
Wednesday, May 30, 2007
hyderabad bomb blast -fact finding commitee statemment news from aabusalih in tamil
ஹைதராபாத் பயங்கரம்இரத்த தானம் கொடுக்கச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய காவல்துறை உண்மை அறியும் குழுவின் 'திடுக்' அறிக்கை!
லிஅபுசாலிஹ்ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு குறித்தும், அப்பாவி மக்களின் மீது நிகழ்ந்த காவல்துறை யினரின் துப்பாக்கிச்சூடு குறித்தும் உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தியது.
உண்மை அறியும் குழு மே 20ஆம் தேதி ஹைதராபாத்தில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. அசம்பாவி தத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளிடம், நடந்தவைகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒவைஸி மருத்துவ மனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர்.
பள்ளி மீதான குண்டுவெடிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் வன்மையாகக் கண்டித்தது உண்மை அறியும் குழு. இரண்டுமே சமமான அளவு கண்டிக் கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் அது மேலும் தெரிவித்தது.
மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கை சிதைப்பதற்கும் நிகழ்த்தப்பட்டது என்றும், அதன்பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதான தாக்குதலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிப்பட் டுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டத் தைக் கூட நசுக்கும் காவல் துறையினரின் முதிர்ச்சியற்ற போக்கும் தெரிய வந்தது எனவும் உண்மை அறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு, பள்ளி வாசலிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிவாசலிலிருந்து வெளி யேறுபவர்களை நோக்கி காவல்துறை யினரின் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒர் இளைஞர் அவரது வீட்டுக்கு அருகி லேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு 17 வயது முஸ்லிம் இளைஞர், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரத்த தானம் செய்வதற்காக அஸ்ரா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை துப்பாக்கி குண்டு அவரை சாய்த்தது. துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ஒரு மனிதரைக் காப்பாற்ற தரையில் குனிந்து அவரைத் தூக்க முயன்ற இளைஞரின் உயிரையும் காவல்துறையின் குண்டு குடித்தது.
காவல்துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டனர். காவல் துறையினர் தங்களது செய்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் துள்ளனர்.
ஒரு பெட்ரோல் பங்க்கையும், ஒரு மதுக்கடையையும் ஒரு கும்பல் தாக்க வந்ததாகவும், அதனைத் தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினர். உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.
பெட்ரோல் பங்க்கின் மூன்று வழிகளும் ஏற்கனவே அடைக்கப் பட்டிருந்தது. ஒரேயொரு வழி மட்டும் தகுந்த கட்டுக்காவலுடன் திறந்திருந்தது. மதுக்கடையைத் தாக்க வந்திருந்தார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்று விட்டார்கள். 25 பேரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறை இருந்த அளவுக்கு மனித உயிர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சாலையிலிருந்து பள்ளிவாசல் திசையை நோக்கி நடத்தப்பட்டது கடும் கண்டனத் திற்குரியது. காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் பாரபட்சமான முறையில் இருந்ததாக நேரில் பார்த்த சாட்சியான முஹம்மத் கவுஸ் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த இடத்தைவிட்டு ஓடிய அச்சமடைந்த மக்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒருமணி நேரத்திற்குள் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொழுகைக்குச் சென்றிருந்த தங்களது உறவினர்களின் நிலை என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் வந்திருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கட்டுப்பாடு இழந்து பதறி சிதறி ஓடிவரும்போது, எவ்வித முன்னெச் சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ரப்பர் குண்டுகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உண்மையான குண்டுகளே பாதிக்கப்பட்ட வர்களின் உடலைத் துளைத் துள்ளது தெரிய வந்துள்ளது.
எந்த உயரதிகாரியின் அனுமதியின் பேரில் இவ்வாறு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையையும், துப்பாக்கிச் சூட்டில் எவ்வளவு பேர் பலியானவர்கள் என்ற உண்மை கணக் கையும் இதுவரை அரசு வெளியிட வில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்தான் அதிகம் என்ற உண்மை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணி யில் இந்தியாவிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய சதிகாரன் என முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒருவரையும் கூறுகிறது. ஆனால் குண்டுவெடிப்பில் காயடைந்தவர்களின் உடல்களிலிருந்து நகத்துகள், கதவு கைப்பிடி, மற்றும் பிரிஃப்கேஸின் கைப்பிடியின் துண்டு போன்றவை எடுக்கப்பட்டதாக அஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் பெட்ரோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ். டி.என்.டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இரண்டு இஸ்லாமிய அமைப்பு கள் சதியில் சம்பந்தப்பட்டிருக் கின்றன என்ற தகவலிலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை. இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.
குண்டுவெடிப்பும், அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் முஸ்லிம் களை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப் பட்டன என உண்மை அறியும் குழு கருதுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்தது. இதை ஆந்திர காவல்துறை பொருட்படுத்தாதது ஏன்? வழிப்பாட்டுத் தலங்கள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்? என்றும் உண்மை அறியும் குழு வினா விடுத்தது.
