன் குமுறினார். இது இரண்டாவது தடவை, இவர்களது அக்கிரமத்துக்கு, அதிகாலை 5:30 மணிக்கு குல்போரா கிராமவாசிகள் அனைவரையும் அருகில் உள்ள பள்ளிக் கூட மைதானத்தில் கூடுமாறு கட்டளையிட்டுள் ளனர்.. 55வது ராஷ்ட்ரிய ரைபிள் படைப்பிரிவின் முன்னிலையில், இந்த பாதுகாப்புப் படையினரின் இன்ஃபார்மர்கள் என்று கூறப்படும் ஆள்காட்டிகள் முன்னிலையில் கிராமவாசிகள் நிறுத்தப் பட்டனர். அன்று மாலை வரை நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குத் திரும்புமாறு உத்தரவிடப்பட்டனர். மறுநாள் அதிகாலை அவர்களது துன்பம் தொடர்ந்தது. பாதுகாப்புப்படையினர் முன் நிறுத்தப்பட்ட அக்தர் என்ற இளைஞரை இழுத்துச் சென்றனர். அதோடு அந்த மைதானத்தில் இருந்த காஷ்மீர் மாநில காவல்துறையினர் கட்டாயமாக வெளியேற வேண்டும் என்று கட்டளையிடப்பட்டனர். அக்தர், ருகையா உள்ளிட்ட அப்பாவிகள் இழுத்து செல்லப்பட்ட போது பெண்கள் பகுதியிலிருந்து அழுகை பீறிட்டது. ஆடவர்கள் ஆத்திரத்தை அடக்க முடியாமல் தவித்தனர். அக்தர் தற்போது கோமாவில், ருகையா வாய் பேச முடியாதவராகி விட்டார். பாதகம் இழைத்த பாதுகாப்பு படையினர் மீது காஷ்மீர் மாநில காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்கம் போல ராணுவ உயர் அதிகாரிகள் எடுத்த எடுப்பிலேயே இதை மறுக்கத் தொடங்கியுள்ளனர். ரமலானின் முதல் நாள் நடைபெற்ற இச்சம்பவம் காஷ்மீர் முழுவதும் பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. ஸ்ரீநகரில் முக்கிய பள்ளிவாசல் இமாம் அமைதிக்காக பிரார்த்தனை செய்வதைத்தான் நம்மால் அறிய முடிகிறது. குல்ப்போரா கிராமமக்களின் கதி என்ன என்பது யாருக்குத் தெரியும்.
இந்தோனேஷியாவில்...
இந்தோனேஷியாவில் 'பெங்களு பகுதி மக்கள் இந்த ஆண்டு முதல் நாள் தராவீஹ் தொழுகையை நிறைவேற்ற முடிய வில்லையே என்ற ஏக்கத்தில் இருக்க வேண்டியதாயிற்று. ரமலானுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அந்தப் பிராந்தி யத்தில் நிலநடுக்கம் 8.4 என்ற அளவில் ஏற்பட்டது. 10 பேரை பலிவாங்கிய இந்த நிலநடுக்கம் அங்குள்ள கட்டடங்களை ஒருக்களித்து படுக்க வைத்தது. வியப்பூட்டும் விதமாக நிலநடுக்கம் நிகழ்ந்த பகுதிக்கு அருகிலேயே இருந்த கோடா அகுனுங் பகுதியில் அதன் சிறிய சீற்றத்தைக் கூட காண முடியவில்லை. இது நிச்சயம் இறை அருள்தான் என சிலிர்க்கின்றனர். அப்பகுதி மக்கள் கடலுக்கடியில் உருவான சுனாமி நிலநடுக்கமாக மாறி ரமலானுக்கு முதல் நாள் கோடா அகுங் மக்களின் வீடுகளைப் புரட்டிப் போட்டாலும் அவர்கள் கலங்காது வெட்டவெளியில் வெறும் தண்ணீரை மட்டும் அருந்தி முதல் நோன்பை துவக்கினர். அடுத்தடுத்த நாட்களில் மண்ணெண்ணெய், ஸ்டவ்களை ஏற்பாடு செய்து ரெடிமேட் நூடில்ஸ்களை உணவாக உட்கொண்டு நோன்பை கடைப்பிடிக்கத் தொடங்கினர். இறைவனுக்கு நன்றியுடைய மக்கள் என்றால் இவர்கள் அல்லவா என சிலிர்க்கிறார். ஆஸ்திரேலியாவின் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர் ஒருவர்.
பெல்ஜியம், பிரான்ஸ்...
இஸ்லாமியக் கொள்கைகள் வேகமாகப் பரவிவரும் ஐரோப்பாவில் இஸ்லாமிய எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது. அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்து ஆறு ஆண்டு ஆனதை நினைவூட்டி பெல்ஜியம் நாட்டின் தலைநகர் ப்ரஸ்ஸல்ஸில் ஆயிரக்கணக்கானோர் முஸ்லிம் விரோத ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஏறக்குறைய செப்டம்பர் மாதம் முழுவதும் இத்தகைய வெறியூட்டும் பேரணிகள் ஐரோப்பா முழுவதும் நடத்தப்பட்டது. இஸ்லாமிய மயமாக்கல் தடுத்து நிறுத்தப் படவேண்டும் என அவர்கள் கத்தித்தீர்த்தனர். ரமலான் மாதம் அவர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அவர்களது வெறியுணர்வின் உச்சம் என பெல்ஜியம் இஸ்லாமிய இளைஞர் அமைப்பின் தலைவர் உமர் ப்ராதி தெரிவித்தார். இவற்றை ரமலான் மாதத்தில் நடத்தி முஸ்லிம்களின் உணர்வை காயப்படுத்து வதே அவர்களது நோக்கம் என்றும் உமர் தெரிவித்தார். ஒரு கோடி மக்கள் வாழும் பெல்ஜியத்தில் நான்கரை லட்சம் பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக ஓர் அச்ச சூழ்நிலையை உருவாக்க சிலர் முனைந்து வருகிறார்கள். சமீபத்தில் பிரான்ஸின் பொதுத் தகவல்துறை ஒரு திடுக்கிடும் செய்தியைக் கூறியுள்ளது. பிரான்ஸில் மதரஸாக்கள் கடுமையான கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்தி ருக்கிறது.. அதாவது இன்றைய தலைமுறையினர் அரபி மொழியை விருப்பப்பாடமாக படிப்பதால் பிரான்ஸ் உளவுத் துறை எரிச்சலடைகிறதாம். இதே நேரத்தில் பள்ளிவாசல்கள் நிறைந்து நடைபாதைகளிலும் தெரு வோரங் களிலும் முஸ்லிம் இளைஞர்கள் தராவீஹ் என்ற ரமலான் தொழுகையை பேணுவதும் தொடர்கிறது.
பிரிட்டன்
பிரிட்டன் முஸ்லிம்கள் ரமலானை ஒரு சமாதான மீட்பு பிரச்சார சாதனமாக பயன்படுத்தினார்கள். அக்டோபர் ஒன்றாம் தேதி தேசிய அளவிலான ஒரு கருத்தாய்வை முஸ்லிம்கள் ஏற்படுத்தினர். பரஸ்பர சந்தேகங்கள் களைந்து உலகிற்கு இஸ்லாம் வழங்கிய நன்கொடைகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இஸ்லாம் குறித்தும் பிரிட்டிஷ் முஸ்லிம் கள் குறித்தும் அச்ச உண்வை களைய வேண்டும் 'இஸ்லாம்லிஇன்லிபீஸ்' ஒருங்கிணைப்பாளர் இஃப்ஹாப் ஷாஹீன் தெரிவித்தார். பாதாள ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், அனைத்திலும் முஸ்லிமாக இருப்பதில் பெருமையடைகிறோம் என்ற பதாகைகள் பிரிட்டன் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டன. இது பிரிட்டிஷ் சமூகத்தில் மத மாச்சரியங்களை அகற்றும் என பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பி னரும் அரசுக் கொறடாவுமான சாதிக்கான் தெரிவித்தார்.
ரஷ்யாவில்
ரஷ்யாவில் ரமலானின் சிறப்பம்சமாக ஹலால் உணவகங்கள் திறக்கப்பட்டன. மாஸ்கோவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு ஹலால் உணவகம் அமைக்கப்பட்டதாக மாஸ்கோ நகர சமய விவகாரத்துறை தலைவர் இகோர் எலிஃபிரின் கோ தெரிவித்தார். ஹலால் உணவகங்கள் பள்ளிவாசல் வளாகங் களிலே அமைக்கப்பட்டு வருகின்றன வாம். இதில் முஸ்லிம் அல்லாதவர் களையும் ஹலால் உணவின் நேர்த்தியும் சுவையும் ஈர்த்து வருகிறதாம்.
வெள்ளை மாளிகையில் இஃப்தார்
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் முக்கியப்பிரமுகர்களும் அமெரிக்காவின் முஸ்லிம் பிரமுகர்களும், முஸ்லிம் தூதுவர்களும் கலந்து கொண்ட ரமலான் இஃப்தார் விருந்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பேசினார்.
நூறு கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தூய்மை உணர்வில் பங்கேற்கிறோம். 90 சிறப்பு விருந்தினர்கள் இதில் பங்கேற்றனர். இஸ்லாத்தையும் அதன் செழுமிய பண்பாட்டை யும் கொண்டாட வேண்டிய முக்கிய தருணம் இது என்றார் அமெரிக்க அதிபர் புஷ்.
இஸ்லாம் வன்முறைக்கு எதிரானது. நாம் தீவிரவாதத் தையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்தியே பார்க்கிறோம். முஸ்லிம்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப்பதில் நாம் பின் வாங்குவதில்லை. போஸ்னியாவிலும், கொசாவாவிலும் குவைத்திலும் முஸ்லிம்களுக்கு ஆதரவாகவே நாம் இருந்தொம் இங்குள்ள முஸ்லிம்கள் அமெரிக்கர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு அமெரிக்க ராணுவ தலைமை யகமான பெண்டகனில் முஸ்லிம் ராணுவ அதிகாரிகள் நூறு பேரும் இப்ஃதார் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினருடன் முதன் முறையாக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சோமாலியா, ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளிலும் ரமலான் தியாக உணர்வுடன் நெறியுடன் பேணப்பட்டது.
உலகின் 140 கோடி முஸ்லிம்களின் இதயங்களிலும், இமைகளிலும் நெகிழ்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி, எல்லாம் வல்ல இறைவனின் நற்கூலிக்காக அனைத்து இதயங்களும் காத்திருக் கின்றன.
Friday, September 14, 2007
Sunday, September 2, 2007
சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது.
சச்சார் குழு பரிந்துரைகள் செயல் வடிவம் பெற்றது
.சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்
.சச்சார் குழு பரிந்துரைக்கான செயல் திட்டங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைப்பதை உறுதி செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்படும் என்றும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் போதிய அளவு இடம் வழங்காததை தவிர்க்க உயர்நிலைக் குழு ஒன்று உருவாக்கப்படும் என்றும் மக்களவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் அப்துர் ரஹ்மான் அந்துலே தெரிவித்திருக்கிறார்.
முஸ்லிம்களின் கல்வி, சமூகம் மற்றும் பொருளாதாரநிலை குறித்து ஆய்வு செய்த நீதிபதி ராஜிந்தர் சச்சார் தலைமையிலான உயர் மட்டக்குழு தனது அறிக்கையை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவையில் தாக்கல் செய்தது.
அந்த அறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய 15 அம்ச செயல் திட்டத்தை மத்திய அரசுக்கு சச்சார் குழு தெரிவித்தது. இது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்த சிறுழுôன்மையினர் நலத்துறை அமைச்சர் அந்துலே இது ஒரு சரித்திர சிறப்பு மிக்க அறிக்கை என்றும் அதை தாக்கல் செய்யும் இந்த நேரம் வரலாற்று சிறப்பு மிக்க தருணம் என்று அவர் குறிப்பிட்டார். அந்த அறிக்கையில் அரசுத்துறை, பொதுத்துறை நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகள் ஆகியவற்றில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க ஏற்கெனவே தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் ஆட்சி முறையில் முஸ்லிம்களுக்குப் போதிய பங்கு வழங்கப்படாதது தொடர்பாக சச்சார் குழு கவலை தெரிவித்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர் அந்துலே அந்தக் குறைபாடுகளைக் களைய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்ருப்பதாக தெரிவித்தார்.
சச்சார்குழு அறிக்கையில் கூறப்பட்டிருப்தைப் போல அக்குழு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்யும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க இக்குழு பார்த்துக் கொள்ளும். இதன் மூலம் அரசியல் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதில் உள்ள குறைபாடுகள் களையப்படும் என்றும் அமைச்சர் அப்துர்ரஹ்ôன் அந்துலே கூறினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் 90 மாவட்டங்களில் அடிப்படை வசதிகளையும், வேலை வாய்ப்பையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் 338 நகரங்களில் கட்டமைப்பு வசதிகளில் உள்ளக் குறைபாடுகளைக் களைவதும் அவர்களுக்குப் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்துலே தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்காக மூன்று கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மவ்லானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்கான மூலநிதி அதிகரிக்கப்படும். முஸ்லிம்களுக்கு தொழிற் பயிற்சி வழங்குதல் மற்றும் அவர்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கச் செய்தல் ஆகியவற்றுக்கான விரிவாகத் திட்டத்தை உருவாக்கவும் அதைச் செயல்படுத்தி கண்காணிக்கவும் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும் அந்துலே தெரிவிக்கிறார்.
முஸ்லிம் பெண்கள் உயர்கல்வி படிப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தேவையான இடங்களில் மகளிர் கல்விக் கூடங்கள் நிறுவப்படும். முஸ்லிம்கள் குறிப்பிட்ட அளவில் வாழும் பகுதிகளில் கஸ்தூரிபா காந்தி மழலையர் பள்ளிகள் திறக்கப்படும். முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைத் திறக்க முன்னுரிமை அளிக்கப்படும். அந்தப் பகுதிகளில் சிறப்பு எழுத்தறிவு இயக்கம் நடத்தப்படும்.
முஸ்லிம்களுக்கு வங்கிக்கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்த பகுதிகளில் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகள் திறக்கப்படும்.
மதரஸாக் கல்வியை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்டும். மேலும் அவற்றில் உயர்கல்வி கற்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உர்து மொழி பிராந்திய மொழியாக அறிவிக்கப்பட்டு அதில் கல்வி கற்பிக்க ஏற்பாடுகள் செய்யப்படும்.மேலும் முஸ்லிம்களின் உடல்நலன் மற்றும் குடும்ப நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்துலே கூறினார்.
வக்ஃபு சொத்துக்களை பாதுகாக்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாயை உரிய முறையில் செலவிடவும் பொருத்தமான அமைப்பு உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.முஸ்லிம்களின் அவலநிலையை அகற்ற சமவாய்ப்பு ஆணையம் அமைக்கப்படும் என்று மேலும் அமைச்சர் உறுதி அளித்தார்
Friday, August 31, 2007
ஹைதராபாத் குண்டுவெடிப்பு
சூழ்ச்சியின் பின்னணி
ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்
சூழ்ச்சியின் பின்னணி
ஹைதராபாத் நகரில் மக்கள் அதிகம் கூடும் லும்பினி பார்க் மற்றும் கோகுல்சாட் என்ற உணவகத்திலும் நிகழ்ந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். குண்டுவெடிப்பு நடந்த பகுதி களில் இருந்து தடயங்களை சேகரித்த போது நியோஜெல்லி90 என்ற அமோனியம் நைட்ரோ ரசாயனம் கலந்த வெடிகுண்டு மருந்து பயன்படுத்தப்பட்டிருப் பதாக காவல்துறை கூறுகிறது.