வழக்கமாக ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படும். ஆனால் அன்று பாதுகாப்பு பரிசோதனை நடத்ததப்படவேயில்லை என உண்மை அறியும் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) இடைநீக்கம் செய்யப் படவேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது.இந்த உண்மை அறியும் குழுவில்1) ஆந்திர மாநில குடியரசுக் கட்சித் தலைவர் போஜா தாரகம்.2) சிவில் உரிமை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் லத்திஃப் முஹம்மத் கான்.3) வரவரராவ்4) ஏ.பி.சி.எல்.ஸி.தலைவர் சுரேஷ் குமார்5) பிரபாகர் (பி.கே.எம்) 6) அபினோவா கே.என்.பி.எஸ்7) ராதா ஏ.பி.சி.எம்8) முஜாஹித் ஹாஷ்மி ஏ.எம்.ஏ 9) லியோ ஜஸ்டின்10) கிரியாதுவோ பிராஜபாதி ஆகிய சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றன
லிஅபுசாலிஹ்ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு குறித்தும், அப்பாவி மக்களின் மீது நிகழ்ந்த காவல்துறை யினரின் துப்பாக்கிச்சூடு குறித்தும் உண்மை அறியும் குழு ஆய்வு நடத்தியது.
உண்மை அறியும் குழு மே 20ஆம் தேதி ஹைதராபாத்தில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டது. அசம்பாவி தத்தை கண்ணால் பார்த்த சாட்சிகளிடம், நடந்தவைகள் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ஒவைஸி மருத்துவ மனையில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவரும் பாதிக்கப்பட்டோரை சந்தித்தனர்.
பள்ளி மீதான குண்டுவெடிப்பு மிகவும் கண்டிக்கத்தக்கது என்றதுடன், அதன் பிறகு நடைபெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டையும் வன்மையாகக் கண்டித்தது உண்மை அறியும் குழு. இரண்டுமே சமமான அளவு கண்டிக் கப்பட வேண்டிய குற்றங்கள் என்றும் அது மேலும் தெரிவித்தது.
மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு முஸ்லிம்களை அச்சுறுத்துவதற்கும், அவர்களது நம்பிக்கை சிதைப்பதற்கும் நிகழ்த்தப்பட்டது என்றும், அதன்பிறகு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் மீதான தாக்குதலிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பயங்கரவாதம் வெளிப்பட் டுள்ளது. சிறிய ஆர்ப்பாட்டத் தைக் கூட நசுக்கும் காவல் துறையினரின் முதிர்ச்சியற்ற போக்கும் தெரிய வந்தது எனவும் உண்மை அறியும் குழு கருத்து தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு, பள்ளி வாசலிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் நிகழ்ந்துள்ளது. பள்ளிவாசலிலிருந்து வெளி யேறுபவர்களை நோக்கி காவல்துறை யினரின் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஒர் இளைஞர் அவரது வீட்டுக்கு அருகி லேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மற்றொரு 17 வயது முஸ்லிம் இளைஞர், படுகாயம் அடைந்தவர் களுக்கு ரத்த தானம் செய்வதற்காக அஸ்ரா மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தபோது காவல்துறை துப்பாக்கி குண்டு அவரை சாய்த்தது. துப்பாக்கிச் சூட்டினால் காயமடைந்து தரையில் விழுந்து கிடந்த ஒரு மனிதரைக் காப்பாற்ற தரையில் குனிந்து அவரைத் தூக்க முயன்ற இளைஞரின் உயிரையும் காவல்துறையின் குண்டு குடித்தது.
காவல்துறையினர் பாரபட்சமான முறையில் நடந்து கொண்டனர். காவல் துறையினர் தங்களது செய்தியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வாதங்களை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித் துள்ளனர்.
ஒரு பெட்ரோல் பங்க்கையும், ஒரு மதுக்கடையையும் ஒரு கும்பல் தாக்க வந்ததாகவும், அதனைத் தவிர்க்கவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறினர். உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை.
பெட்ரோல் பங்க்கின் மூன்று வழிகளும் ஏற்கனவே அடைக்கப் பட்டிருந்தது. ஒரேயொரு வழி மட்டும் தகுந்த கட்டுக்காவலுடன் திறந்திருந்தது. மதுக்கடையைத் தாக்க வந்திருந்தார்கள் என்று கூறி துப்பாக்கிச்சூடு நடத்தி 9 பேரைக் கொன்று விட்டார்கள். 25 பேரை படுகாயப்படுத்தியிருக்கிறார்கள். சொத்துக்களைப் பாதுகாக்கும் அக்கறை இருந்த அளவுக்கு மனித உயிர்களின் மதிப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.
காவல்துறையினரின் துப்பாக்கிச்சூடு சாலையிலிருந்து பள்ளிவாசல் திசையை நோக்கி நடத்தப்பட்டது கடும் கண்டனத் திற்குரியது. காவல்துறையினரின் நடவடிக்கை மிகவும் பாரபட்சமான முறையில் இருந்ததாக நேரில் பார்த்த சாட்சியான முஹம்மத் கவுஸ் உண்மை அறியும் குழுவிடம் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடன் அந்த இடத்தைவிட்டு ஓடிய அச்சமடைந்த மக்களை மேலும் பயமுறுத்தும் நோக்கத்துடன் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்த ஒருமணி நேரத்திற்குள் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. தொழுகைக்குச் சென்றிருந்த தங்களது உறவினர்களின் நிலை என்ன ஆனதோ என்ற பதைபதைப்புடன் வந்திருந்த மக்கள் கூட்டத்தை நோக்கி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கட்டுப்பாடு இழந்து பதறி சிதறி ஓடிவரும்போது, எவ்வித முன்னெச் சரிக்கையும் விடுக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மக்கள் கூட்டத்தைக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர ரப்பர் குண்டுகளை பயன் படுத்தியிருக்க வேண்டும். ஆனால் உண்மையான குண்டுகளே பாதிக்கப்பட்ட வர்களின் உடலைத் துளைத் துள்ளது தெரிய வந்துள்ளது.