இந்த சம்பவத்தில் அந்நிய நாட்டு தீவிரவாத சக்திகளின் கைவரிசை இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப் படுவார்கள் என இந்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் அறிவித்திருக்கிறார். ''மீண்டும் பொடா சட்டம் கொண்டு வந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும்'' என குண்டு வெடிப்பு சம்பவ இடத்தைப் பார்வையிட வந்த அத்வானி வழக்கம்போல தெரிவித்திருக் கிறார்.
இந்த குண்டுவெடிப்பில் முஹம்மது அலி என்ற 6 வயது சிறுவன், அமீர் என்ற 8 வயது சிறுவன் மற்றும் மூன்று பெண்கள் உட்பட 11 முஸ்லிம்களும் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிரா வின் அஹமது நகர் மாவட்டத் தில் அமிருத் வாகினி பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்று பேராசிரியர்களும் ஏழு மாணவர் களும் இச்சமயத்தில் கொல்லப் பட்டுள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பில் ரஹீமுன்னிஸா பேகம் (48), முஹம்மது வாஹித் அலி (21), அஹ்யா அப்துல் காதர் (17), அக்ரமுல்லாஹ்கான் (22), அஹ்மது முஹினுத்தீன் (45), முஹம்மது சலீம் (47), ஃபரீதா நாஸ் (35), முஹம்மது அலி (6), அமீர் (8), இப்ராஹிம்கான் (43), மற்றும் இர்ஷாத் அஹ்மத் (19) ஆகியோர் பலியாகி உள்ளனர்.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு குடும்பமே கூண்டோடு பலியான பரிதாபச் சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
கோகுல் சாட் பண்டார் என்ற துரித உணவகத்தில் முஹம்மது சலீமின் குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில், அவரும் அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களும் பலியாகி விட்டனர். ஹுமாயுன் நகர் என்ற பகுதியில் கோல்கொண்டா அடுக்குமாடி குடியிருப்பில் சலீமின் குடும்பம் வசித்து வந்துள்ளது.
சிதறிய சலீம் குடும்பத்தினரின் உடல்களைப் பார்த்து கோல் கொண்டா குடியிருப்புவாசிகள் கதறியது நெஞ்சைப் பிழியும் காட்சியாக இருந்தது.''ஹைதராபாத் நகரம் பாதுகாப்பு இல்லாத இடமாக மாறிவிட்டதே'' என்று ஒரு பெண் கூடியிருந்த செய்தியாளர்களைப் பார்த்து கதறினார்.
குண்டுவெடிப்பு குறித்த செய்தி கிடைத்ததும் சலீமின் சகோதரர் சமீர், அவரைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். செல்பேசி அழைப்புக்கு பதில் வராததால் ஒவ்வொரு மருத்துவ மனையாகச் சென்று பார்த்திருக் கிறார். இறுதியில் உஸ்மானியா மருத்துவமனையில் அந்தக் குடும்பமே உடல் சிதறி இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்.''இந்த படுபாதகச் செயலை செய்தவர் யாராக இருந்தாலும் அவர்களை இழுத்து வந்து பொது இடத்தில் தூக்கிலிட்டுக் கொல்ல வேண்டும்'' என பலியானவர் களின் உறவினர்கள் குமுறலுடன் கூறினர்.
''பயங்கரவாதிகள், மனித நேயத்திற்கும் மதங்களுக்கும் எதிரானவர்கள்; இவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்'' என ஆவேசமாகக் குறிப்பிட்டார் அஸதுல்லாஹ் கான். இவர் இந்த குண்டுவெடிப் பில் தனது ஒரே மகனான அக்ரமுல்லாகானை பறிகொடுத் தவர். அம்பர்பேட் மையவாடியில் தனது ஒரே மகனை அடக்கம் செய்துவிட்டு அவர் பயங்கரவாதி களுக்கு எதிராக முழக்கமிட்டார். அந்தக் காட்சி கூடியிருந்தவர் களை உணர்ச்சிக் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.
''பயங்கரவாதிகள் மனிதகுலத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் ஹிந்துக்கள். முஸ்லிம் கள் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் கொன்று குவிப்பவர்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது ''என்கிறார் ஃபர்ஹா ஃபரூக்கி என்ற இளம்பெண் அதிர்ச்சி விலகாமல்.
இது மிகவும் கோழைத் தனமான செயல். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அதேநேரம் விசாரணைகள் வெளிப்படையாகவும் உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறியும் வகையிலும் இருக்க வேண்டும் என தமுமுக தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகளின் இலக்காக ஆந்திர மாநிலம், குறிப்பாக ஹைதராபாத் நகரம் ஏன் குறிவைக்கப்படுகிறது என்பதற்கு நடுநிலையாளர்கள் சில திடுக் கிடும் காரணங்களைக் கூறுகிறார் கள்.
நடுநிலையாளர்களும், சமூக ஆர்வலர்களும் ஆந்திர மாநிலப் பகுதியை சூழ்ச்சி வலையில் சிக்கவைக்கும் சதிகளுக்கான காரணங்கள் பற்றி கீழ்க்கண்ட வாறு பட்டியலிடுகிறார்கள்.
1. ஹைதராபாத் அதிநவீன தொழில்நுட்ப நகராக விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. இது நம்நாட்டின் வளர்ச்சியைப் பிடிக்காத சக்திகளின் கண்களை உறுத்துகிறது.
2. ஹைதராபாத் நகரம் முஸ்லிம் களின் பாரம்பரிய பெருமைமிக்க நகராகத் திகழ்கிறது.
3. தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸின் கோட்டையாக ஆந்திர மாநிலம் விளங்குகிறது. காங்கிரசுக்கு அதிக அளவு நாடாளுமன்ற உறுப்பினர்களை வழங்கும் மாநிலமாக இருப்ப தோடு ஹிந்துத்துவ சக்திகள் சற்றே துளிர்விடக் கூட வாய்ப்பில்லாத பூமியாகவும் ஆந்திரம் விளங்குகிறது.
4. எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து மக்க ளாலும் விரும்பப்படும் தலைவராக ஆந்திர முதல மைச்சர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி விளங்கு கிறார். குறிப்பாக சமூகத்தில் அழுத்தப்பட்டுக் கொண்டி ருக்கும் முஸ்லிம்களுக்காக, அவர்களது நிலையை மேம்படுத்த இடஒதுக் கீட்டுக்கு வழிசெய்தார்.
அதற்காக தடங்கல் ஏற்படுத்திய தடைகளை யெல்லாம் உடைத்து முஸ்லிம் களுக்கு இடஒதுக்கீடு வழங் கிட மும்முரம் காட்டினார்.
இத்தகைய பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட ஆந்திர அரசுக்கு இடைவிடாத தலைவலி கொடுத்து அரசியல் அரங்கில் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உள்ளூர் பயங்கரவாதிகளும், வெளிநாட்டு பயங்கரவாதிகளும் கைகோர்த்திருக்கக் கூடும் என நடுநிலையாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே ஆந்திர காவல் துறையில் சில கறுப்பாடுகள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத் தும் விதமாக, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்புக்குப் பிறகு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் முஸ்லிம் அப்பாவிகளை சுட்டுக் கொன்றது, கம்யூனிஸ்ட்டுகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மூர்க்கத்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி ஏழைப் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது போன்ற சம்பவங்களை கவனத்தில் கொண்டு அனைத்துவித நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்.
இதற்கிடையில் குண்டுவைத்த வர்களுக்கு உதவியவர் என கோழிக்கறி கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். மீண்டும் ஒரு காமெடிக் காட்சியை அரங்கேற்ற வேண்டாம் என காவல்துறையை நாட்டு மக்கள் கெஞ்சிக் கேட்கிறார்கள்.
இதற்கிடையில் மீண்டும் பொடா வேண்டும் என்ற கோரிக்கை காவி முகாமிலிருந்து எழுப்பப்படுகிறது. 'அறுக்கத் தெரியாதவன் இடுப்பில் அறுபத் தெட்டு அரிவாளாம்' என்ற பழமொழியை அவர்களின் கூற்று நினைவூட்டுகிறது. இந்தியாவின் இறையாண்மைக்கு உச்சக்கட்ட ஆபத்து இவர்களது ஆட்சியில் தான் ஏற்பட்டது என்பதை நாடு மறக்கவில்லை. இவர்கள் குட்டையைக் குழப்பாமல் விலகி இருப்பதே உத்தமம் என நாட்டு மக்கள் கருதுகிறார்கள்.
நாட்டு மக்களின் அமைதிக்கு வேட்டு வைக்க முயலும் பயங்கர வாதிகளின் படுபாதகச் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெங்களூரு அறிவியல் கழக துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அப்பாவி முஸ்லிம்களை வளைத்து விசாரித்ததோடு சரி. ஓராண்டுக்கு மேல் ஆகியும் உண்மைக் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை. அவ்வாறே, மாலேகான் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு போன்றவற்றில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். உண்மைக் குற்றவாளி கள் கண்டுபிடிக்கப்பட்டு உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப் பட்டிருந்தால் இத்தகைய செயல்கள் தொடராது என்பதே நடுநிலை யாளர்களின் கருத்தாக உள்ளது.
ஆந்திர அரசும், மத்திய அரசும் இணைந்து சதிகாரர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்
Thursday, August 16, 2007
மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்பு வழக்கு தீர்ப்புகள்:
நெஞ்சில் அலைபாயும் அனல்கள்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன.
இந்த தீர்ப்புகள் குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மும்பையிலும் கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம்மாநகரங்களில் முறையே டிசம்பர் 1992 லி ஜனவரி 1993 மற்றும் நவம்பர் லி டிசம்பர் 1997ல் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறிவிட்டன.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப் படுத்தவில்லை. ஆனால், அத்தகைய நாசகாரச் செயல்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?
மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால், அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டுவெடிப்புகள் பற்றிய படங்களை பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை பேட்டி கண்டு, குண்டுவெடிப்பில் ஈடுபட்டோ ருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.
இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றிலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றுப் பெறாத நிலையில் இந்த வாரம் கோவை குண்டுவெடிப்பு குறித்து சில உண்மை களை மக்கள் மன்றத்தில் வைப்பது அவசியமாகிறது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அனைவரையும் கருணையின் அடிப்படையில் அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி விடுதலைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
சாதாரணமாக நீதிமன்றங்களில் கொலை வழக்குகள் நடைபெறும்போது, அதற்கான தண்டனைகளை நீதிபதி அளிக்கும்போது கொலைக்கான உள்நோக்கம் (ம்ர்ற்ண்ஸ்ங்) என்ன என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கு குறைவான தண்டனையோ அளிப்பார். அதேபோல் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் குண்டு வெடிப்புகளுக்கான உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்க துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்கு காரணமானவர்களை, அவர்களது தலைவர்களை தாக்க வேண்டுமென்பது தான். எனவே, இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது.
பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள்தனமாகும்.
இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலாவரும் பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடு களின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதை கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இனி நவம்பர் டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்கு செல்வோம்.
நவம்பர் 29, 1997 சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மற்றும் மாநாட்டிற்காக பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவந்த வேளையில் தான் அந்த செய்தி 39, இப்ராஹீம்ஜி சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற முகவரியில் அப்போது இருந்த தமுமுகவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது.
கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்கு தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல் உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி (22) மற்றும் ஷபி (20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இத்துடன் பிரச்சனை முடிவடைந்து விட்டது என்பதுதான் அந்த செய்தி. ஆனால் இதற்கு பிறகு வந்த செய்திகள் நமது இதயங்களைப் பிளப்பதாக இருந்தது. காவலர் செல்வராஜ் படுகொலைக்கு பிறகு அன்று என்ன நடந்தது என்பது குறித்து தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி பின்வருமாறு பதிவுச் செய்துள்ளார்:
''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதை கடைகள் முதல் தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர் தான் தீ வைப்பு சம்பவங்களுக்கு தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில்: 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்'' (ஆதாரம்: தீ வீக், 14 டிசம்பர் 97 இதழில் இ. விஜயலட்சுமி எழுதிய இங்ஹற் ஸ்ரீர்ய்ள்ற்ஹக்ஷப்ங்ள் கட்டுரை)
மறுநாள் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்கள் கோவை முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் வாழும் அனைத்து மனிதநேயர்களுக்கும் தலைக் குனிவை ஏற்படுத்திய நாள். கோவை தீப்பிடித்து பற்றி எரிந்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் நானும் நமது கழகத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்வும் நேரடியாக கோவைக்கு கிளம்பி னோம்.
கோவை கலவரத்தை காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகள் தலைமையேற்று நடத்தின. இவர்களுக்கு தலைமை தாங்கியவர் அன்றைய கோவை காவல்துறை தலைமையக துணை ஆணையாளர் இருந்த ஈ மாசானமுத்து.
ஆனால், காவல்துறையில் நல்ல நெஞ்சங்களும் உண்டு என்பதை பறைச்சாற்றும் நிகழ்வு நாங்கள் கோவைக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்டது. கோவை நகர எல்லைக்கு சற்று தூரத்தில் ஒரு காவல்துறைச் சாவடியில் நமது வாகனத்தை நிறுத்தி கோவைக்கு செல்லும் வழியை கேட்டோம். வழியைச் சொன்ன காவலர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களில் கோவையில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்விற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதை உணர்த்தியது.
அந்தக் காவலர் எங்களிடம்: ''உங்களையெல்லாம் பார்த்தால் நல்லவர்கள்போல் தெரிகின்றது. கோவையில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். தயவு செய்து நீங்கள் கோவை செல்ல வேண்டாம். இந்தப் பாதையில் திரும்பி திருப்பூருக்கு செல்லுங்கள்'' என்று அந்தக் காவலர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இருப்பினும் நாம் கோவை நோக்கியே நமது பயணத்தைத் தொடர்ந்தோம். டிசம்பர் 2 அன்று காலை கோவை சென்று சேர்ந்தோம். அங்கு நாம் பார்த்தவை, கேட்டவை, அனுபவித்தவை இன்னும் ஆறாத தழும்புகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 அன்று கோவையில் என்ன நடந்தது. நாம் சொல்வதை நடுநிலையானதாக சிலர் கருதமாட்டார்கள். எனவே, கோவை முஸ்லிம் இன பேரழிவை பதிவு செய்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் கருத்துகளை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13லி26, 1997) அதன் சிறப்பு செய்தியாளர் டி.என். சுப்ரமணியன் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
''மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்து காவலர்கள் மட்டுமில்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து திருச்சி சாலை லி டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல்துறையினரின் மனைவி மார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
''உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைய்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடைவீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கோவையில் மிகப் பிரபலமான முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான சோபா கிளாத் சென்டர் என்ற மூன்று மாடி கட்டிடம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதில் அந்த கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகார கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தெருவில் போட்டு தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
''காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சி.டி. தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி. ரவி அங்கே வந்தபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதலில் சி.டி. தண்டபாணிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.
''காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு முஸ்லிம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர், அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார் (அவர் நடுரோட்டில் தீக்கிரையாக்கப்பட்ட காட்சி தினமணி இதழில் வெளியானது). இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.''
தி வீக் இதழின் செய்தியாளர் விஜயலட்சுமி முஸ்லிம்களின் வீடுகள் எவ்வாறு தாக்கப்பட்டன என்பது குறித்து பின்வருமாறு வர்ணிக்கிறார்:
''வன்முறையாளர்கள் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. பி1 காவல் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கனி ராவுத்தர் வீதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பிளாஸ்டிக் மொத்த வியாபாரி ஒருவர் நம்மிடம் 'எனது மனைவி, ஆறு வயது, மூன்று வயது மற்றும் 6 மாதங்கள் கொண்ட எனது 3 குழந்தைகள் ஆகியோருடன் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து எனது வீட்டை தீக்கிரையாக்கியது' என்றார்.' எங்களுக்குச் சொந்தமான கிட்டங்கியும் வியாபாரப் பொருட்களுடன் சேர்த்து எரிக்கப்பட்ட. 'எல்லா திசைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருந்தது. நான் பி1 காவல் நிலையத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் கடைசிவரை வரவேயில்லை. இறுதியாக நான் என் குடும்பத்தினருடன் மேல் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் குதித்தோம். அப்போது எனது ஆறு மாத குழந்தை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது. மற்ற குழந்தைகளுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத் திணறியது' என்றார்.
''தனது ஆயுட்கால சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்யேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்தலைவி அழுதுக் கொண்டே நம்மிடம் ''எனது கல்யாண பட்டுச்சேலை எரிந்துவிட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை'' என்றார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்கு தகவல் தந்த போதினும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்''
பிரபல பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நய்யார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் 'ஆ ஸ்ரீர்ஞ் ண்ய் ற்ட்ங் ரட்ங்ங்ப்' என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
''நாடாளுமன்றத்தின் கவனத்திலிருந்து தப்பும் அளவிற்கு கோவை கலவரங்கள் லேசானது அல்ல. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்பு 200 கோடியைத் தாண்டும்.
இதனை ஹிந்துலிமுஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கரியத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. 'காவல்துறையினர், ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தை திட்டமிட்டு நடத்தினர்' என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இதனை தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு சிறிய பிரச்சனை அல்ல.
12 வயது பாலகன் அபுபக்கர் சித்தீக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரிப் கர்ணகொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறக்க முடியாதவை.'
நமது வர்ணனையை விட தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி வீக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு மேற்கோள் காட்டுகிறோம்.
கோவையில் நவம்பர்லிடிசம்பர் 1997ல் நடந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறி குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்த கலவரங்களை முன் நின்று நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது அல்லது ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120பி, 153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை.
செல்வராஜ் கொல்லப்பட்ட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துன் நாசர் மஃதனியை போல் வருடக்கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூட சிறையில் தள்ளப்படவில்லை.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.
எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரின் உடல்களை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அதனை கோட்டைமேட்டிற்கு எடுத்து வந்து. இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாக கோவை சுண்ணாம்பு கால்வாய் அடக்கவிடத்தில் அடக்கப் பட்டது.
கோவை வரலாற்றில் இறுதி ஊர்வலங்களின்போது எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்டு. ஆனால், அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றியபோது, ''நல்ல காவல்துறை அதிகாரிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு வன்முறை பதில் ஆகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும்'' என்று குறிப்பிட்டேன்.
அன்றைய கோவை மாவட்ட கலெக்டர் சந்தானமும், ஊர்வல பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. ஆர்.வி.கோபாலனும் எனது உரையை பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.
வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதி கிடைக்கவில்லை.
இந்த பின்னணியில் தான் தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்த அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சிப் பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.
சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரை சிறையில் சந்தித்தபோது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பதை உணர முடிந்தது.
தி ஹிந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்கு பெரும் தண்டனையாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்கு சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.
நீதிபதி உத்திராபதி நீதி வழுவாமல் தனது இறுதித் தீர்ப்பை வழங்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்
நெஞ்சில் அலைபாயும் அனல்கள்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்
மும்பையில் 1993 மார்ச் 12 அன்றும், கோவையில் 1998 பிப்ரவரி 14 அன்றும் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் குறித்த தீர்ப்புகள் கடந்த ஜூலை மற்றும் இந்த மாதத்தின் தொடக்கத்தில் வெளியாகியுள்ளன.
இந்த தீர்ப்புகள் குறித்து செய்திகள் வெளியிட்ட பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மும்பையிலும் கோவையிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளுக்கு காரணமாக அம்மாநகரங்களில் முறையே டிசம்பர் 1992 லி ஜனவரி 1993 மற்றும் நவம்பர் லி டிசம்பர் 1997ல் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகள் குறித்து மவுனம் சாதித்து நடுநிலையைத் தவறிவிட்டன.
அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த குண்டுவெடிப்புகளை நாம் நியாயப் படுத்தவில்லை. ஆனால், அத்தகைய நாசகாரச் செயல்களை செய்வதற்கு தூண்டுகோலாக இருந்த முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை மறப்பது நியாயமா?
மும்பை மற்றும் கோவை குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்ட விதம் மாறுபட்டவை. ஆனால், அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் காரணமாக அமைந்த பொதுவான நிகழ்வு முஸ்லிம் இன பேரழிவு கலவரங்களை நடத்தியவர்கள் மீது அன்றைய அரசுகள் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுதான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த உண்மைகள் குறித்து மூச்சு விடாத செய்தி ஊடகங்கள், குண்டுவெடிப்புகள் பற்றிய படங்களை பிரசுரித்து, உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினரை பேட்டி கண்டு, குண்டுவெடிப்பில் ஈடுபட்டோ ருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்ற கருத்துருவாக்கத்தைச் செய்து வருகின்றன.
இச்சூழலில் மும்பை மற்றும் கோவை குண்டுவெடிப்புகளுக்கு காரணமாக இருந்த முஸ்லிம் பேரின அழிவு கலவரங்கள் குறித்தும் அதனை நடத்தியவர்கள் குறித்தும் அறிவது அவசியம். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றிலும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு முற்றுப் பெறாத நிலையில் இந்த வாரம் கோவை குண்டுவெடிப்பு குறித்து சில உண்மை களை மக்கள் மன்றத்தில் வைப்பது அவசியமாகிறது.
கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப் பட்டதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அனைவரையும் கருணையின் அடிப்படையில் அவர்கள் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கருதி விடுதலைச் செய்ய வேண்டும் என்ற கருத்தை நாம் வலியுறுத்துகிறோம்.
சாதாரணமாக நீதிமன்றங்களில் கொலை வழக்குகள் நடைபெறும்போது, அதற்கான தண்டனைகளை நீதிபதி அளிக்கும்போது கொலைக்கான உள்நோக்கம் (ம்ர்ற்ண்ஸ்ங்) என்ன என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மரண தண்டனையோ, ஆயுள் தண்டனையோ அல்லது அதற்கு குறைவான தண்டனையோ அளிப்பார். அதேபோல் கோவை குண்டு வெடிப்பு வழக்கைப் பொறுத்தவரை நீதிமன்றம் குண்டு வெடிப்புகளுக்கான உள்நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்து தீர்ப்பளிக்க வேண்டும்.
குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள சிலர் மீது 153ஏ குற்றச்சாட்டு நிரூபணம் ஆகி உள்ளதாக நீதிபதி அறிவித்துள்ளார். இது மிகவும் ஆபத்தான முடிவு என்பது நமது கருத்து. குண்டு வைக்க துணிந்தவர்களின் நோக்கம் நவம்பர் டிசம்பர் கலவரத்திற்கு காரணமானவர்களை, அவர்களது தலைவர்களை தாக்க வேண்டுமென்பது தான். எனவே, இதனை மதமோதல் என்றோ, மதத்தினருக்கிடையே பகைமையை ஏற்படுத்தும் செயல் என்றோ கூற முடியாது.
பாபரி மஸ்ஜிதை இடித்து, முஸ்லிம்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டும் அத்வானி போன்றோர் அனைத்து ஹிந்துக்களின் பிரதிநிதியாக இருக்கின்றார்கள் என்றோ அல்லது அனைத்து ஹிந்துக்களும் தங்கள் தலைவர்களாக அவரை போன்றோரை கருதுகிறார்கள் என்றோ கருதுவது முட்டாள்தனமாகும்.
இவர்கள் இந்து மதத்தின் பெயரைப் பயன்படுத்தி உலாவரும் பயங்கரவாதிகள். இந்த பயங்கரவாதிகளின் தலைவரான அத்வானிக்கு ஹிந்து மதக் கோட்பாடு களின் மீது நம்பிக்கை கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயம். எனவே அத்வானி கோவை வருவதை கருத்தில் கொண்டு அவரையும் அவரது ஆதரவாளர்களையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல். மதத்தினருக்கிடையே பகைமையே ஏற்படுத்தும் செயல் என்று கூறுவது முற்றிலும் தவறாகும்.
இனி நவம்பர் டிசம்பர் 97ல் நடைபெற்ற கலவரத்திற்கு செல்வோம்.
நவம்பர் 29, 1997 சனிக்கிழமை. தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் டிசம்பர் 6 அன்று சென்னையில் இடஒதுக்கீடு மற்றும் பாபரி மஸ்ஜித் பிரச்சனையை முன்வைத்து பேரணி மற்றும் மாநாட்டிற்காக பட்டிதொட்டியெல்லாம் பரபரப்பாக பிரச்சாரம் செய்துவந்த வேளையில் தான் அந்த செய்தி 39, இப்ராஹீம்ஜி சாஹிப் தெரு, இரண்டாம் சந்து என்ற முகவரியில் அப்போது இருந்த தமுமுகவின் தலைமையகத்திற்கு வந்து சேர்ந்தது.
கோவை உக்கடம் பகுதியில் போக்குவரத்து காவலர் செல்வராஜ் படுகொலைச் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து கோவை மாநகர காவல்துறை ஆணையாளர் ராஜேந்திரன் தலைமையில் கோட்டைமேட்டில் உள்ள அல்உம்மா அலுவலகத்திற்கு காவல்துறையினர் வந்தனர். செல்வராஜ் படுகொலை குறித்து தங்களுக்கு ஏதும் தெரியாது என்றும் ஆனால் அதற்கு தனது இயக்கத்தினர் காரணம் என்றால் விசாரித்து அவர்களை காவல்துறையிடம் ஒப்படைப்பதாக அல் உம்மா பொதுச் செயலாளர் அன்சாரி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மூன்று முஸ்லிம் வாலிபர்கள் அப்பாஸ் (22), ஷபி (22) மற்றும் ஷபி (20) ஆகியோர் காவல்துறையிடம் சரணடைந்தனர்.
இத்துடன் பிரச்சனை முடிவடைந்து விட்டது என்பதுதான் அந்த செய்தி. ஆனால் இதற்கு பிறகு வந்த செய்திகள் நமது இதயங்களைப் பிளப்பதாக இருந்தது. காவலர் செல்வராஜ் படுகொலைக்கு பிறகு அன்று என்ன நடந்தது என்பது குறித்து தி வீக் ஆங்கில வார இதழின் செய்தியாளர் இ. விஜயலட்சுமி பின்வருமாறு பதிவுச் செய்துள்ளார்:
''நவம்பர் 29 இரவே உக்கடம் சந்திப்பில் கலவரம் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட (முஸ்லிம்) சமூகத்தின் நடைபாதை கடைகள் முதல் தாக்குதல்களுக்கு உள்ளாகின. காவல்துறையினர் தான் தீ வைப்பு சம்பவங்களுக்கு தலைமை தாங்கினர். சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் பேசுகையில்: 'உக்கடம் சந்திப்பை நான் கடந்த சென்று கொண்டிருந்தேன். தனது சகாக்கள் உற்சாகம் ஊட்ட சில காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோலை எடுத்து நடைபாதை கடைகளை எரித்தனர்' என்று என்னிடம் தெரிவித்தார்'' (ஆதாரம்: தீ வீக், 14 டிசம்பர் 97 இதழில் இ. விஜயலட்சுமி எழுதிய இங்ஹற் ஸ்ரீர்ய்ள்ற்ஹக்ஷப்ங்ள் கட்டுரை)
மறுநாள் நவம்பர் 30, டிசம்பர் 1 ஆகிய நாட்கள் கோவை முஸ்லிம்களுக்கு மட்டும் அல்ல தமிழகத்தில் வாழும் அனைத்து மனிதநேயர்களுக்கும் தலைக் குனிவை ஏற்படுத்திய நாள். கோவை தீப்பிடித்து பற்றி எரிந்துக் கொண்டிருந்த அந்த தருணத்தில்தான் நானும் நமது கழகத்தின் அன்றைய துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்வும் நேரடியாக கோவைக்கு கிளம்பி னோம்.
கோவை கலவரத்தை காவல்துறையில் உள்ள சில கருப்பாடுகள் தலைமையேற்று நடத்தின. இவர்களுக்கு தலைமை தாங்கியவர் அன்றைய கோவை காவல்துறை தலைமையக துணை ஆணையாளர் இருந்த ஈ மாசானமுத்து.
ஆனால், காவல்துறையில் நல்ல நெஞ்சங்களும் உண்டு என்பதை பறைச்சாற்றும் நிகழ்வு நாங்கள் கோவைக்கு சென்று கொண்டிருக்கும்போது ஏற்பட்டது. கோவை நகர எல்லைக்கு சற்று தூரத்தில் ஒரு காவல்துறைச் சாவடியில் நமது வாகனத்தை நிறுத்தி கோவைக்கு செல்லும் வழியை கேட்டோம். வழியைச் சொன்ன காவலர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களில் கோவையில் வாழ்ந்த முஸ்லிம்களின் வாழ்விற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்பதை உணர்த்தியது.
அந்தக் காவலர் எங்களிடம்: ''உங்களையெல்லாம் பார்த்தால் நல்லவர்கள்போல் தெரிகின்றது. கோவையில் முஸ்லிம்கள் தாக்கப்படுகிறார்கள். தயவு செய்து நீங்கள் கோவை செல்ல வேண்டாம். இந்தப் பாதையில் திரும்பி திருப்பூருக்கு செல்லுங்கள்'' என்று அந்தக் காவலர் எங்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இருப்பினும் நாம் கோவை நோக்கியே நமது பயணத்தைத் தொடர்ந்தோம். டிசம்பர் 2 அன்று காலை கோவை சென்று சேர்ந்தோம். அங்கு நாம் பார்த்தவை, கேட்டவை, அனுபவித்தவை இன்னும் ஆறாத தழும்புகளாக பதிவு செய்யப் பட்டுள்ளன.