எந்த உயரதிகாரியின் அனுமதியின் பேரில் இவ்வாறு கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்தினார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. ஹைதராபாத் குண்டுவெடிப்பில் பலியானவர்கள் எத்தனை பேர் என்ற உண்மையையும், துப்பாக்கிச் சூட்டில் எவ்வளவு பேர் பலியானவர்கள் என்ற உண்மை கணக் கையும் இதுவரை அரசு வெளியிட வில்லை. குண்டுவெடிப்பில் பலியானவர்களை விட காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்தான் அதிகம் என்ற உண்மை விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளதாக உண்மை அறியும் குழு தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பின் பின்னணி யில் இந்தியாவிற்கு வெளியே இருந்து இயக்கப்படும் இரண்டு இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்கள் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. முக்கிய சதிகாரன் என முஸ்லிம் பெயரைக் கொண்ட ஒருவரையும் கூறுகிறது. ஆனால் குண்டுவெடிப்பில் காயடைந்தவர்களின் உடல்களிலிருந்து நகத்துகள், கதவு கைப்பிடி, மற்றும் பிரிஃப்கேஸின் கைப்பிடியின் துண்டு போன்றவை எடுக்கப்பட்டதாக அஸ்ரா மருத்துவமனையின் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குண்டு வெடிப்பில் பெட்ரோல் போன்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து ஆர்.டி.எக்ஸ். டி.என்.டி போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதும் இரண்டு இஸ்லாமிய அமைப்பு கள் சதியில் சம்பந்தப்பட்டிருக் கின்றன என்ற தகவலிலும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு எந்த ஆதாரமும் கிடைக்க வில்லை. இது பிரச்சினையை திசைதிருப்பும் முயற்சி என்றும் உண்மை அறியும் குழு தெரிவித்திருக்கிறது.
குண்டுவெடிப்பும், அதன்பிறகு நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் முஸ்லிம் களை அச்சுறுத்துவதற்காகவே நடத்தப் பட்டன என உண்மை அறியும் குழு கருதுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் மாநில அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். பல மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு எச்சரித்தது. இதை ஆந்திர காவல்துறை பொருட்படுத்தாதது ஏன்? வழிப்பாட்டுத் தலங்கள் மீதான பாதுகாப்பை பலப்படுத்தாது ஏன்? என்றும் உண்மை அறியும் குழு வினா விடுத்தது.
வழக்கமாக ஹைதராபாத்தின் மக்கா மஸ்ஜிதில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படும். ஆனால் அன்று பாதுகாப்பு பரிசோதனை நடத்ததப்படவேயில்லை என உண்மை அறியும் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மாநில காவல்துறைத் தலைவர் (டிஜிபி) இடைநீக்கம் செய்யப் படவேண்டும் என்றும் துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உண்மை அறியும் குழு அறிவித்துள்ளது.இந்த உண்மை அறியும் குழுவில்1) ஆந்திர மாநில குடியரசுக் கட்சித் தலைவர் போஜா தாரகம்.2) சிவில் உரிமை கண்காணிப்புக் குழுவின் செயலாளர் லத்திஃப் முஹம்மத் கான்.3) வரவரராவ்4) ஏ.பி.சி.எல்.ஸி.தலைவர் சுரேஷ் குமார்5) பிரபாகர் (பி.கே.எம்) 6) அபினோவா கே.என்.பி.எஸ்7) ராதா ஏ.பி.சி.எம்8) முஜாஹித் ஹாஷ்மி ஏ.எம்.ஏ 9) லியோ ஜஸ்டின்10) கிரியாதுவோ பிராஜபாதி ஆகிய சமூக நல ஆர்வலர்கள் பங்கேற்றன
Sunday, May 27, 2007
hyderabad bomb blast abusalih news in tamil
ஹைதராபாத் பயங்கரம்!தொடரும் முஸ்லிம்களுக்கெதிரான சதித்திட்டங்கள்...
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே
அபூசாலிஹ்
ஆந்திரத் தலைநகர் ஹைதரா பாத்தில் பழம்பெருமை வாய்ந்த மக்கா மஸ்ஜித் (18லி05லி07) வெள்ளிக்கிழமை அன்று ஜும்ஆ தொழுகையின் போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 16 பேர் உடல் சிதறி, ரத்த வெள்ளத்தில் பலியாயினர். 50க்கும் மேற்பட்டோர் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின் றனர்.
முஸ்லிம்களை குறிவைத்து திட்ட மிட்டு தாக்கப்படும் நிகழ்வுகள் தொடர்வது நாடெங்கும் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிவாசல் களின் மீது நிகழ்த்தப்படும் பயங்கரவாத தாக்குதல்கள் பெருகி வருகின்றன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வெளியேயும் முஸ்லிம்களின் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் சமீபகாலமாக தொடர்ந்து வருகிறது.
2006 ஏப்ரலில் வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லி ஜும்மா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது. பலர் காயமடைந்தனர்.
2006 செப்டம்பர் மாதம் மகாராஷ்ட்ரா மாநிலம் மாலேகான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது. 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு சென்று கொண்டிருந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்து பலர் மரணமடைந்தனர்.
ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் இரண்டு சக்தி வாய்ந்த குண்டுகளை வெடிக்காத நிலையில் கைப்பற்றி விட்டதாக ஆந்திர காவல்துறை தலைவர் பாஸித் தெரிவித்தார். குண்டு வெடிப்புகளால் அப்பாவி மக்கள் பலியாகி வருவது மக்க ளிடையே அவநம்பிக் கையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வை சீர்குலைக்கும் நோக்கில் இது நடத்தப்பட்டிருப்பதாகவும் சமூக நல ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.மிகப்பெரிய சதிச்செயல்களான டெல்லி ஜும்மா மஸ்ஜித் குண்டு வெடிப்புக்கு ஊழியர்களிடையே ஏற்பட்ட தகராறு தான் காரணம் என காவல்துறை கூறியது. அதில் ஒரு கும்பல் இந்தச் சதிச்செயலை செய்தது என காவல்துறை விரிவுரை எழுதியது.
பள்ளிவாசல் குண்டு வெடிப்பு சிமி இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என மகாராஷ்ட்ர காவல்துறை தெரிவித்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பில் ஜெய்ஷிலிமுஹம்மத், லஷ்கர்லிஇலிதொய்பா, (முட்டை லாப்பா, கொத்துப் பரோட்டா என்று சொல்லாதது மட்டும் தான் பாக்கி) போன்ற இயக்கங்கள் இன்னும் பல இயக்கங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என காவல்துறை தரப்பிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையே ஈயடிச்சான் காப்பியாக சன் டிவி (சங் டிவி?) உள்ளிட்ட ஊடகங்களும் செய்தி ஏடுகளும் பரபரப்பை ஏற்படுத்தின.அதற்கு காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு கூறும் காரணம் பள்ளிவாசல்களில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்துவதின் மூலம் முஸ்லிம்களின் ஆத்திரத்தை ஹிந்துக் களின் மீது திருப்பி கலவரங்களை ஏற்படுத்துவதற்காக நிகழ்ந்த சதி என்று பக்கம் பக்கமாய் காரணம் கூறுகிறார்கள்.
குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு, சவூதியிலிருந்து அதிகமான தொலைபேசி அழைப்புகள் வந்தன என முதலில் அந்திர மாநில புலனாய்வு அமைப்புகள் அறிவித்தன.
குண்டு வெடிப்பு சதிகாரனுக்கு சவூதி அரேபியாவிலிருந்து கட்டளையிடப் பட்டது என்ற செய்திகள் ஊடகங்களில் மதியம் செய்திகளாய் பரப்பப்பட்டது.அதன்பிறகு இரவு துபாய்யிலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகள் பரப்பப்பட்டது.
அதன்பிறகு இரவு துபாய் இலிருந்து தொலைபேசி அழைப்புகள் வந்ததாக செய்திகளை அதே தொலைக்காட்சி சேனல்கள் வாசித்தன. வெடித்த குண்டு நாட்டு வெடிகுண்டு வகையைச் சேர்ந்ததாக இருக்கலாம் என உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டில் கூறுகிறார்.
ஆர்.டி.எக்ஸ்லிவகையைச் சேர்ந்ததாக ஆந்திர காவல்துறை கூறுகிறது.வெடித்தது எதுவாக இருந்தாலும் பலியானவர்கள் ஏதுமறியாத அப்பாவிகள். தங்களின் உயிர் எதற்காக பறிக்கப் படுகிறது, யாரால் இது நடத்தப்பட்டது, ஏன் இது நமக்கு நிகழ்ந்தது என்பதை அறியாத நிலையிலே ரத்த வெள்ளத்தில் மாண்டு போனார்கள்.
இந்த சதிக்கு சஹீத் பிலால் என்னும் நபர் பின்னணியில் இருந்ததாக தகவல்கள் புலனாய்வுத் துறையினரால் வெளியிடப் படுகின்றன.
பர்தா போட்ட பெண், குண்டு வெடிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன் செல்போனுடன் அலைந்தாக நேரில் பார்த்த ஒரு சாட்சி இருப்பதாக (21லி05லி07) நாளிதழ் ஒன்று குறிப்பிடுகிறது.
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டு வெடிப்பு மற்றும் அதற்கு முன்பு நடைபெற்ற குண்டு வெடிப்புகள் குறித்து காவல்துறை கூறும்போது ஹிந்துலிமுஸ்லிம் மத மோதல்களை ஏற்படுத்துவதற்காக இந்தச் சதிகள் முஸ்லிம் பயங்கரவாதி களால் நிகழ்த்தப்பட்டதாக கூறுகின்றன.
இந்த ஒரே ஒரு புள்ளியைச் சுற்றி 18 ஆம் தேதியிலிருந்து புலனாய்வு சுற்றி சுற்றி வருகின்றது. புலனாய்வுத்துறையின் இந்தப் பிரச்சாரம் குறித்து நடுநிலை ஊடகவியலாளர்களும் சமூக நல ஆர்வலர்களும், முஸ்லிம் உரிமை அமைப்புகளும் பெரும் வியப்பும்லி விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
பள்ளிவாசல்களில் குண்டு வெடித்து விட்டது. வைத்தது ஹிந்துக்கள் தான் என ஆத்திரம் கொண்டு முஸ்லிம்கள் கலவரம் விளைவிப்பார்கள் என மனதிலே திட்டம் போட்டு சில பாகிஸ்தான் தீவிரவாதிகள் இதை செயல்படுத்தி யிருக்கிறார்கள் என புலனாய்வுத்துறை யினர் கிட்டத்தட்ட முடிவெடுத்து விட்டதாகவே தெரிகிறது.
இங்கு தான் நடுநிலையாளர்கள் கடந்த கால சம்பவம் ஒன்றை நினைவு படுத்துகிறார்கள்.
1992 டிசம்பர் 6 அன்று மனித குலத்தையே வெட்கித் தலைகுனிய வைக்கும் வண்ணம் பாபரி மஸ்ஜித் தகர்த்து தரைமட்டமாக்கப்பட்டது.
இதை நிகழ்த்தியது சங்லிபரிவார் என்ற ஹிந்துத்துவ வெறியர்கள் தான். ரத்தத்தை கொதிக்கச் செய்யும் இந்த கொடிய செயல் நடந்த போது முஸ்லிம்கள் வேதனையில் துடித்தார்கள். ஆவேசத்தில் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு சிறு தீங்கும் நிகழா வண்ணம் பார்த்துக் கொண்டார்கள்.
பாபரி பள்ளிவாசலை தகர்க்க விட்டு வேடிக்கை பார்த்த நரசிம்ம ராவ் தலைமையிலான இந்திய அரசை எதிர்த்து அவர்களது கோபம் புறப்பட்டதே தவிர சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படவில்லை.ஆர்ப்பாட்டங்களும் கடையடைப்புகளும் மத்திய அரசை எதிர்த்து நடத்தப்பட்டன.
உ.பியின் பாஜக அரசை எதிர்த்துப் கூட போராட்டம் நடத்தப்படவில்லை. காரணம் உ.பி பாஜக அரசு அப்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
மும்பையில் (பம்பாய்) சிவசேனா வினரால் வன்முறைகள் கட்ட விழ்த்து விடப்பட்டன. மும்மை முஸ்லிம்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாயினர். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதை போன்ற இந்நிகழ்வை எதிர்த்துக் கூட ஆவேசம் கொண்டு அகில இந்திய அளவில் முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது எந்த தாக்கு தலையும் தொடுக்காது கண்ணியம் காத்தனர்.
வேதனையின் விளிம்பில் இருந்தபோது கூட ஆவேசத்தின் உச்சத்தில் இருந்தபோது கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களை நேசித்தனர். இதில் முஸ்லிம்களை ஆத்திரம் கொள்ள செய்வதற்காக பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள் முஸ்லிம் பயங்கரவாத இயக்கங் களால் நடத்தப் பட்டது என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நடுநிலையாளர்கள் கூறுகின்றனர்.
சமாதான சகவாழ்வை நேசிக்கும் இந்திய முஸ்லிம்களை உசுப்பி விட்டு மதக்கலவரங்களை நடத்தி விடலாம் என்று எந்த தீய சக்திகள் நினைத்தாலும் அது நிறைவேறாது என்பது ஏற்கெனவே (1992ல்) நிரூபிக்கப்பட்ட ஒன்று.
இது புரியாமல் எந்த மக்கு தீவிரவாதி இருக்கிறான் என்பது தெரியவில்லை.
புலனாய்வுப் பிரிவினரின் கண்ணோட்டத்தை உடைப்பதைப் போன்றே ஹைதராபாத் பள்ளி வாசல் குண்டு வெடிப்பு நிகழ்ந்த பிறகு ஒரு முஸ்லிம் எந்த ஹிந்துவையும் குதறியதாகவோ, குறைந்த பட்சம் கிள்ளிவிட்டதாக வோக் கூட தகவல்கள் இல்லை. மாலேகான் பள்ளிவாசலில் 50க்கும் மேற்பட்டோர் பலியான குண்டு வெடிப்பிலும் கூட முஸ்லிம்கள் ஹிந்துக்களின் மீது பாயவில்லை. மதக் கலவரங்கள் ஏற்படவில்லை. ஆனாலும் புலனாய்வுத்துறையினர் மட்டும் ஒரே 'கதையை' அதே கற்பிதத்தை மீண்டும் மீண்டும் கூறி பதட்டத்தை ஏற்படுத்துவதோடு அப்பாவி முஸ்லிம்களை வளைத் துப் பிடிக்கும் சதி இருக்கக்கூடுமோ என சமூகவியலாளர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
குண்டுசட்டியில் குதிரை ஓட்டும் இத்தகைய போக்குகளை புலனாய் வுத் துறையினர் கைவிட வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கோரிக்கை.
புலனாய்வு பல கோணங்களில் இருக்க வேண்டுமேயொழிய ஒரே செக்கு மாட்டுச் சிந்தனையை, முஸ்லிம்களை மட்டுமே குறைகூறி பழிபோடும் போக்கை கைவிட வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
பள்ளிவாசல்களில் நடக்கும் குண்டு வெடிப்புகள் தொடர்பாக தீவிரவாத ஹிந்துத்துவ இயக்கம் ஒன்றின் மீது சந்தேகம் எழுப்பப் பட்டது.
மகராஷ்ட்ராவில் பார்பபானியில் உள்ள முஹம்மதி மஸ்ஜித் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிலர் காயம் அடைந்தனர்.
நான்டெட் என்ற இடத்தில் பஜ்ரங்தள் என்ற ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கத்தின் வெடி குண்டு தொழிற்சாலையில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் போது நால்வர் பலியாயினர். இதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த ஆண்டும் நடந்தது.