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 அன்று கோவையில் என்ன நடந்தது. நாம் சொல்வதை நடுநிலையானதாக சிலர் கருதமாட்டார்கள். எனவே, கோவை முஸ்லிம் இன பேரழிவை பதிவு செய்துள்ள சில பத்திரிக்கையாளர்களின் கருத்துகளை இங்கே மேற்கோள் காட்டுகிறோம்.
பிரண்ட்லைன் மாதமிருமுறை இதழில் (டிசம்பர் 13லி26, 1997) அதன் சிறப்பு செய்தியாளர் டி.என். சுப்ரமணியன் பின்வருமாறு வர்ணிக்கிறார்.
''மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) அன்று வன்முறை பூகம்பம் போல் வெடித்தது. போக்குவரத்து காவலர்கள் மட்டுமில்லாமல், காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிய காவலர்களும் தங்கள் பொறுப்புகளை விட்டு வெளியேறினர். அவர்கள் கருப்பு பட்டைகளை அணிந்து திருச்சி சாலை லி டவுன் ஹால் சந்திப்பில் அமர்ந்து மறியல் செய்ததுடன் முழக்கங்களையும் எழுப்பினர். பணிக்குத் திரும்புமாறு அவர்களுக்கு அறிவுறுத்திய மூத்த அதிகாரிகளின் உத்தரவுகளை ஏற்பதற்கு அவர்கள் மறுத்தனர். காவல்துறையினரின் மனைவி மார்களும் குழந்தைகளும் காவல் பயிற்சிப் பள்ளியில் இருந்து காவல்துறை ஆணையாளர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர்.
''உடனடியாக உக்கடம், ராஜ வீதி, ஈஸ்வரன் கோயில் வீதியில் கலவரம் வெடித்தது. முஸ்லிம்கள் மற்றும் ஹிந்து குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டது. பரஸ்பரம் சோடா புட்டிகள், கற்கள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. முஸ்லிம்களை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சுமார் 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், ரங்கைய்ய கவுண்டர் வீதி, ஒப்பனக்கார வீதி, வெரைய்டி ஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடைவீதி மற்றும் உக்கடத்தில் உள்ள முஸ்லிம் வணிக நிறுவனங்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டன. கோவையில் மிகப் பிரபலமான முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான சோபா கிளாத் சென்டர் என்ற மூன்று மாடி கட்டிடம் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டதில் அந்த கட்டிடம் தரைமட்டமாகியது. ஆயத்த ஆடைகள், துணிக் கடைகள், கடிகார கடைகள், காலணி கடைகள், சைக்கிள் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான கடைகளும் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சூறையாடியபின் எடுத்துச் செல்ல முடியாத பொருட்களை தெருவில் போட்டு தீக்கிரையாக்கினர். நடைபாதை கடைகளும் அடித்து நொறுக்கப்பட்டன. பள்ளிவாசல்களும் தாக்குதலில் இருந்து தப்பவில்லை.
''காவலர் செல்வராஜ் உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு வெளியில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கே குழுமியிருந்தனர். கோவை மேற்கு சட்டமன்ற உறுப்பினர் சி.டி. தண்டபாணி மற்றும் அவரது மகன் சி.டி.டி. ரவி அங்கே வந்தபோது காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ஹிந்து தீவிரவாதிகள் அவர்களை சூழ்ந்து கொண்டு சரமாரியாக அடித்தனர். இந்த தாக்குதலில் சி.டி. தண்டபாணிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது காரும், மற்றொரு காரும் எரிக்கப்பட்டன.
''காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு முஸ்லிம் மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது வன்முறைக் கும்பலின் கோபம் அவர்கள் பக்கம் திரும்பியது. பல முஸ்லிம்கள் கத்திக்குத்திற்கு இலக்காகினர், அல்லது எரித்துக் கொல்லப்பட்டனர். ஹபிபுர் ரஹ்மான் என்ற 21 வயது வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றப்பட்டு அவர் எரிக்கப்பட்டார் (அவர் நடுரோட்டில் தீக்கிரையாக்கப்பட்ட காட்சி தினமணி இதழில் வெளியானது). இதை காவல்துறையினர் தடுத்து நிறுத்தாததினால் அவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். கோட்டைமேட்டில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அய்யூப்கான் மருத்துவமனைக்கு வந்தபோது கும்பல் அவரை விரட்டியது. வார்டு பாய் ஒருவர் அவரை ஒரு அறையில் மணிக்கணக்கில் பூட்டி வைத்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.''
தி வீக் இதழின் செய்தியாளர் விஜயலட்சுமி முஸ்லிம்களின் வீடுகள் எவ்வாறு தாக்கப்பட்டன என்பது குறித்து பின்வருமாறு வர்ணிக்கிறார்:
''வன்முறையாளர்கள் வீடுகளையும் விட்டு வைக்கவில்லை. பி1 காவல் நிலையத்திற்கு பின்புறம் அமைந்துள்ள கனி ராவுத்தர் வீதியில் உள்ள பெரும்பாலான வீடுகள் எரித்து சாம்பலாக்கப்பட்டன. பிளாஸ்டிக் மொத்த வியாபாரி ஒருவர் நம்மிடம் 'எனது மனைவி, ஆறு வயது, மூன்று வயது மற்றும் 6 மாதங்கள் கொண்ட எனது 3 குழந்தைகள் ஆகியோருடன் வீட்டில் இருந்தபோது ஒரு கும்பல் வந்து எனது வீட்டை தீக்கிரையாக்கியது' என்றார்.' எங்களுக்குச் சொந்தமான கிட்டங்கியும் வியாபாரப் பொருட்களுடன் சேர்த்து எரிக்கப்பட்ட. 'எல்லா திசைகளில் இருந்தும் புகை வந்து கொண்டிருந்தது. நான் பி1 காவல் நிலையத்திற்கு மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் கடைசிவரை வரவேயில்லை. இறுதியாக நான் என் குடும்பத்தினருடன் மேல் மாடிக்குச் சென்று பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் குதித்தோம். அப்போது எனது ஆறு மாத குழந்தை வாந்தி எடுத்துக் கொண்டிருந்தது. மற்ற குழந்தைகளுக்கு புகை மூட்டத்தினால் மூச்சுத் திணறியது' என்றார்.
''தனது ஆயுட்கால சேமிப்பான ரூபாய் அறுபதாயிரம் நெருப்பில் எரிந்ததை இன்னொரு வியாபாரி நம்மிடம் தெரிவித்தார். ஊனமுற்ற இவரது சகோதரரின் பிரத்யேக பயன்பாட்டிற்கான சைக்கிளையும் வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை. ஒரு குடும்பத்தலைவி அழுதுக் கொண்டே நம்மிடம் ''எனது கல்யாண பட்டுச்சேலை எரிந்துவிட்டது. உடுத்தியிருக்கும் துணிகளைத் தவிர வேறு எதுவும் எங்களிடம் இல்லை'' என்றார். அருகில் உள்ள பி1 காவல் நிலையத்திற்கு தகவல் தந்த போதினும் அவர்கள் தங்களுக்கு உதவ முன்வரவில்லை என்று பலரும் நம்மிடம் தெரிவித்தனர்''
பிரபல பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மேலவையின் முன்னாள் உறுப்பினருமான குல்திப் நய்யார் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழில் 'ஆ ஸ்ரீர்ஞ் ண்ய் ற்ட்ங் ரட்ங்ங்ப்' என்ற தலைப்பில் 1998 ஜனவரி 3 அன்று எழுதியுள்ள கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
''நாடாளுமன்றத்தின் கவனத்திலிருந்து தப்பும் அளவிற்கு கோவை கலவரங்கள் லேசானது அல்ல. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் காயமடைந்த, அநாதரவாக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கலாம். நான் அந்த நகரத்திற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடியிருப்புகள் எவ்வாறு திட்டமிட்டு அழிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டு கொளுத்தப்பட்டன என்பதை நேரில் கண்டேன். சுமார் 24 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சொத்துகள் இழப்பு 200 கோடியைத் தாண்டும்.