பூனாவில் உள்ள மஸ்ஜிதிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.
ஜால்னாவில் உள்ள மஸ்ஜிதி லும் குண்டுவெடிப்பு நடந்தது.
50லிக்கும் மேற்பட்டோரை பலிகொண்ட மாலேகான் குண்டு வெடிப்பிலும் பஜ்ரங்தள் இயக்கத் தினரின் கைவரிசை இருந்தாக உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். ஆனால் இந்திய அளவிலான ஊடகங்கள் எல்லாம் சிமி, சிமி என்றே அலறினநான்டெட்டில் பஜ்ரங்கதள் வெடிகுண்டு தொழிற்சாலையில் ஒட்டுத்தாடிகளும் தொப்பிகளும் கண்டு பிடிக்கப்பட்டன. அவ்வாறே மாலேகானில் பள்ளிவாசல் குண்டு வெடிப்புக்குப் பிறகு பலியான உடல்களுக்கு நடுவே தாடியும் தொப்பியும் வைத்திருந்த உடலை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது தாடி கையோடு வந்துவிட்டதாக பிணத்தை ஆம்புலன்ஸில் ஏற்றிய உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
ஆனால் அவ்வாறு எந்த ஒரு பிணமும் இல்லை இல்லை என மகராஷ்டிரா மாநில காவல்துறையினர் மறுத்திருக்கின்றனர். அதாவது எந்த அசம்பாவிதமும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் விசாரணையின் போக்கு அமைய வேண்டும் என்று எழுதப்படாத ஒரு விதியை வைத்துக் கொண்டே செயல் படுவதாகத் தெரிகிறது.
ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் அவ்வாறு ஆகிவிடக்கூடாதே என்பது தான் நாட்டு மக்களின் கவலை. புலனாய்வுத் துறையினர் குறிப்பிடும் எந்த இயக்கத்தினர் மீதும் விசாரணை நடத்தட்டும். ஆனால் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வகையில் அது அமைய வேண்டும்.
மாலேகான் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு நிகழ்ந்தபோது ஹிந்துத்துவ பயங்கரவாத இயக்கமான பஜ்ரங்தள் இயக்கத்தினர் மீது ஏன் விசாரணை நடத்தவில்லை என உள்ளூர் மக்களும் நடுநிலையாளர்களும் காவல்துறை யினரிடம் வினா எழுப்பிய போது அவ்வாறு நடத்தினால் பதட்டம் ஏற்படும் நிலைமை விபரீதம் ஆகும் என மகராஷ்டிரா மாநில காவல்துறை உயர் அதிகாரி பஸ்ரிச்சா அப்போது தெரிவித்தார்.( இது எப்படி இருக்கு)
குறிப்பிட்ட ஹிந்துத்துவ இயக்கத்தினர் தான் இதை நிகழ்த்தியிருப்பார்கள் என இங்கு வேண்டுமென்றே யாரும் கூறவில்லை, நாடெங்கும் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்கக் கோரி தமுமுக உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. ஆனால் அவ்வாறு இருக்கலாம் என்ற சாத்தியக் கூறுகளை மறுக்க முடியாது. பாப்பா கையில் இருக்கும் பலூன் வெடித்தால் கூட பாய்ந்து சென்று முஸ்லிம் இளைஞர்களை இம்சை செய்யும் காவல்துறை மேற்குறிப்பிட்ட இயக்கங்களை விசாரணை செய்வதற்கு தயங்குவது ஏன்?
தப்லீக் ஜமாத்தார்களைக் கொல்ல நடந்த சதியா?ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்று மணிநேரம் கழித்து சக்தி வாயந்த இரண்டு குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. அந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில் ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பள்ளிவாசல் வளாகத்தில் நுழைகிறார். ஆயிரக்கணக்கான மக்கள் அவரை சூழ்ந்து கொண்டனார்.
குண்டு வெடித்த 100 மீட்டருக்கு இடைவெளியில் இந்த சக்திவாய்ந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. குண்டு வெடிப்புகள் நடைபெற்ற பிறகு மக்கா மஸ்ஜிதில் அஸர், மக்ரிப், இஷா தொழுகைகள் வழக்கம்போல் நடந்தன. வழக்கம்போல் சிறிதுகூட கூட்டம் குறையாமல் மக்கள் தொழுகைக்காக குழுமினர். தப்லீக் ஜமாத் என்ற அமைப்பு உலகளாவிய மாநாடு ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது. சிறிது தூரம் உள்ள மிமித பள்ளியில் நடைபெற இருந்தது. லட்சக்கணக்கான தப்லீக் ஜமாத்தினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
தப்லீக் ஜமாத் இஜ்திமா நடைபெறும்போது குண்டுகள் வெடிப்பது இது மூன்றாவது முறையாகும். கடந்த 2000ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி குண்டூரில் தப்லீக் இஜ்திமா நடக்கவிருந்தது. இதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 6 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தீன்தார் அன்ஜுமன் இயக்கத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். தப்லீக் இஜ்திமாவின் சேவையைக் கண்டு எரிச்சலுற்ற வி.எச்.பி.யினர் மிரட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர். தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டு வருவது ஹிந்து இயக்கத்தின் வெறித்தனத்திற்கு சான்றாக விளங்குகிறது.
குண்டுவெடிப்பைக் கண்டித்து போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது காவல்துறையினர் வெறிச்செயல்.
ஹைதராபாத் பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை 18லி05லி07 அன்று ஜும்ஆ தொழுகையின்போது குண்டு வெடித்ததைக் கண்டு குமுறி எழுந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உண்மை குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கக் கோரி போராட்டங்கள் நடத்தினர். 10,000 மக்கள் ஒரே நேரத்தில் தொழக்கூடிய அந்த மஸ்ஜிதில் நிகழ்ந்த குண்டுவெடிப்பினால் மக்களிடையே பதட்டம் ஏற்பட்டது உணர்ச்சி வசப்பட்ட மக்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தத் தொடங்கினர். குண்டுவெடிப்பையும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் ஒரு தெலுங்கு தனியார் தொலைக்காட்சி படம் பிடித்துக் கொண்டிருந்தது.
ஆந்திர மாநில காவல்துறைத் தலைவர் பாசிச சம்பவ இடத்துக்கு விரைந்தார். மஜ்லீúஸ இத்திஹாதுல் முஸ்லிமீன் அமைப்பின் தலைவர் அசதுத்தீன் ஒவைஸி முழுகடையடைப்புக்கு உத்தரவிட்டார்.
இறந்தவர்களின் போஸ்ட் மார்ட்டம் (பிரேத பரிசோதனை அறிக்கை) அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. இறந்தவர்கள் அனைவரும் நங்ப்ச் ப்ர்ஹக்ண்ய்ஞ் தண்ச்ச்ப்ங் (நகத) என்னும் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளனர். இறந்தவர் களின் உடல்களில் குண்டுகள் துளைத்து வெளியேறியுள்ளன என பிரேத பரிசோதனை அறிக்கையை வெளியிட்ட உஸ்மானியா மருத்துவமனையின் தடய வியல் துறைத்தலைவர் எம்.நாராயணரெட்டி குறிப்பிடுகிறார்.
காவல்துறையினரால் கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் அஹ்மத்(35) காலில் தோட்டா துளைத்த காயம் உள்ளது. இவர் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த ஒருவரை, தூக்கிக் கொண்டு செல்லும் போது இரக்கமே இல்லாமல் காவல்துறை யினர் காலில் சுட்டதால் அளவுக்கதிகமாக ரத்தம் வெளியேறி இறந்திருக்கிறார். இவர் உடனடியாக கொண்டு வரப்பட்டால் உயிர் பிழைத்திருப்பார் என பேராசிரியர் டாக்டர். நாராயணரெட்டி தெரிவித்தார்.
பழைய ஹைதராபாத்தின் மொகல்புரா பகுதியைச் சேர்ந்தவர் இஃப்திகாருத்தீன். இவர் தொழுகையை முடித்து விட்டு தனது குழந்தைகளுக்கு பிஸ்கட் வாங்குவதற்காக சென்ற போது காவல் துறையினரால் சுடப்பட்டு இறந்திருக்கிறார். நாங்கள் கூட்டத்தை கலைப்பதற்காக ரப்பர் குண்டுகளைத் தான் பயன்படுத்தினோம் என காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் உயிரைப் பறித்தது ரப்பர் குண்டுகள் அல்ல என தெரிவிக்கிறார் இஃப்தி காருத்தீனின் மாமா ரியாஸ் ரவூஃப்.
முஹம்மத் ஜஹிருத்தீன்(27) இவர் நியூ அஹாபுரா பகுதியைச் சேர்ந்தவர். ஜஹீருத்தினின் இடுப்பெலும்பிலிருந்து டாக்டர் குண்டை வெளியிலெடுத்ததை பார்த்த ஜஹீருத்தினின் சகோதரர் குறிப்பிடுகிறார். எவ்விதமான முன்னறிவிப்பும் இன்றி சுடப்பட்ட இந்தச் சம்பவம் கண்டிக்கத் தக்கது என்கிறார். ஜஹீருத்தீன் சகோதரர் முஷீர் இவர் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்ததைக் கேள்விப் பட்டு சம்பவ இடத்துக்கு வந்தவர்.
மிஸ்ரி கஞ்சை சேர்ந்த முஹம்மத் அக்தர் முஹியுத்தீன் (15) இவரது வயிற்றில் குண்டு பாய்ந்தது. முஹம்மத் சலிம்கான் (35) இவர் கலாபட்டாரைச் சேர்ந்தவர், சையத் ஆதில் அலி(17) இவர் ஃபலருமா பகுதியைச் சேர்ந்தவர் இவர்கள் இருவருக்கும் மார்பின் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளது. இவை அனைத்துமே முகல்புரா காவல்துறை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்தது. மேலும் காவல்துறையினரின் கண் மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் படுகாய மடைந்தவர்கள் இவர்கள் அனைவருக்கும் நெஞ்சுக்கு மேல் குறி வைத்து காவல்துறை யினரால் குறிவைத்து சுடப்பட்டவர்கள் இவர்கள் ஓவைஸி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பு 1.30க்கு நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து மக்களின் கோபம் வெடித்தது. சரியாக 2.20 க்கு பொதுமக்களை நோக்கி காவல்துறையினர் 12 ரவுண்டு சுட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பாட்டில் முதல் அமைச்சர் ராஜசேகர ரெட்டி இருவரும் மக்கா மஸ்ஜிதிற்கு சனிக்கிழமை வந்தபோது ஆத்திரம் கொண்ட மக்கள் அவர்களைச் சூழ்ந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
வெறித்தனமாக சுட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குண்டு வெடிப்புக்கும் காவல்துறையினரின் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூட்டுக்கும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்தனர். காவல்துறையினரின் அத்துமீறலுக்காக முதல்வர் ராஜசேகர ரெட்டி மன்னிப்புக் கேட்டார். குண்டு வெடிப்பில் 16 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூட்டிலே ஏழு பேர் பலியானார்கள். இந்த சமூகம் சந்திக்கும் கொடுமைகளுக்கு விடிவே கிடையாதே
Saturday, May 26, 2007
காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்
காந்தியைக் கொல்ல பிராமணர்கள் சூழ்ச்சி செய்தனர்காந்தியின் கொள்ளுப்பேரன் தகவல்
காந்தியடிகளைப் படுகொலை செய்தவன் நாதுராம் கோட்சே என்ற ஹிந்துத்துவ வெறியன் என்பதும், ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியை உடைய அந்த ஆசாமி, மகாராஷ்ட் டிரவின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும் வரலாற்று உண்மை.
காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது மட்டுமே உண்மை என்பதுபோலவும் கொலையாளிகள் குறித்து எந்தவித விரிவான தகவல்களும் விவரிக்கப்படாத நிலையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காந்தியின் படுகொலையில் சங்பரிவார் அமைப்பின் சதியும், பிராமணர்களின் கைவரிசையும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாய் சரித்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பின்பும்கூட இன்றுவரை முஸ்லிம்களை குற்றப்பரம்பரை யைப் போல அவர்கள் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை தோலு ரித்துக் காட்டும் வகையில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உலுக்கும் உண்மைகளை வெளியிட்டார்.
தமது ''கங்ற்'ள் ஃண்ப்ப் ஏஹய்க்ட்ண்'' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், ''காந்தியடிகளை கொலை செய்ய நடந்த பல்வேறு சம்பவங்களில் பிராமணர்களின் சதி இருந்துள்ளது'' என்று குறிப்பிட்ட துஷார் காந்தி, ''பிராமண சமூகம் இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்ற விரும்புகின்றனர்'' என்றும் கூறினார்.
'காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் தேசப் பிரிவினைக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை காந்திதான் வற்புறுத்தி கொடுக்க வைத்தார்; அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்' என வரலாற்றை திரித்துக்கூறும் சங்பரிவார் இயக்கத்தின் செயலை துஷார் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.
பிராமண சமூகம் இந்தியாவை ஒரு ஹிந்துத்துவ தேசமாக மாற்றும் முயற்சியிலே காந்தியை கொலை செய்ய நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் அவர்கள் செயல்பட்டனர் என அழுத்தமாக தமது நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்
காந்தியடிகளைப் படுகொலை செய்தவன் நாதுராம் கோட்சே என்ற ஹிந்துத்துவ வெறியன் என்பதும், ஆர்எஸ்எஸ் இயக்கப் பின்னணியை உடைய அந்த ஆசாமி, மகாராஷ்ட் டிரவின் சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதும் வரலாற்று உண்மை.
காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது மட்டுமே உண்மை என்பதுபோலவும் கொலையாளிகள் குறித்து எந்தவித விரிவான தகவல்களும் விவரிக்கப்படாத நிலையே இன்றுவரை தொடர்ந்து வருகிறது. காந்தியின் படுகொலையில் சங்பரிவார் அமைப்பின் சதியும், பிராமணர்களின் கைவரிசையும் நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகளாய் சரித்திரத்தில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பின்பும்கூட இன்றுவரை முஸ்லிம்களை குற்றப்பரம்பரை யைப் போல அவர்கள் சித்தரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆதிக்க சக்திகளின் ஆணவத்தை தோலு ரித்துக் காட்டும் வகையில் காந்தியடிகளின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி உலுக்கும் உண்மைகளை வெளியிட்டார்.
தமது ''கங்ற்'ள் ஃண்ப்ப் ஏஹய்க்ட்ண்'' என்ற நூலை வெளியிட்டு உரையாற்றுகையில், ''காந்தியடிகளை கொலை செய்ய நடந்த பல்வேறு சம்பவங்களில் பிராமணர்களின் சதி இருந்துள்ளது'' என்று குறிப்பிட்ட துஷார் காந்தி, ''பிராமண சமூகம் இந்தியாவை ஹிந்துத்துவா நாடாக மாற்ற விரும்புகின்றனர்'' என்றும் கூறினார்.
'காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு அவர் தேசப் பிரிவினைக்கு காரணமாக இருந்தார். பாகிஸ்தானுக்கு இந்திய அரசு கொடுக்க வேண்டிய 55 கோடி ரூபாயை காந்திதான் வற்புறுத்தி கொடுக்க வைத்தார்; அதனால்தான் அவர் கொலை செய்யப்பட்டார்' என வரலாற்றை திரித்துக்கூறும் சங்பரிவார் இயக்கத்தின் செயலை துஷார் காந்தி வன்மையாகக் கண்டித்தார்.
பிராமண சமூகம் இந்தியாவை ஒரு ஹிந்துத்துவ தேசமாக மாற்றும் முயற்சியிலே காந்தியை கொலை செய்ய நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியில் அவர்கள் செயல்பட்டனர் என அழுத்தமாக தமது நூல் வெளியீட்டு விழாவில் கூறினார்
Sunday, May 20, 2007
Subscribe to:
Posts (Atom)