இதனை ஹிந்துலிமுஸ்லிம் கலவரம் என்று சொல்ல முடியாது. இது காவல் துறையின் கைங்கரியத்தினால் நடந்தது. இதன் காரணமாகத்தான் சமூக விரோதிகளுக்கு தைரியம் வந்தது. 'காவல்துறையினர், ஹிந்து முன்னணியினர் மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் பரஸ்பரம் கலந்து பேசி இக்கலவரத்தை திட்டமிட்டு நடத்தினர்' என்று கோவை மாவட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட அறிக்கை குற்றஞ்சாட்டுகின்றது. ராஜ்யசபையில் நடைபெற்ற விவாதங்கள் உண்மைகளை வெளியே கொண்டு வந்திருக்கலாம். ஆனால், இதனை தமிழகமே பார்த்துக் கொள்ளட்டும் என்று கருதும் அளவிற்கு சிறிய பிரச்சனை அல்ல.
12 வயது பாலகன் அபுபக்கர் சித்தீக் கொல்லப்பட்ட காட்சி, தனது அண்ணன் அய்யூப்கான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி கேட்டு அங்குச் சென்ற அவரது தம்பி முஹம்மது ஆரிப் கர்ணகொடூரமாக மருத்துவமனையில் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாம் மறக்க முடியாதவை.'
நமது வர்ணனையை விட தலைசிறந்த பத்திரிகையாளர் குல்திப் நய்யார் மற்றும் மதிப்புமிக்க பிரண்ட்லைன் மற்றும் தி வீக் செய்தியாளர்களின் வர்ணனை நடுநிலையாளர்களின் மனசாட்சியை உறுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இங்கு மேற்கோள் காட்டுகிறோம்.
கோவையில் நவம்பர்லிடிசம்பர் 1997ல் நடந்த அராஜகங்களை அரங்கேற்றிய கயவர்கள் யாரும் நீண்ட காலம் சிறையில் அடைக்கப்படவில்லை. இந்த வன்முறைகளுக்காக கைது செய்யப்பட்ட அனைவரும் தகுந்த சாட்சியங்கள் இல்லை என்று கூறி குறுகிய காலத்தில் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்த கலவரங்களை முன் நின்று நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது அல்லது ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியின் தலைவர்கள் மீது 120பி, 153 பிரிவுகள் நிரூபிக்கப்பட்டது என்று தீர்ப்பும் கூறப்படவில்லை.
செல்வராஜ் கொல்லப்பட்ட சூழலில் சதி ஆலோசனைகளை அளித்த ராமகோபாலன், அப்துன் நாசர் மஃதனியை போல் வருடக்கணக்கில் அல்ல, இந்த வன்முறைகளுக்காக ஒரு நாள் கூட சிறையில் தள்ளப்படவில்லை.
மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டிய காவல்துறையினர் எவ்வாறு கலவரத்தை தூண்டினார்கள், நடத்தினார்கள் வேடிக்கைப் பார்த்தார்கள் என்பதையெல்லாம் தரம் வாய்ந்த பத்திரிகையாளர்கள் வழியாக மேலே கண்டோம். இது சாதாரண முஸ்லிம்களின் உள்ளங்களை எவ்வாறு பாதித்திருக்கும் என்பதை நடுநிலையாளர்கள் உணர வேண்டும்.
எனது தலைமையில் கோவை முஸ்லிம்கள் டிசம்பர் 3ம் தேதி கோவையில் கொல்லப்பட்ட 19 முஸ்லிம்களில் 17 பேரின் உடல்களை கோவை அரசு மருத்துவமனையில் இருந்து பெற்று அதனை கோட்டைமேட்டிற்கு எடுத்து வந்து. இறுதி தொழுகையை நிறைவேற்றினோம். பிறகு அனைத்து உடல்களும் ஒன்று சேர ஊர்வலமாக கோவை சுண்ணாம்பு கால்வாய் அடக்கவிடத்தில் அடக்கப் பட்டது.
கோவை வரலாற்றில் இறுதி ஊர்வலங்களின்போது எப்போதும் கலவரம் ஏற்படுவது உண்டு. ஆனால், அமைதியாக அந்த ஊர்வலம் நடந்து முடிந்தது. அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மத்தியில் நான் உரையாற்றியபோது, ''நல்ல காவல்துறை அதிகாரிகள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள். நமக்கு நீதி கிடைக்கும். வன்முறைக்கு வன்முறை பதில் ஆகாது. அமைதி காப்போம். நீதி கண்டிப்பாக கிட்டும்'' என்று குறிப்பிட்டேன்.
அன்றைய கோவை மாவட்ட கலெக்டர் சந்தானமும், ஊர்வல பாதுகாப்பிற்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. ஆர்.வி.கோபாலனும் எனது உரையை பாராட்டினார்கள். அத்துடன் நின்று விட்டார்கள். நீதி கிடைக்கவில்லை.
வன்முறையில் கிஞ்சிற்றும் நம்பிக்கை இல்லாத, ஒரு வன்செயலுக்கு இன்னொரு வன்செயல் தீர்வாகாது என்ற கொள்கையுடைய தமுமுக இந்திய வரலாற்றில் முதன் முறையாக கோவை கலவரத்தை வீடியோ ஆவணமாகப் பதிவு செய்தது. தேசிய மனித உரிமை ஆணையம் மற்றும் தேசிய சிறுபான்மை ஆணையத்திடம் நாம் அதனை டெல்லியில் நேரடியாக சமர்ப்பித்து நீதி கேட்டோம். நீதி கிடைக்கவில்லை.
இந்த பின்னணியில் தான் தனது சகோதரனை இழந்த, தனது உறவினரை இழந்த, தனது சமுதாயத்தினரின் சொத்துக்கள் சூறையாடப்பட்டதைக் கண்ட கோவை சகோதரர்களில் ஒரு சிலர் அவர்களுக்கு நீதி என்று தெரிந்த அநீதியான செயலில் பிப்ரவரி 14 அன்று ஈடுபட்டனர். உணர்ச்சிப் பெருக்கில், நீதி இல்லை இந்த நாட்டில் என்ற கோபதாபத்தில் ஏற்பட்டது தான் குண்டு வெடிப்புகள்.
சுமார் ஒன்பதரை ஆண்டுகள் கழித்து ஜூலை இறுதி வாரம் கோவை கலவரத்தில் கைதான சகோதரர்களில் பெரும்பகுதியினரை சிறையில் சந்தித்தபோது அவர்களிடம் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதை என்னால் உணர முடிந்தது. தாங்கள் செய்தது பெரும் தவறு என்பதை உளப்பூர்வமாக அவர்கள் உணர்ந்துள்ளார்கள். தங்கள் நிலை மற்றவர்களுக்கு ஏற்படக் கூடாது என்பதில் அவர்கள் அக்கறை கொண்டவர்களாக இருப்பதை உணர முடிந்தது.
தி ஹிந்து நாளிதழ் தனது தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது போல் பிணை மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக ஒன்பதரை ஆண்டுகள் அவர்கள் சிறையில் வைக்கப்பட்டதே அவர்களுக்கு பெரும் தண்டனையாக அமைந்துள்ளது. இதற்கு மேலும் அவர்களுக்கு சிறைவாசம் அளிப்பது பெரும் அநீதியாகத் தான் அமையும்.
நீதிபதி உத்திராபதி நீதி வழுவாமல் தனது இறுதித் தீர்ப்பை வழங்க இறைவனை பிரார்த்தனை செய்வோம்
Subscribe to:
Posts (Atom)